1801

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

1801

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.24/5 · 25 ratings

புலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன் போன்றோர் தொடங்கி வைத்த பிரிட்டிஷ் எதிர்ப்பை, போராட்டமாக மாற்றியவர்கள் மருது பாண்டியர். தென் இந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி, மருது பாண்டியர் நடத்திய போராட்டமே, முதல் இந்தியச் சுதந்திரப் போராட்டமாகும். தூந்தாஜி வாக், ஊமைத்துரை, தீரன் சின்னமலை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர் உள்ளிட்டோர் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். முதல் இந்தியச் சுதந்திரப் போரின் எழுச…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_20774

★ 5/5
This is a must read for anyone who's trying to understand the South India as it was during the late 18th century. The author has researched a lot of documentation and has provided us with a story version of real events. Do not miss it if you are a history buff!

user_20773

★ 4/5
தென்னிந்திய வீர புரட்சியின் உயிர் அழியாத சாட்சியம். இந்த நூல், மருது சகோதரர்களின் வீரத்தையும், அவர்களை வஞ்சித்து வீழ்த்திய வரலாற்றையும் நமக்குக் கண்முன் காட்சிப்படுத்துகிறது. புதின வடிவில் தொகுக்கப்பட்ட இந்த வரலாறு, வாசிப்பவரை நேரடியாக அந்தக் காலச் சூழ்நிலையில் கொண்டு செல்லும் திறன் கொண்டது. ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து, புலனாகிய நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டிருப்பது நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் உணரமுடிகிறது. இந்த நூல் மூலம், இந்திய விடுதலைக்கான முதல் முழக்கம் தென்னிந்திய மண்ணிலிருந்து எதிற்கும் ஈடாக எழுந்ததை நமக்கு நினைவுபடுத்துகிறார் ராஜேந்திரன். மருது சகோதரர்கள் மட்டுமல்ல, வீரத்தால் தீண்டிய தமிழக வரலாற்றை உணர விரும்புவோருக்கான வரலாற்றுப் புதினம் இது.

user_20772

★ 3/5
Good one.. could have been better

user_20771

★ 4/5
எல்லாருக்கும் பெயரளவில் தெரிந்து முழுதாய் ஆராயப்படாத விடுதலை வீரர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே எல்லா மாநிலத்தவரிடமும் இருக்கும் . அப்படி தமிழர்கள் பெயரளவில் மிகவும் பழக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர்கள் தான் மருது சகோதரர்கள் . மருது சகோதரர்களின் ஆங்கிலேய எதிர்ப்பின் ஆரம்பம் , அதில் ஈடுபட்டவர்கள் , அதன் காரணம் , அந்த எதிர்ப்பின் முடிவு என்று பெரிதாய் அறிந்திராத தென்னாட்டின் ஆங்கிலேய எதிர்ப்பை பதிவு செய்யும் புத்தகம் தான் இந்த 1801 . இந்தியாவில் அதிகம் அறியப்படாத முதல் (உண்மையான ) சுதந்திர எதிர்ப்பை கதைக்களமாக எடுத்து அதை வரலாற்று பாடமாக சொல்லாமல் , விறுவிறுப்பான கதையாக வாசிப்பவரிடம் கொண்டு சேர்த்ததில் எழுத்தாளர் தனி கவனம் பெறுகிறார் . சில இடங்களில் தொடர்பு விட்ட மாதிரியும் சில கதாபாத்திரங்களை ஒரேயடியாக மறந்து போல் தெரிந்தாலும் முடிவில் அனைத்தையும் சரி செய்து ஆரம்பித்த கதையை அருமையாக முடித்துள்ளார் . கதையின் முடிவில் இந்த புத்தகத்திற்கு சமபந்தமுள்ள வரலாற்று இடங்களை புகைப்படங்களாக தொகுத்து வழங்ப்பட்டிருக்கிறது . வரலாற்று புனைவு எழுதும் அத்தனை எழுத்தாளர்களும் இந்த யுக்தியை கையாளலாம் . கதையுடன் ஒன்ற அந்த புகைப்படங்கள் கண்டிப்பாக உதவுகிறது . தமிழ் சுதந்திர வரலாற்றை படிக்க விரும்பும் சிறுவர்களுக்கு , மாணவர்களுக்கு எளிதாய் பயிற்றுவிக்க ஆரம்ப புத்தகமாக இதை பரிந்துரைக்கலாம் . கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு வரலாற்று புதினம் .
Shelves
மு. ராஜேந்திரன் book

More like this


காலா பாணி

நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்ற…

4.24/5 · 25 ratings
Check Price