Select a cover image
Searching for images...
No images found. Try again later.
Saving cover image...
Share:
Reviews
user_20971
Like reading
user_20970
★ 4/5தான் கொண்ட அன்பு விலங்காக மாறி வாழ்வில் முன்னேற துடிப்பவனுக்குத் தடையாக மாறுகிறது என்பதை அறிந்து கொண்ட பின் அவர்களிடம் இருந்து விலக எடுக்கும் முடிவுக்கு அந்த அன்பே ஆதாரமாகிறது.
எப்பொழுதும் காயப்படுத்தவும் கிடைத்த நேரத்தில் அவமானத்தைத் தரவும் எவராவது ஒருவர் இருந்து கொண்டே தான் இருப்பர் அதிலும் அவர் தன் மனத்திற்கு நெருக்கமானவர்களின் உறவாக இருக்கும் பொழுது மனது மேலும் மேலும் துவண்டு கொண்டே தான் போகும் அதிலிருந்து மீளும் வழியைத் தெரிந்து கொள்ளும் போது எத்தகைய துன்பமும் அருகில் வராது.
பொருளாதார ரீதியாக அடிமட்டத்தில் இருக்கும் சத்யாவை மகள் விரும்பி போராடி திருமணம் செய்து கொண்டதால் அவளை விட்டு விலகி இருக்கின்றனர் மதுமதியின் பெற்றோர்.
காதலித்தவனுடன் திருமணப் பந்தத்தில் நுழைந்த மதுமதி புதிய சூழலை எதிர் கொள்ளத் தவித்துப் போனாலும் சத்யாவின் அன்பு அவளை அனைத்தையும் தாங்க செய்கிறது.
தன் மாமனான சத்யாவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட திலகாவிற்கு அது நடக்காமல் போனதால் மதுமதியை அவனிடம் இருந்து பிரிக்கச் செய்த சூழ்ச்சியில் வெற்றியும் பெறுகிறாள்.
தினசரி வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்ற தன் கனவுகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு சத்யா செய்யும் வேலையில் மதுமதிக்கு விருப்பமில்லாமல் போகிறது தனக்காக அவன் கனவை பொசுக்கிக் கொள்கிறானே என்று.முதலில் தனது கனவுகளைக் காதலுக்காக விட்டவனுள் வெறுமை சூழ அதன் மூலம் வெளிவரும் வார்த்தைகள் தம்பதிகளுக்குள் பிரிவை உண்டாக்கி விடுகிறது.
வயிற்றில் குழந்தையுடன் கணவனைப் பிரிந்த மதுமதி மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவனைச் சந்திக்கிறாள்.இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் தன்னை மிகப் பெரிய தொழிலதிபராக மாற்றிக் கொண்ட சத்யாவிற்கு இனிய அதிர்ச்சி தன் வாரிசாக ஆனந்த் எதிரில் இருப்பது.
ஒருவர் மீது மற்றொருவர் கொண்ட அன்பே அவர்களுக்குள் பிரிவை உண்டாக்கினாலும் அதை நீட்டிக்க விரும்பாமல் மதுமதியின் தாத்தா மேற்கொண்ட முயற்சியால் மீண்டும் இருவரும் இணைகின்றனர்.
அன்பு மட்டுமே காலம் கடந்தும் வலிமையாக மனிதர்களின் மனங்களில் தவழும்.
Shelves
விஜிபிரபு
book