Kamarajar Vaazhvum Arasiyalum

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Kamarajar Vaazhvum Arasiyalum

None

4.7/5 · 27 ratings

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.

ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன. இங்கே கால் பதித்தவர்களில் கறை படாமல் இறுதிவரை இருந்தவர்கள் வெகு சொற்பமானவர்கள்தான். அவர்களில் காமராஜர் முதன்மையானவர்.இப்போது வாசித்தாலும் வியப்பளிக்கக்கூடியது அவர் வாழ்க்கை. கா…

Reviews

user_19964

★ 5/5
A book with essays on the great leader's life.

user_19963

★ 5/5
தன் மகத்தான சத்துணவுத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு கல்விக்கண் திறந்த முதலமைச்சர் என்பதும் இந்தியப் பிரதமராக இருக்கக்கூடிய அளவிற்குத் தகுதிப் பெற்ற ஒரே தமிழகத் தலைவர் கர்மவீரர் காமராஜர் ஆவார் என நாம் பலரும் அறிந்திருப்போம். மு. கோபி சரபோஜி அவர்கள் எழுதியிருக்கும் 'காமராஜர் வாழ்வும் அரசியலும்' எனும் இந்நூல் தன் நாட்டு மக்களிற்காகத் தன் வாழ்க்கைப் பயணத்தை முழுவதுமாக அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றை அனைவரும் எளிமையாக அறிந்துகொள்ள உதவும் ஓர் அருமையான தொகுப்பு. பள்ளி பயிலும் மாணவனாக இருந்தபோதே "எல்லாமும் எல்லார்க்கும் சமமாகத்தானே கிடைக்கவேண்டும்" என்ற அந்த ஆழ்ந்த எண்ணம் பெருந்தலைவருக்குள் எழுந்ததை பற்றிக் கூறியபடியே அவரின் இந்த வாழ்க்கை வரலாறு புத்தகம் தொடங்குகிறது. தன் பதினாறு வயதிலே காங்கிரஸ் கட்சியின் ஊழியராகச் சேர்ந்து விடுதலைப் போராட்டங்களில் பெரும்பங்கு விகித்திருக்கும் பெருந்தலைவரை பற்றி வாசிக்கும்போது தன் தாய்நாட்டின் மீது அவர் வைத்திருந்த தேசப்பற்றை நாம் அறியமுடியும். ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்திற்குத் தனக்கு உடன்பாடு இல்லாமல், ராஜாஜியிடம் நேருக்கு நேரே அத்திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தவர் காமராஜர். ராஜாஜியால் தன் கட்சிக்கும் தன் தலைமைக்கும் தொந்தரவு இருந்தபோதே ராஜாஜியின் பிற பண்புகளை எண்ணி அவரை அரவணைத்துச் செல்லும் பெருந்தன்மையை வாசகர்கள் தெரிந்து கொள்ள முடியும் இப்புத்தகத்தின் வாயிலாக. தான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் கல்வி வளர்ச்சிமட்டுமில்லாமல், தொழிற்சாலை வளர்ச்சியிலும், தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக மாற்றக் காமராஜரின் கடும் உழைப்பும் அவரின் மூலோபாய திட்டமிடலும் வாசிக்கும் போது வியக்கவைத்தது . 'King Maker' என்று காமராஜருக்கு ஒரு பெயர் எப்படி வந்தது என்பதனை தெளிவாகத் தெரிந்துகொள்வதற்கு இப்புத்தகம் மிகவும் உதவி செய்தது. ஒருவரின் எளிமை, சிக்கனம், தன்னலமில்லாத தெளிவான சிந்தனை தன்னுடைய சுற்றத்திற்கு எவ்வளவு பயனளிக்கும் என்பதற்குப் பெருந்தலைவர் காமராஜர் ஒரு பெரிய எடுத்துக்காட்டு. இப்புத்தகத்தை வாசித்தபின் அவரின் ஒரு பண்பையாவது பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் எழுவதைத் தவிர்க்க முடியாது. அதனால் அனைவரும் வாசிக்கவேண்டிய ஒரு மாமனிதரின் வரலாறு காமராஜரின் வாழ்க்கை. முக்கியமாக ஒருவர் அரசியலில் எந்தவிதக் கொள்கை கொண்டிருந்தாலும், எந்தவொரு அரசியல் கட்சியில் அடிப்படை தொண்டனாகச் சேரும் எண்ணமிருப்போரும் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது மிகவும் அவசியம்.
Shelves
மு. கோபி சரபோஜி book

More like this


வகுப்பறை முதல் தேர்வறை வரை

படிப்பிற்கான முதல் வித்து ஊன்றப்படும் வகுப்பறையில் தான் படிப்பின் ஆரம்பமும், தேர்விற்கான தயாரிப்பும் துவங்குகின்றன. படிப்பதைக் கேட்க வைப்பதன் மூலம் அதை எளிமைப்படுத்தித் தரும் இ…

4.7/5 · 27 ratings

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி

ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் நீத்தவர்கள் ஏராளம். அப்படிப்…

4.7/5 · 27 ratings

அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு

இந்த நூலின் எந்த ஒரு பக்கமும் நாயுடுவின் சுய தனிப்பட்ட வாழ்க்கை புராணத்தை சொல்லவில்லை என வாசிக்கப்போகும் உங்களுக்கு என்னால் உறுதி தர முடியும். தன்னைவிட தான் வாழும் சமூகத்த…

4.7/5 · 27 ratings

காமராஜர் வாழ்வும் அரசியலும்

ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன.…

4.7/5 · 27 ratings

தமிழகப் பாளையங்களின் வரலாறு

தமிழக வரலாற்றில் மட்டுமல்ல தென் இந்திய வரலாற்றிலும் பாளையங்களின் இடம் முக்கியமானது. கட்டபொம்மன், ஊமைத்துறை என்று சில சாகசக் கதைகள் கடந்து, அங்கும் இங்குமாகச் சில சம்பவங்கள் …

4.7/5 · 27 ratings

மௌன அழுகை

அதீதப் புனைவு, மிகை யதார்த்தப் புனைவு, ஜால யதார்த்தப் புனைவு. போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர் கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச்…

4.7/5 · 27 ratings