Select a cover image
Searching for images...
No images found. Try again later.
Saving cover image...
Share:
தேவர் கோவில் ரோஜா [Devar Koyil Roja]
None
4.09/5 · 54 ratings
Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.
Interested in this book?
Check Price on Amazon
Reviews
user_20195
★ 3/5"அவன் கள்ளன், ஆனா தர்மன். இல்ல இல்ல... அவன் தர்மன்... ஆனா கள்ளன்." - இதுவே கதை நாயகனுக்கான சரியான அறிமுக வரியாக இருக்கும். தேவர் கோவில் என்ற ஊரில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை பஞ்சாயத்து செய்து ஊருக்குள்ளேயே முடித்து விடுவர். போலீஸ்காரர்களை எதன் பொருட்டும் ஊருக்குள்ளே விட்டுவிடக்கூடாது என்பது பாளையத்தாரின் பிடிவாதம். அதற்கு காரணம் முன்பகையோ, விரோதமோ அல்ல. மாறாக, போலீஸ்காரர்கள் இல்லாமலேயே இவ்வூரில் நியாயம் நிலை நாட்டப்படும் என்ற கௌரவத்தை தக்கவைப்பதற்காக. இதை அறிந்த தேவமாயன் கொள்ளைக்கூட்டம் பாளையத்தார் வீட்டிலேயே கொள்ளையிட சதி செய்கிறது. ஆனால், அங்கு நிகழ்வதோ வேறு. அது போன்ற ஒரு நிகழ்வு தேவர்கள் மண்ணில் வந்து நிகழ்த்தும் ஆடலாகவே தோன்றுகிறது.
மற்றபடி இந்த புத்தகத்திற்கு ஆசியர் எதற்கு 'ரோஜா' என்ற பெயரை வைத்தார் என்று தெரியவில்லை. அவள் அவ்வளவு பெரிய கதாபாத்திரம் ஒன்றும் இல்லை.
user_20194
★ 3/5சொன்ன சொல்லிற்காக உயிரை துறப்பவர்களுக்கும் உண்டு, கொடுத்த வாக்கு ஒன்றே பிரதானம் அவர்களுக்கு.
போலீஸ் அதிகாரிகளை நுழையவிடாமல் தன் தீர்ப்பாலே ஊர்மக்களின் குறைகளை நிவர்த்திச் செய்யும் தங்கமுத்துப் பாண்டியர். இருப்பவர்களிடம் திருடும் கள்ளன் தேவமாயன் தங்கமுத்துப் பாண்டியர் வீட்டில் கண் வைக்கிறான். அடுத்தக் களவு அங்கே தான், கிடைப்பதை தன் சகாக்கள் ஒன்பது பேருடன் பங்குபோட்டு இந்தத் திருட்டு தொழிலையே விட்டு விடவேண்டும் என்ற முடிவுடன்.
திருடும் நாள் அன்று தங்கமுத்துப் பாண்டியரின் சத்திய சொல்வாக்கால் தாங்கள் திருட வந்ததையே விட்டு விட்டதால், தொழிலில் தோற்றால் உயிர் விடுவோம் என்ற பேச்சிற்காக அந்த ஊரிலே தன் சகாக்களுடன் தூக்கில் தொங்கிவிடுகிறான் தேவமாயன். இறப்பதற்கு முன் தாங்கள் களவாடி சேர்த்துவைத்து இருக்கும் இடத்தின் சாவியை தங்கமுத்துப்பாண்டியரின் ஒப்படைக்கக் கொடுத்து அதை அரசாங்கத்திடம் கொடுக்கச் சொன்ன லெட்டரும் அவரின் மகனான செண்பகப் பாண்டியனிடம் கிடைக்க அப்படியே மறைத்து தன் சொத்து போல உரிமை கொண்டாடி கொள்கிறான். சொன்ன சொல்லிற்காகக் கள்ளர்கள் இறந்ததால் தன் உயிரையும் அங்கேயே விடுகிறார் தங்கமுத்து.
இருபது வருடங்களுக்குப் பிறகு தேவமாயனின் மகன் செண்பகப் பாண்டி மகளைக் கடத்தி அவனுக்குப் பாடம் புகட்ட முற்படும் போது, தன் தந்தையின் தவறுக்குப் பிராயசித்தமாக அவனையே திருமணம் செய்து கொள்கிறாள் ரோஜா.
Shelves
book