பறையர் வரலாறு: டி.கோபால் செட்டியார்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பறையர் வரலாறு: டி.கோபால் செட்டியார்

None

4.27/5 · 15 ratings

ஆதிதிராவிடர் சரித்திரம் என்ற இந்த நூலில் கோபால் செட்டியார் குறிப்பிடும் பல தகவல்களை 1902 ஆம் ஆண்டிலேயே கர்னல் எஸ்.ஆல்காட் ’புவர் பறையா’ என்ற தனது நூலில் எடுத்துரைத்துள்ளார். பறையர்களே தென்னிந்தியாவின் பூர்வ குடிகள் என்பதையும் மாற்று மதத்தவர்களிடம் ரத்தம் சிந்திப் போராடியதில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் என்பதையும் விவரம் அறிந்த எழுத்தாளர்கள் அனைவரும் இப்போது ஏற்றுக் கொள்கின்றனர்” என அந்த நூலில் கு…

Reviews

user_18876

★ 4/5
yaar aathi தமிழர்கள்? யார் நாகர்கள்? யார் பறையர்கள்? பறையர்களின் சமூக அந்தரஸ்து எப்படி இருந்தது? யாரால் எப்படி அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகம் ஆனார்கள்? அனைத்திற்குமான விடை இந்த புத்தகத்தில்!

user_18875

★ 4/5
இந்த புத்தகத்தின் ஒரு இடத்தில் கோபால் செட்டியார் இப்படிக் கேட்கிறார்."இங்குள்ள பிராமணர்களுக்கு யாரும் முடிவெட்டக்கூடாது, எந்த ஒரு கூலி வேலைக்கும் பயன்படுத்தக்கூடாது, கல்விகற்பிக்கக்கூடாது, எந்த ஒரு நீர்நிலைகளையும் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் இயற்றினால் பிராமணர்கள் எப்படி தோற்றமளிப்பார்கள். பஞ்சப்பராரிகளாக, அசுத்தமானவர்களாகத்தான் பார்ப்பதற்கு இருப்பார்கள். அதைத்தான் பிராமணர்கள் பறையர்களுக்கு செய்தார்கள். அசுத்தம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது என்கிறார். ஆரம்பகாலத்தில் இங்குள்ள தமிழர்கள் பிராமணர்களையும், அவர்களது சடங்குகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு ஆதாரமாக சங்க இலக்கியங்களில் இருந்து பல்வேறு குறிப்புகளை மேற்கொள்காட்டுகிறார். இயற்கைக்கு மாற்றமாக அவர்களது சடங்குகள் இருந்திருக்கின்றது. குறிப்பாக புருஷ மேத யாகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதாவது மனிதர்களை உயிரோடு பலிகொடுத்து அவர்களது மாமிசத்தை உண்பது. பிற்கால தமிழர் ஆட்சியில் பிராமண ஆதிக்கம் மேலோங்கியபோது இங்குள்ள ஆதிதிராவிடர்கள் பெளத்தத்தை ஏற்றுக்கொண்டார்கள். பெளத்த மதம் தமிழகத்தில் வேரூன்றியிருந்ததற்கு யுவான்சுவாங் பயணத் குறிப்புகளை பல இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். பெளத்தத்தை ஏற்றவர்களைத்தான் பிராமிணர்கள் பறையர்கள் என்று அழைத்தார்கள். அதன்பிறகுதான் பறையர் என்ற வார்த்தையே உருவானது என்கிறார். அதுவரைக்கும் பறையர் என்ற வார்த்தையே இங்கு கிடையாது என்கிறார். திராவிட இனம் எப்படி உருவானது என்பதற்கு ஆதி பூர்வகுடிகளாக நாகர்கள் இங்கு வசித்து வந்தார்கள். பிறகு மேற்கு இந்தியாவில் இருந்து தமிழர்கள் இங்கு வந்தபோது நாகர்களும், தமிழர்களும் இனக்கலப்புக்கு உள்ளாகி திராவிட இனமாக உருப்பெற்றது .இங்குள்ள தமிழர்கள் எல்லோரும் இனக்கலப்புக்கு உள்ளானவர்கள்தான் என்கிறார். ஒரு சில மலைப் பிரதேச இடங்களைக் குறிப்பிட்டு இனக்கலப்பில்லாத நாகர்கள் இன்றும் வசிக்கிறார்கள் என்பதற்கு கால்டுவெல் போன்ற ஆங்கில நூலாசிரியர்களின் குறிப்புகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். படிப்பதற்கு இந்நூல் சிரமமாக இருந்தாலும் ஏராளமான தகவல்களை இச்சிறு புத்தகம் உள்ளடக்கி இருக்கின்றது.
Shelves
book ரவிக்குமார்

More like this


மிகை நாடும் கலை காலச்சுவடு சினிமா கட்டுரைகள் (1993 - 2003)

காலச்சுவடு இதழில் 1994முதல் 2003 வரை (இதழ் 49) வெளிவந்த திரைப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் பற்றிய கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். 1920களின் தமிழ்த் திரைப்ப…

4.27/5 · 15 ratings

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு (தலித் நோக்கில் பாஜக ஆட்சி)

நம்மைச் சுற்றி நிகழும் அரசியல், சமூக, பண்பாட்டு நடப்புகள் யாவற்றையும் சனநாயகப் பார்வை கொண்டு, ஆழ்ந்து ஊடுருவி ஆராய்ந்து அலசுவதில், ஆதாரங்களைத் திரட்டி அஞ்சாது உரைப்பதில், …

4.27/5 · 15 ratings

அவிழும் சொற்கள்

ரவிக்குமார் அவர்களை அரசியல் பதிவாளராக, காலத்தின் பிரதிபலிப்பாளராக, கட்டுரையாளராக பலர் அறிந்திருப்பார்கள். சட்டமன்ற உறுப்பினராக அவரது செயல்பாடுகளில் இருக்கக்கூடிய அக்கற…

4.27/5 · 15 ratings

மாமிசம்

No description added

4.27/5 · 15 ratings

பிறவழிப் பயணம்

ஊடகங்களும் பொதுப்பண்பாட்டுச் சூழலும் உருவாக்கும் கற்பிதங்களை கலைப்பவை இந்தக் கட்டுரைகள். வீரப்பன் விவகாரம், மரண தண்டணை, அணுசக்தி ஒப்பந்தம், சுனாமிப் பேரழிவு, கிரிக்கெட், நான…

4.27/5 · 15 ratings

மழை மரம்

No description added

4.27/5 · 15 ratings

கடக்க முடியாத நிழல்

கல்வி, பொருளாதாரம், சட்டம், வெகுசனப்பண்பாடு எனப் பல்வேறு தளங்களையும் ஆராய்கிற இக்கட்டுரைகள், ஈழப்போராட்டத்தின் போக்கு, பெரியாரின் பங்களிப்பு முதலானவற்றைப் பற்றியும் கூர்மையா…

4.27/5 · 15 ratings

கலைஞர் (சமரசமில்லா சமத்துவப் போராளி)

தலைவர் கலைஞர் குறித்த எவ்வளவோ புதிய செய்திகளைச் சொல்லும் இந்நூலினைப் படிக்கின்ற ஒவ்வொருவரின் மனதிலும் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டியவை பின்வரும் வைர வரிகளாகும்: “அவரது கரு…

4.27/5 · 15 ratings

இன்றும் நமதே

மக்களைப் பற்றிச் சிந்திப்பதற்கு தலைவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மக்களில் ஒருவனாக இருந்தாலே போதும் என்கிற உணர்வை நம் முன் வைக்கும் கட்டுரைகள். வெறும் விளக்கங்கள்தான் என்று…

4.27/5 · 15 ratings

அண்டை அயல் உலகம்

சர்வதேச உறவுகளில் இந்தியாவின் இடம் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. குறிப்பாக, இந்தியா தனது அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் உலக நாடுகள…

4.27/5 · 15 ratings

ஆள்வதன் அரசியல்

இந்திய அரசியல் சமூக வெளியில் ஒரு கால கட்டத்தின் வரலாற்றை எழுதுபவை ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைகள். நாம் வெறுமனே செய்திகளாக கடந்து சென்றுவிடும் பல நிகழ்வுகளை ஆழமான அர…

4.27/5 · 15 ratings