ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

None

4.33/5 · 12 ratings

தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும் வாழ்வின் பதிவுகளைக் கலையாக மாற்றும் கதைகள் இவை. பெண்கள், குழந்தைகள், தொழிலாளிகள், திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள், பேய்கள், படுகொலைகள்…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19942

★ 5/5
Amazing narrative!! Thoroughly enjoyed the short stories !!

user_19941

★ 4/5
புத்தகம் : ஐந்நூறு கோப்பைத் தட்டுகள் ஆசிரியர்: அசோகமித்ரன் தேதி: 08-06-2025 // "அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் நோக்குடனும் வாழ்வின் பதிவுகளைக் கலையாக மாற்றும் கதைகள் இவை." // ஒருவழியாக அசோகமித்திரனின், "ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்" எனும் இந்த சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்தாகி விட்டது. இதுவரை சிறுகதை புத்தகங்களை வாசித்திராத எனக்கு இப்புத்தகம் ஒரு புது உலகையே காட்டியிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஒவ்வொரு கதையும் ஒரு புது உலகம்... அங்கு புதிய மனிதர்கள், புதிய சூழல், புதிய உணர்ச்சிகள், புதிய நான்! இதனால்தான் என்னவோ நாவல்களும், அறிவியல், வரலாற்று புத்தகங்களும் பழகிய எனக்கு இந்த சிறுகதை தொகுப்பு தொடக்கத்தில் சற்று அயர்ச்சியை கொடுத்துவிட்டது. ஒரு நாவலை படிக்கும்பொழுது அந்த கதைக் களத்தோடும், அதில் வரும் மனிதர்களோடும் நீண்ட தூரம் பயணிப்போம். ஆனால், சிறுகதை தொகுப்புகள் அப்படி இல்லை. ஒரு பேருந்து பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து ஊர்களும் பேர்களும் கடந்து போவதைப்போல ஒவ்வொரு சிறுகதையும் நம்மை கடந்து போகிறது. அதில் சில மட்டும் மனதோடு தங்கிக் விடுகிறது. அசோகமித்திரனின் எழுத்துக்கு ஒரு ருசி இருப்பதை உணர்கிறேன். சில இடங்களில் இனிக்கிறது, பல இடங்களில் கசந்து போகிறது. அவர் எதை எழுதுகிறார்? அரசர்களைப் பற்றியா? அரசாங்கங்களைப் பற்றியா? கடவுள்களைப் பற்றியா? பூதங்களைப் பற்றியா? எதுவுமே இல்லை! அவர் நம்மைப்பற்றி எழுதுகிறார், தெருவில் நம்மை கடந்துபோகும் ஒருவரை பற்றி எழுதுகிறார், அரை வயிற்றோடு வேலை தேடும் ஒரு இளைஞனைப் பற்றி எழுதுகிறார், பெரிதும் ஆவணப்படுத்தப்படாத "ஆங்கிலோ- இந்தியர்கள்" பற்றி எழுதுகிறார். பிரம்மாண்டங்களையே படித்து பழகிப்போன எனக்கு, என்னைச் சுற்றியிருக்கும் சக மனிதர்கள் வாழ்ந்த, வாழும் உலகை கைபிடித்து கூட்டிச்சென்று காட்டுகிறார். உண்மையில் இப்படியான மனிதர்கள் இருக்கிறார்களா? அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத ஒருவன், பல கனவுகளோடும் பட்டினியோடும் இரயிலைப் பிடிக்க ஓடும் ஒரு இளைஞன், மனைவியை வீட்டுவேலைக்கு அனுப்பிவிட்டு சாராயம் குடிக்கும் ஒருவன், பரிட்சை முடிவுக்காக காத்திருக்கும் ஒரு மாணவன், நள்ளிரவில் தண்ணீர் பிடிக்க தன் கைக்குழந்தையை எழுப்பிவிடாமல் மெதுவாய் நகர்ந்து சென்று அந்த சாக்கடைத்தெருவில் கால்கடுக்க நிற்கும் ஒரு தாய், மனைவியை இழந்து கைக்குழந்தையுடன் நிற்கும் ஒரு தொழிலாளி...இப்படியான மனிதர்கள்! கதைகள் நெடுக வறுமையும், பட்டினியும், பசியும், அவமானங்களும், பயமும், அழுகையும், ஒரு நிலையற்ற தன்மையும் பயணித்துக்கொண்டே இருக்கின்றன். இப்படியான வாழ்க்கைதான் 80-களில், 90-களில் இருந்ததா? அவற்றைத்தான் நாம் கடந்து வந்திருக்கிறோமா? இல்லை, எல்லா காலத்திலும் இதுபோன்ற மனிதர்கள் நம்மை சுற்றி இருந்துகொண்டுதான் இருக்கிறார்களா? இல்லை, நாம்தான் அந்த மனிதர்களா? நாம்தான் அந்த மனிதர்கள் போலும். அதனால்தான் என்னவோ, கதையில் வரும் பல மாந்தர்களுக்கு பெயரே இல்லை... பெயர் இல்லை என்றால் முகம் இருக்காது. வசதியாய் போயிற்று...அங்கே நம் முகத்தை பொருத்திக் கொள்ளலாம்!! இப்படியான பசியும், பட்டினியும், வறுமையும் உழன்ற காலத்தை கடந்து வந்துவிட்டோம் என்றே என்னளவில் நினைத்துக்கொள்கிறேன்...மனத்தை ஆற்றுப்படுத்த!! இந்த புத்தகத்தை படித்தபின் முன்பைவிட சற்று மேம்பட்ட மனிதனாக மாறி இருப்பதாக உணர்கிறேன். நம்மை சுற்றி நிகழும், அற்பமென நாம் நினைக்கும் விஷயங்களையும் இரசிக்க கற்று கொண்டிருக்கிறேன் என நம்புகிறேன். இன்னுமொரு முறை கூட இந்த கதைகளை புரட்டிப் பார்க்கலாம். ஆனால் சற்று பொறுமையாய், சற்றே தள்ளி சில காலத்துக்குப் பின். என்வரையில் இந்தப் புத்தகம் கடந்த காலத்தின் ஆவணமாக, நிகழ் காலத்தின் ஒரு நிலைக்கண்ணாடியாகவே இருந்தது! ✒️
Shelves
Ashokamitthiran book அசோகமித்திரன்-1

More like this


18வது அட்சக்கோடு [18vadhu atchakodu]

‘18வது அட்சக்கோடு’ வரலாற்று நாவல் - சுதந்திரத்துக்குப் பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்றுப் பதிவுகளை எளிய இளைஞனைச் சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாகப் பதிவு…

4.33/5 · 12 ratings
Check Price

பிரயாணம்

அசோகமித்திரனின் முக்கியமான கதைகளில் ஒன்று ’பிரயாணம்’. அவரது புனைவுத்தன்மையின் மையம் என்பது அபத்த தரிசனம்தன். ‘மனிதன் அவனை உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்’ என்…

4.33/5 · 12 ratings
Check Price

அந்தரங்கமானதொரு தொகுப்பு

ஏற்கனவே அசோகமித்திரன் அவர்களின் 'உரையாடல்கள்' என்ற புத்தகம் விருட்சம் வெளியீடாக வெளி வந்துள்ளது. தொடர்ந்து நவீன விருட்சம் இதழிற்கு பல ஆண்டுகள் கட்டுரைகள் வழங்கியவர். இன்னும்…

4.33/5 · 12 ratings
Check Price

Still Bleeding From The Wound

BRAND NEW, Exactly same ISBN as listed, Please double check ISBN carefully before ordering.

4.33/5 · 12 ratings
Check Price

தண்ணீர் [Thanneer]

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…

4.33/5 · 12 ratings
Check Price

மானசரோவர் [manasarovar]

BRAND NEW, Exactly same ISBN as listed, Please double check ISBN carefully before ordering.

4.33/5 · 12 ratings
Check Price

அழிவற்றது [Azhivatradu]

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

4.33/5 · 12 ratings
Check Price

எரியாத நினைவுகள்

அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்க…

4.33/5 · 12 ratings
Check Price

அசோகமித்திரன் குறுநாவல்கள்: முழுத்தொகுப்பு [Ashokamitran Kurunovelgal]

கடந்துவிட்ட காலத்தை எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்திரிப்பது அசோகமித்திரன் கதைகளின் பொதுவான அம்சம். இக்குறுநாவல்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமா…

4.33/5 · 12 ratings
Check Price

அப்பாவின் சிநேகிதர் [Appavin Snehidar]

Appavin Snegidhar (அப்பாவின் சிநேகிதர்) is a collection of short stories written by Asokamithiran. He won the Sahitya Academi Award for this book

4.33/5 · 12 ratings
Check Price

Fourteen Years with Boss

Reminiscing of a time long lost, Fourteen Years with Boss gives a delightful insight into the workings of the Gemini Studios of Madras—one of the …

4.33/5 · 12 ratings
Check Price