Reviews for பாலை நிலப் பயணம்
21 reviews total
user_19565
★ 5/5 Feb 02, 2026மிகவும் நல்ல நூல்! பரிந்துரைக்கிறேன்! லேசான நகைச்சுவையுடன் செல்லும் பயண நூல், திடீரென ஆழமான கவனிப்புகளை வழங்குகிறது. நாமும் அந்த நண்பர் குழுவுடன் பயணம் செய்வது போன்ற உணர்வு தருகிறது. அதுதான் இந்த நூலின் வெற்றி. அழகாக எழுதப்பட்டது.
user_19564
★ 5/5 Feb 02, 2026ஆசிரியரும் அவரது நண்பர்களும் சேர்ந்து பயணம் செய்வது போன்ற உணர்வு கிடைத்தது. இடையிடையே தொடர்புடைய தலைப்புகளுக்கு திசை மாறுவதும் ரசிக்கத்தக்கது.
user_19563
★ 5/5 Feb 02, 2026நகைச்சுவையும் பயணத் தகவல்களும் கலந்த மகிழ்ச்சியான வாசிப்பனுபவம். ராஜஸ்தானில் தொடங்கி குஜராத் வரை ஒரு குழு நண்பர்களின் பயண அனுபவம் இது. ஆசிரியரின் எழுத்து நடை புத்தகத்தை கீழே வைக்க விடவில்லை. பயணக் கையேடுகளை விட பயணக் கதைகளையே எப்போதும் விரும்புவேன். மிகவும் ரசித்தேன்.
user_19562
★ 5/5 Feb 02, 2026பயண புத்தகங்கள் மிகவும் பிடித்தமானவை. ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வரம் என்றே சொல்லலாம்.
ஜெய்ப்பூரில் இருந்து அகமதாபாத் வரை நண்பர்களுடன் மேற்கொண்ட பயண அனுபவம் இந்த அருமையான புத்தகம். அழகு தமிழில் எழுதப்பட்ட விதம், கண்முன் காட்சிகளை விரியச் செய்யும் வர்ணனைகள், சங்க இலக்கிய மேற்கோள்கள், அந்த இடத்தைப் பற்றிய முன்னறிவு, நண்பர்களுடனான கேலிப்பேச்சுகள், கவிதைகள் என அத்தனையையும் 91 பக்கங்களுக்குள் அடக்கிவிட்ட ஆசிரியரின் மீது கோபம் வரும். இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே என்று.
பொன்னிற கற்களை உடைத்த மைசூர்பாகு போல இருக்கு, ஃபிளமிங்கோ மண்ணில் நடனமாடும் ஃபலூடாக்கள் என்ற ஒப்புமைகள் சிறப்பு. தமிழ் ஆர்வலர்கள், புத்தகப் பிரியர்கள், பயண விரும்பிகள், உணவு வெறியர்கள் என அனைவரும் விரும்பும் ஒரு நினைவுப் பெட்டகம் இது.
user_19561
Feb 02, 2026பயணம் பற்றிய புத்தகங்கள் அருகி வரும் சூழலில் இது ஒரு பாலைவனச் சோலை. எளிய நடையும், துல்லிய விவரிப்பும் பயணத்தில் நம்மையும் பங்குதாரர் ஆக்குகிறது. ஆவலுடன் அடுத்த பயணத்துக்கு காத்திருக்கிறோம்.
user_19560
★ 4/5 Feb 02, 2026செல்வேந்திரன் தனது எழுத்தாளர் நண்பர்களுடன் ஜெய்ப்பூரில் தொடங்கி அகமதாபாத் வரை மேற்கொண்ட பயண அனுபவத்தை தொகுத்து வழங்கியுள்ளார்.
புத்தகம் முழுக்கவும் சென்ற இடங்களின் சிறப்பம்சங்கள், வரலாறு, மக்களின் வாழ்வியல், பழக்கவழக்கங்கள், உணவு முறை என எல்லாவற்றையும் ஒரு கதை போல எடுத்துரைக்கிறார். ஓசியான், ஜெய்சல்மார், சாம் மணர்குன்றுகள், தேசிய பாலைவனப் பூங்கா, பார்மர், பூஜ், ரான் ஆப் கட்ச், ராணி கி வாவ், மொதேரா சூரிய கோவில் என பல இடங்களை அழகாக எழுதியிருப்பார்.
நண்பர்களுடன் பயணித்ததால் கேலியான சிரிப்பூட்டும் நிகழ்வுகளும் உண்டு. நீல்கே மான்கள், மங்கோலிய நாரைகள், ஃபிளமிங்கோ போன்ற உயிரினங்களைப் பற்றிய விவரங்கள் நேரில் சென்று பார்க்க தூண்டுகின்றன. பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இது போன்ற நூல்களே பேராறுதல். படிக்கப் படிக்க இந்த ஊர்களுக்கெல்லாம் சென்றுவிட வேண்டும் என்ற ஆதங்கம் வரும்.
user_19559
★ 5/5 Feb 02, 2026ஒவ்வொரு பயணமும், பயண நூலும் கனவுகள் போன்றவை என்று ஆசிரியர் சொல்வது போல, இந்த நூலும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் நண்பர்களுடன் நடந்து செல்வது போன்ற அனுபவத்தை தருகிறது. வரலாறு, புவியியல், வனவிலங்குகள், கலை என அனைத்து அம்சங்களுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கிறார். ஆனால் என் பிடித்தமான பகுதிகள் - ஒரு இடத்தில் நின்று, அந்த தருணத்தை உள்வாங்கி, சிந்தனையில் மூழ்கும் தருணங்கள். பாசாங்கற்ற, அழகான, மறக்க முடியாத நூல்.
user_19558
★ 5/5 Feb 02, 2026சுவாரஸ்யமான புத்தகம். ஆசிரியரின் சிறப்பான வர்ணனைகள் மூலம் நானும் அந்த இடங்களுக்கு பயணம் செய்வது போன்ற கற்பனை ஏற்பட்டது. பயணம் செல்லாமலேயே பல இடங்களைப் பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் கற்றுக்கொண்டேன்.
user_19557
★ 4/5 Feb 02, 2026பயணம் செல்ல முடியாத தருணத்தில் இந்த பயண நூல் வாசிப்பனுபவம், பயணம் சென்ற மகிழ்ச்சியை தந்தது. பாலை நிலத்தில் பார்க்க வேண்டிய இடங்களும் சாப்பாட்டுக் கடை பற்றியும் சொன்னது பயனுள்ளதாக இருந்தது.
user_19556
★ 5/5 Feb 02, 2026நான் வாசிக்கும் செல்வேந்திரனின் நாலாவது புத்தகம் இது. முதல் பயண நூல் என்றே நினைக்கிறேன்.
நண்பர்களுடன் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் பயணம் செய்த அனுபவ கட்டுரைகள் அடங்கிய நூல் இது. மென்சிரிப்புடன் கடந்து விடலாம் என்று தொடர்ந்து வாசித்தாலும் அடுத்த வரியிலேயே வெடிச்சிரிப்பு வரவைக்கும் சொற்களை பயன்படுத்துவதில் கில்லாடி. பயண அனுபவங்களை வாசகர்களுக்கு நன்றாக கடத்தியிருக்கிறார், அவற்றின் மூலம் கவித்துவத்தையும், தத்துவ வடிவங்களையும், மனதை கவரும் உவமைகளையும் தூவி விட்டிருக்கிறார்.
பயணங்களின் ஊடே அவ்விடங்களின் வரலாறு, இசை, ஓவியம், உயிரியல், மானுடவியல், புவியியல் தகவல்கள் மூலம் வாசிப்பனுபவத்தை மேலும் செறிவூட்டியிருக்கிறார். மற்ற படைப்பாளிகள், நூல்கள், கவிதைகள் என அறிமுகம் செய்திருப்பதும் சிறப்பு. நிச்சயம் வாசிக்க சலிப்பூட்டாத நூல். செல்வேந்திரனின் நடை மிகவும் பிடித்திருக்கிறது, நெருக்கமானதாகவும் உணருகிறேன்.