இலங்கை வேந்தன் எல்லாளன் [Ilangai Vendhan Ellalan]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இலங்கை வேந்தன் எல்லாளன் [Ilangai Vendhan Ellalan]

None

3.33/5 · 12 ratings

தமிழ் வரலாற்றுப் புதினம் Tamil Historical Novel

Reviews

user_18728

★ 5/5
எல்லாளன் ஒரு சோழ இளவரசனே அல்ல அத்தகைய சோழ இளவரசன் இருந்ததாக தமிழ்நாட்டு வரலாற்றில் ஆதாரம் இல்லை. அனுராதபுரத்தை சூரத்தீசன் ஆண்ட போது கைப்பற்றிய சேனன் குத்திகன் என்ற இரு குதிரை வியாபாரிகளும் உண்மையில் வடக்கை ஆண்ட ஈழசேனன் மற்றும் நாதகுத்தனார் என்கிற மன்னர்கள். இவர்கள் தம் குதிரை படையுடன் வந்து எதிர்பாராத நேரத்தில் அனுராதபுரத்தை கைப்பற்றினர். சூரத்தீசனின் தமையனின் ஒன்பதாவது மகன் அசேலன் 22 வருடங்களின் பின் அனுராதபுரத்தை மீண்டும் கைப்பற்றியபோது ஈழசேனன் போரில் மரணத்தை தழுவ அவனது மனைவி மகாராணி பொன்னம்மைதேவியும், இளவரசியும், பத்தே வயதான இளவரசன் ஈழராஜாவும் வடக்குக்கு (ஈழவூர்) தப்பி சென்றனர். ஈழராஜா என்ற பெயரே பாளியில் திரிவு பெற்று எல்லாளன் ஆனதென்பது என்பது பேராசிரியர் ஆ. வேலுபிள்ளையின் கருத்து.ஈழராஜாவே சோழதேசத்தில் படை பயிற்சி பெற்று திரும்பி வடக்கில் இருந்து படை திரட்டி அனுராதபுரத்தை மீண்டும் கைப்பற்றினான். அனுராதபுரத்தின் மேல் படை எடுத்த தமிழ் மன்னர்களை தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களாக சித்தரிப்பதன் மூலம் இலங்கையில் தொல்பழங்காலம் தொட்டே தமிழரசு ஒன்று நிலவிய உண்மையை திரையிடும் முயற்சி நடந்துள்ளதாக கலாநிதி குணராசா குறிப்பிடுகிறார். துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.
Shelves
Sengai Aaliyan செங்கை ஆழியான் book

More like this


கடல் கோட்டை [Kadal Kottai]

தமிழ் வரலாற்றுப் புதினம் Tamil Historical Novel

3.33/5 · 12 ratings

மரணங்கள் மலிந்த பூமி

இன்று குருணாகல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்பாக நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்த இளைஞனின் உடலம் அதிர்வுகளை தோற்றுவித்துள்ளது.மக்களே உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளு…

3.33/5 · 12 ratings