நளினி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நளினி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

3.84/5 · 43 ratings

க.நா.சுவின் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ‘நளினி’ சிக்கல்கள் எதுவுமில்லாத ஒரு சாதாரண நாவல். 1959இல் வெளிவந்த நாவல் இது. இந்த காலக் கட்டத்தில் சிற்றன்னைகளுக்கு குறைவே இல்லை. அந்த கிராமங்களில் ஒவ்வொரு தாத்தாவுக்கும் தாழ்வாரத்திற்கு ஒரு மனைவி அதிகாரம் செய்து கொண்டிருப்பாள். மறுதாரம் இல்லாத மனிதர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு காவிரி கரையோரத்து கிராமங்களும் அக்கிரகாரங்களும் இருந்தன.…

Reviews

user_19551

★ 3/5
1950 களில் ஒரு அக்ரஹாரம். அதன் எளிமையான மனிதர்கள். சிற்றன்னை கெடுபிடி செய்தாலும், பொருட்படுத்தாமல் வளைய வரும் துணிச்சலான பெண் நளினி. பாம்பா பழுதா என தெரியாமல் நளினியைப் போல் நம்மையும் தவிக்க விடும் சீதாராமன். மிகைப் படுத்தாமல் எழுதப் பட்ட மனப் போராட்டங்கள். சம்பவங்களும், எண்ணங்களும், உணர்வுகளும் சம விகிதத்தில் கலந்து செல்லும் சீரான நடை. க நா சு விவரிக்கும் அந்த காலத்து சித்திரம் சுவையானது. ஆனால் கதை செல்லும் போக்குக்கு, முடிவு சட்டென வருவது போல் தோன்றும்.

user_19550

★ 3/5
திரு. கா.நா.சுப்ரமணியம் அவரின் மற்றும் ஒரு நாவல் நளினி. அவரின் தமோஸ் வந்ததார், ஒரு நாள், அவரவர் பாடு போன்று நளினியும் - தஞ்சை பிராமண அக்ரகரத்தில் நடக்கும் ஒரு எளிமையானா கதை. நளினி கதையின் நாயகி தன் சிற்றன்னையாள் வளர்க்க படும் மங்கை/மடந்தை. நளினியை தவிர்த்து சில பெண்களும் வந்து போகிறார்கள். கதையின் போக்கு கதை மாந்தரின் வாழக்கை முறை - set அண்ட் proceed மாதிரியான எழுத்து வடிவம். ஒருவருக்கும் ஒரு குறிக்கோள், வாழும் முறை மாற்றும் அவர்களின் நீதி நியாயம். நளினி நம்மை ஆட்கொளுகிறாள் பின்பும் விடைபெறுகிறாள். என்னக்கு 60->70க்களில் வந்த crime thriller family drama திரைப்படம் பார்த்த உணர்வு

user_19549

★ 4/5
First Ka Naa Su Book I have ever read. Great simple narration. Played with less than 10 characters. There are some subtle comedy as well. Looking for an ebook of his 1984 translation - by George Orwell.

user_19548

★ 5/5
அதிகப் படிப்பறிவில்லா நளினியிடம் இருக்கும் துணிச்சல் படித்த பெண்கள் பலரிடம் இல்லாமல் போவதும் முரண். அன்பு என்ற விலங்கை அறித்தெறிய விரும்பாத மனமும் அதற்கான காரணமாக இருக்கலாம்.

user_19547

★ 4/5
சுமார் நூறு பக்கங்களிலான குறுங்கதை. ஒரு அக்ரஹாரத்துக்குள்ளே நடக்கிறது. மிக சொற்பமான கதாபாத்திரங்களுடன் கதையை அமைத்திருக்கிறார். ஒரு ஆழமான கருவை போகிற போக்கில் கதையாக சொல்வதில் கா ந சு வித்தகர். மலர்களின் நறுமணம் போல அவர் கதைகளில் நகைச்சுவை. ஆல்பர்ட் காம்யூ கதைகளில் ஏழ்மையின் சித்திரம் இருப்பதுபோல் கா ந சுவுடய கதைகளில் பணத்தின் பரிமாணத்தை பார்க்கலாம். கதாநாயகி நளினி பத்து வயது தாயில்லா பெண்ணாக, கள்ளம் கபடமற்ற ஆனால் மிகவும் சூட்டிகையான குழந்தையாக இருக்கிறாள். சின்னமாவின் கடுகடுப்பையும், சுற்றி நடக்கும் நடப்புகளையும் தாமரை இலை தண்ணீர் போல எடுத்து கொண்டு வளரும் நளினி எப்படி அத்தகைய முடிவு எடுக்கிறாள்? சாதாரண மனிதர்களுக்கு பணம் என்ற கருவி குற்றங்களை எல்லாம் மறக்க செய்கிறது; எதுவும் ஏற்று கொள்ள படுகிறது. ஆனால் நளினி? இந்த பெண்ணிடமா இத்தனை உறுதி ? நம்மை சிந்திக்க வைக்கும் அழகான கதாபாத்திரம் நளினி.

user_19546

★ 4/5
3.5 stars The story captured life of agraharam. Loved the author's take on women of agraharam and their thoughts when it comes to gossiping, also his take on chinnammal and Nalini. The only concern that I have was the author portrays Nalini as smart person though rebellious. However, she made a life changing decision at a whim without considering future. or the author did not explain her ruminating before making this decision. I think her decision was not consistent with her life through out before her marriage.
Shelves
க.நா. சுப்ரமண்யம் book

More like this


பித்தப்பூ

மனித மனத்தில் பைத்தியம் என்று ஒரு வியாதி ஏன் ஏற்படுகிறது. அது ஏற்படுகிற விதத்தை நாவலாகச் செய்ய முடியுமா என்று யோசித்து பித்தப்பூ என்ற நாவலை 1959இல் எழுத எண்ணினேன். ம…

3.84/5 · 43 ratings

அவதூதர்

'அவதூதர்' நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்…

3.84/5 · 43 ratings

ஒரு நாள்

சாத்தனூர் என்கிற கிராமமும், அதன் மக்களும், என்னைத் தாக்கிப் பாதித்த வேகத்தில் எழுதிய நாவல். பல சுவாரசியமான மனிதர்களை நானே நேரில் கண்டு தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு விரிவாக …

3.84/5 · 43 ratings

பாரதி தோன்றிய காலம் - பாரதி குறித்து க.நா.சு

க.நா.சு. வாழ்ந்தபோதும், அவர் மறைவிற்குப் பிறகும் அவருடைய இலக்கிய எதிரிகள் மட்டுமல்லாமல், இலக்கிய நண்பர்களும் அவர்மீது தொடர்ந்து புகார் கூறியுள்ளனர். அப்படி அவருடைய இலக்கி…

3.84/5 · 43 ratings

ஆட்கொல்லி

ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி. என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாரம் வாசி…

3.84/5 · 43 ratings

பொய்த்தேவு

சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் …

3.84/5 · 43 ratings

ஏழு பேர்

க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம், (கந்தாடை சுப்ரமண்யம், ஜனவரி 31, 1912 - டிசம்பர் 18, 1988), ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்…

3.84/5 · 43 ratings

புதுமையும் பித்தமும்

கொண்டிருந்த உயர்ந்த மதிப்பீட்டையும் அவர் மதிப்பீட்டிலுள் மாறுதல்களையும் முரண்பாடுகளையும் இத்தொகுப்பு பதிவுசெய்கிறது. 1946 இல் க.நா.சு.,பு.பி.க்கு அன்பளித்த நூலின் முதல் ப…

3.84/5 · 43 ratings

கில்காமெஷ் (உலகத்தின் ஆதிகாவியம்)

உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும். கி.மு. 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறி…

3.84/5 · 43 ratings

சர்மாவின் உயில்

ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள்.எதிர்பாராத தருணத்திலெல்லாம் சடார் சடார் என்று சாட்டையடி.ஒரே காரணம்,மற்ற தொழில்களைப்போல் எழுத்துக்…

3.84/5 · 43 ratings