காவிரி மைந்தன், பாகம் 3 [Kaviri Maindhan, Part 3]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காவிரி மைந்தன், பாகம் 3 [Kaviri Maindhan, Part 3]

None

4.0/5 · 34 ratings

காவிரி மைந்தன், எழுத்தாளர் அனுஷா வெங்கடேஷ் எழுதிய, சோழர் கால வரலாற்றுப் புதினமாகும். வானதி பதிப்பகத்தால் இப்புதினம் வெளியிடப்பட்டது. இதன் கதைக்களம், கல்கியின் 'பொன்னியின் செல்வனுக்கு' தொடர்ச்சியாக, அதன் கதை முடிவிற்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நிகழ்வுகளாக புனையப்பட்டிருகிறது. இந்நூல் மூன்று பாகங்களுடையது.

பொன்னியின் செல்வனில் வந்த பெரும்பாலான கதாபாத்திரங்கள், காவிரி மைந்தனிலும் இடம்பெறுகின்ற…

Reviews

user_20071

★ 5/5
பொன்னியின் செல்வன் கதை படித்த அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கதை. என்னால் முடிவைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!! எனினும் வரலாறு...வரலாறு தானே!!!புத்தகத்தின் பெயர் :- காவிரி மைந்தன் (மூன்று பாகங்கள்)ஆசிரியர் :- அனுஷா வெங்கடேஷ்பொன்னியின் செல்வன் கதைக்குப் பின்னர் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று சொல்லக்கூடிய  கதை. நமக்குத் தெரிந்திராத பல சம்பவங்களும், மாந்தர்களும் இடம்பெற்றுள்ளனர். அதனை அழகான ஓர் கதையின் மூலம் நமக்குத் தெரியப்படுத்துகிறார் ஆசிரியர்!!எந்தவொரு கதையிலும் ஒரு சில கதாப்பாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதிலிருந்து வேறுபட்ட ஓர் கதை.மறக்கப்பட்ட மாந்தர்களின் உழைப்பும் முக்கியப் பங்குகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் புதினமிது!!கதையில் நான் ரசித்தது:-கந்தமாறனின் வீரம் மற்றும் மறுவாழ்வு... அவப்பெயர் வந்து அவனது குலம் தாழ்ந்த போதிலும், கிடைத்த வாய்ப்பை வைத்து தன்னை நிரூபித்துக் கொண்டது என்னளவில் பெரும் மகிழ்ச்சி."கந்தமாறா! மாறா!" என்று வந்தியத்தேவனும், "வல்லா!" என்று கந்தமாறனின் நட்பும் ரசிக்க வைத்த ஒன்று!கதையை எந்நேரமும் சுருசுருப்பாக வைத்திருந்த ஆழ்வார்க்கடியானும்..பொன்னியின் செல்வரும் வந்தியத்தேவனும் கடல் கடந்து செய்த சாகசங்களும்..அங்கங்கே கந்தமாறன் மற்றும் லோகாவின் தருணங்கள் மிகவும் அழகானது!!என்னதான் ரவிதாசன் சோழர்களின் எதிரியாக இருந்தாலும், அவனது நாட்டுப்பற்றும், அதனால் ஓர் சிறு குழுவை மட்டுமே வைத்துக்கொண்டு எந்நேரமும் எதற்கும் தயாராக இருந்த அவனது துணிவையும் சாமர்த்தியத்தையும் மெச்சியே ஆகவேண்டும்!! அமைச்சர் அநிருத்தரே வியந்தாரென்றால் பாருங்கள்!!ஓர் பெரும் ராஜ்ஜியத்தினை ஆளும் மன்னரைவிட மற்றவர்களின் பங்கு என பலவித உண்மைக்கூறுகளை வெளிக்கொணரும் கதை!உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றுப் புனைவு எழுதுவது என்பது வரம் என்று தான் கூறுவேன்! அதிலும் சுவாரசியமாகக் கொண்டு செல்வதென்றால் அரிதினும் அரிது!! ஆரம்பத்தில் கதை மெதுவாகச் செல்கிறதோ என்று தோன்றியது உண்மை!! ஆனால் பிறகு முக்கிய கதைக்களத்திற்கு சென்ற பின்னர் கதையை முழுமையாக படிக்காமல் வைப்பது எனக்கு சவாலாகவே இருந்தது!மறக்காமல் இது வரலாற்றுப் புனைவு என்பதை மனதில் வைத்து வாசியுங்கள்.

user_20070

★ 3/5
Read all 3 parts. Average novel. Can read this book only if you want to know more about the secondary characters after ponniyin selvan. Ponniyin selvan main characters are portrayed as supporting characters here. Kaviri Maindhan title does not suit this novel. Overall good try by the Author, as it is his first attempt.

user_20069

★ 4/5
வானதி மரணம், பொன்னியின் செல்வரின் மறுவாழ்வு, கருவூராரின் மஹிமை, சிலரின் தியாகங்கள் என் காவிரி மைந்தனை முடித்து வைக்கிறார் ஆசிரியர்... கருவூராரின் தொடர்பு சாதனங்களாக காகம் பொதுவாக துர்சக்திகளின் அடையாளமாக சொல்லப்படுவது... அதை சித்தரின் சேவகர்களாக காட்டியிருப்பது ஏற்புடையதாய் இல்லை.. போர் வீரர்கள், அதுவும் பொன்னியின் செல்வர் போன்ற போர் வீரர்கள், எவ்வளவு தான் மகாபுருஷர்களாயினும், அவர்களின் பொதுவான நாட்டுப்பற்று என்றும் அவர்களின் பாதையை சீராக கொண்டு செல்லும். மனைவியின் மரணத்தில் மனமுடையும் பொன்னியின் செல்வரும், காதலின் துயரில் நாட்டை விட்டு நாடோடியாக திரியும் பொன்னியின் செல்வரும் ஏற்புடையதாக இல்லை... இறுதிக்கட்டம் நிகழும் திருமழபாடி கொள்ளிடத்தின் கரையில் அமைந்த வஜ்ரநாதர் கோயில், பாண்டியர்களின் சதி திட்டத்துக்கு ஏற்ற இடமாக காட்டியது மகிழ்ச்சி.. ஆனால் உண்மையில் நடக்கும் இறுதி கட்ட போர் கண்டராதித்தன் எனுமிடத்தில்.. அது கொள்ளிடம் ஆற்றிலிருந்து சுமார் 600 அல்லது 800 மீட்டர் தொலைவில் உள்ள இடம்.. கொள்ளிடத்தில் விழுந்து பாண்டியன் ஆபத்துதவிகள் கண்டராதித்தம் கிராம தேவதைகள் கோவிலின் பின்புறத்தில் ஆலம் விழுதுகளை பற்றி கொண்டு ஏறுவதாக சொல்லுவது ஏற்புடையதே இல்லை.. இருப்பினும் வானதியின் மரண நிகழ்ச்சிகளை இயற்கையாக நடப்பவற்றை எழுதியது சிறப்பு... பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் காவிரி மைந்தனை படித்தால் நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும்...
Shelves
R. Venketesh Historical Fiction book

More like this


குற்றப் பரம்பரை [Kutrap Parambarai]

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.0/5 · 34 ratings

மன்னன் மகள் [Mannan Mahal]

Author: Sandilyan

இ ரவு மூன்றாம் ஜாமத்தை எட்டிக் கொண்டிருந்ததால் பாதி தேய்ந்துபோய் இரண்டாக வெட்டப்பட்ட பெரிய வெள்ளி நாணயம்போல், வான வீதியில் உதயமான கிருஷ்ண பட்சத்துச் சந்திரன், அதுவரை பிரமா…

4.0/5 · 34 ratings

உடையார் - பாகம் 5 [Udaiyar - Part 5]

Udaiyar (History of Cholas- Part 3)

4.0/5 · 34 ratings

வேங்கையின் மைந்தன் [Vengaiyin Maindhan]

Author: Akilan

புத்தகம் வாங்க : Watsapp: +91- 9025679145 இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது. copyright @2023 AkilanKannan வேங்கையின் மைந்தன் புதினம் கற்…

4.0/5 · 34 ratings

சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்

Author: Kalki

The Moving Finger writes; and, having writ, Moves on: nor all thy Piety nor Wit Shall lure it back to cancel half a Line, Nor all thy Tears wash o…

4.0/5 · 34 ratings

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

4.0/5 · 34 ratings

Trial by Silence

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

4.0/5 · 34 ratings

வெள்ளையானை

Author: Jeyamohan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அ…

4.0/5 · 34 ratings

A Lonely Harvest

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

4.0/5 · 34 ratings

Cinnamon Gardens

Set among the upper classes in the gracious, repressive and complex world of 1920s Ceylon (Sri Lanka), this evocative novel tells the story of two…

4.0/5 · 34 ratings

கோபல்லபுரத்து மக்கள்

கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியி…

4.0/5 · 34 ratings