ஆதவன் சிறுகதைகள் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆதவன் சிறுகதைகள் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)

None

Author: Aadhavan
4.33/5 · 61 ratings

'கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போட லாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.'

'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதைத்…

Reviews

user_20621

★ 5/5
வேறு ஒரு காலகட்டத்தின் சூழ்நிலைகள், சங்கடங்கள், பிரச்சினைகள் ஆகியவற்றின் விரிப்பில் எழுதப்பட்டுள்ள தனி மனித மன போராட்டங்களுடைய கதைகள். மிகவும் ஆழமாகவும் நேர்த்தியாகவும் படைக்கப்பட்டுள்ளவை. உணர்ச்சிபூர்வமானவை. உள்ளத்தை வருடபவை சில, தீர்க்க யோசிக்க வைபவை சில. பாலச்சந்தர் படங்கள் பார்த்த அனுபவத்தை உண்டாக்கின. ஆதவன் ஒரு மிக சிறந்த படைப்பாளர். அதை விடவும் மனிதர்களை, குறிப்பாக இளைஞர்களை, மிகவும் புரிந்து கொண்டவர். கண்டிப்பாக படிக்க வேண்டிய சிறுகதைகள்.

user_20620

★ 3/5
எழுபதுகளின் பெருநகர வாழ்வு மற்றும் அதனூடாக வரும் மனச்சிக்கல்களை அனுபவ பயணத்துக்கு நம்மை அழைத்துப்போகிறார். மத்திய மற்றும் மேல்த்தட்டு வர்க்கத்தின் உறவுகளின், வாழ்வின் சிக்கல்களை வகை பிரித்து காட்டுகிறார், ஆசிரியர். களம் மற்றும் காலம் எல்லோருக்கும் புரிந்து ஆழ்ந்து போவதென்பது இயலாது. இந்திரா பார்த்தசாரதி, களத்தை தன் நிஜ வாழ்க்கையில் இருந்தே தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. எது எப்படி இருப்பினும் சுவாரசியத்துக்கு குறைவில்லை.

user_20619

★ 4/5
படிக்கும் போதே ஆதவனின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் நம் உள்மனத்தினுள் புகுந்து நம்மிடமுள்ள ஏதோவொரு குறையையோ நிறையையோ எடுத்து சொல்லி விடுகிறது. நம்மால் சொல்லமுடியாத சொல்லக்கூடிய கதைகள், ஆம் அதுவே ஆதவனின் கதைகள்.

user_20618

★ 4/5
அவருடைய ஒவ்வொரு கதையையும் நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்ள முடியாது‌ (என்னால் முடியவில்லை). ஆனால் ஒவ்வொரு கதையிலும் சில கதாபாத்திரங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ளலாம். அந்த நேரத்தில் அவர் எழுத்துக்கள் உங்களை பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்லலாம் , பாதிக்கலாம்.
Shelves
book Aadhavan

More like this


காகித மலர்கள் [Kakitha Malargal]

A novel From Uriymai Publishing house site: வெவ்வேறு வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள்.mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிக…

4.33/5 · 61 ratings

ஆதவன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)

தமிழின் மிக முக்கியமான சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவரான ஆதவனின் அனைத்துச் சிறுகதைகளும் அடங்கிய முழுத் தொகுப்பு இது. சந்தேகமில்லாமல் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழ…

4.33/5 · 61 ratings

என் பெயர் ராமசேஷன்

ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞன், ராமசேஷன் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்திரக்கப்படுகிறது. சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அ…

4.33/5 · 61 ratings

கருப்பு அம்பா கதை

நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைக்களங்கள் மத்தியதர வர்க்க மனிதர்களே அவரது கதை மாந்தர்கள் இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சன…

4.33/5 · 61 ratings