Karna Parambarai

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

4.06/5 · 98 ratings

புக்ஸ் இந்தியா - வெளியிட்டுள்ள ‘தமிழ்நாடு - சங்க காலம் முதல் செம்மொழி காலம் வரை,' என்கிற களஞ்சியத்தில், முக்கிய சில தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாழ்க்கை குறிப்பு தந்துள்ளனர். கல்கி, புதுமை பித்தன், அகிலன், சாண்டில்யன், நா. பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், சிவசங்கரி வரிசையில் என் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரமித்துப் போய் நின்றுவிட்டேன். என் தாய் உள்பட பெரிய எழுத்தாளர்கள் பலர் இ…

Reviews

user_18631

★ 4/5
My first book from the author's works. Felt like watching a thriller movie. Ideal mix of ancient medical practices and human psychology made this a worthy read.

user_18630

★ 4/5
Whattey thriller!! I wish there were another 1000 pages.

user_18629

★ 3/5
பல வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த அகஸ்தியர் எழுதிய அபூர்வகரணி மூலிகை ரகசியம் கெட்டவன் ஒருவனிடம் சேர அடுத்தடுத்து மரணங்கள் பல நிகழ்கின்றன. அது அவனிடம் சேர்வதற்கு காரணமானவனின் மனைவி வனதாயி என்ற கண்பார்வைற்ற வயதான பெண்மணி எவ்வாறு அவனைத் தடுத்து நிறுத்துக்கிறாள் என்பதே "கர்ண பரம்பரை". இதற்குள் நிறைய கிளைக்கதைகளும் அமானுஷ்யமான சம்பவங்களும் இருக்கின்றன. நான் வாசித்த முதல் 'காலச்சக்கரம்' நரசிம்மா அவர்களின் நாவல் இது தான். அவரது நாவல்கள் குறித்து சிலாகித்து எழுதப்பட்ட முகப்புத்தக பதிவுகள் மூலமே இவரைத் தெரிந்து கொண்டேன். அதனால் பெரும் ஆர்வத்துடனேயே நாவலை வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் கொஞ்சம் ஏமாற்றமே. இந்திரா சௌந்தரராஜனின் சாயல் மிக அதிகமாவே நாவலில் தெரிந்தது. சித்தர்கள், அபூர்வ மூலிகை ரகசியங்கள் எல்லாம் சரி ஆனால் நாவல் மிகச் செயற்கையாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் வாசிப்பதற்கு மிக இலகுவான மொழிநடை. புதிதாக வாசிக்கத் தொடங்குபவர்களுக்கு நிச்சயம் நிறைவான நாவலாக இருக்குமென்று நினைக்கிறேன். கர்ண பரம்பரை என்னைக் கவரவில்லை என்றாலும் இவரது மற்ற நாவல்களான காலச்சக்கரம், சங்கதாரா, ரங்கராட்டினம், அத்திமலைத்தேவன் (ஐந்து பாகங்கள்) புத்தகங்களை வாசிக்க உத்தேசித்திருக்கிறேன்.

user_18628

★ 5/5
Awesome novel As usual, it is a very engrossing story. Well narrated. Must read. Mr. Narasimhan's style keeps the readers always on the edge.

user_18627

How to read this book

user_18626

★ 4/5
Another good fiction from Kalachakram Narasimha. It was very good page turner. Gave 4* mainly because you will come to know who is the antagonist at 70% of the novel and rest of the novel may feel dragging for some. Otherwise it is good read.

user_18625

A very excellent Thriller! Karna Parambarai- a very excellent Thriller Packed by the Author Shri Kalachakram Narasimha. There is no any unnecessary description or unnecessary time taken incidences I am sure that this must be read by all the Generation!

user_18624

★ 5/5
4.5 நட்சத்திரங்கள் கதையுடன் சேர்ந்து ஒரு மர்மமான ரகசியமும் தொடங்குகிறது. அந்த ரகசியத்தை நோக்கி பல கிளைகளில் இந்தக்கதை பயணிக்கிறது. 170 பக்கங்கள் இயல்பாகவும் ஆங்காங்கே மர்மமான நிகழ்வுகள் எட்டிப்பார்த்தும் போகும் இந்தப் புத்தகத்தை அதற்கு பிறகு கீழே வைக்கவே மனம் வராதபடி இருக்கிறது. பக்கங்கள் நகர்வதே தெரியாமல் போகும் இந்தப்படைப்பு இரவில் அனைவரும் தூங்கிய பிறகு அறையில் தனியே அமர்ந்து படித்த என்னுள் ஒரு கிலியையும் ஏற்படுத்தத் தவறவில்லை. அத்தியாயங்களுக்கு இன்னும் நன்றாக பெயரிட்டு இருக்கலாம் ஆனால் அது கதையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. நாமகிரி மாமி நட்பின் உன்னதத்தை உணர்த்தி நெகிழ வைக்கிறார்.

user_18623

★ 4/5
A fast paced thriller. A good plot with multiple interesting twist and turns.

user_18622

★ 4/5
Very good supernatural thriller powered by multiple turns of events and fast paced narration. A closely guarded secret of Siddhas falls in the hands of an evil person and the story revolves around the chain of murders and how the secret is recovered.

user_18621

★ 4/5
மற்றவர்களை ஏமாற்றித் துரோகத்தின் மூலம் பெற்றதின் பலனை பலகாலம் தொடர்ந்து அனுபவிக்க முடியாது, என்றாவது ஒருநாள் அது முடிவை நோக்கி நகர்ந்துவிடும். மறைத்துப் போற்றிப் பாதுகாக்கப்படுவது தீயவர்களின் சிந்தனையில் புகுந்தால் அது நல்லவையே என்றாலும் தீயவற்றிற்குத் தான் பயன்படும். அகத்தியரிடமிருந்து புலஸ்தியர் கேட்டறிந்த அபூர்வகரணி, குருவிடமிருந்து நேரடியாகப் பெற வேண்டிய பஞ்சகரணி என்னும் மூலிகையில் ஒன்று வேறு எவரின் காதுக்கும் எட்டக்கூடாத இரகசியமாகவே போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.. துளசி தன்னுடைய சிஷியனான நல்லம்ம செட்டியாரிடம் அபூர்வகரணியை உபதேசிக்கப்பட்ட அந்த இரவே நல்லம்ம செட்டியார் கொல்லப்படுகிறார் அவரின் கழுத்தில் மறைவாக ஒளித்துவைக்கப்பட்ட சிறு ரெக்கார்ட் மூலம் தீயவரின் கையில் அம்மூலிகைப் பற்றிய ரகசியங்கள் சென்று சேர்கிறது. நல்லம்ம செட்டியாரின் மனைவியான வனதாயிடம் மீண்டும் அபூர்வகரணியை உபதேசித்துவிட்டு யார் இவர்களை ஏமாற்றித் திருடியது என்று கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பும் ஒப்படைக்கப்படுகிறது. பார்வையில்லாத வனதாயிக்கு முதுமையில் வந்து சேர்ந்த பொறுப்புப் பயத்தை உண்டாக்கினாலும் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டிய தேவையிருப்பதால் தன்வீட்டுப் பக்கத்தில் இருக்கும் நாமகிரி மாமியுடன் தேடலை தொடங்குகிறார். ருசியான சாம்பார் மூலம் ஹோட்டல் தொழிலில் கொடிக்கட்டி பறக்கும் சந்திரசேகரின் குடும்பத்தில் ஒவ்வொருவராக இறந்து கொண்டே வருகின்றனர். ஹோட்டலை நிர்வகிப்பவரும் வனதாயின் மகனுமாகிய நம்பிராஜன் சந்திரசேகரின் மாப்பிள்ளையானாலும் தன் பிள்ளைகளை விட இவரே சிறந்தவர் என்று பொறுப்பை ஒப்படைத்த மாமா ஏதோ ஒரு பயத்தில் உலவுவதை உணர்ந்தவன் அதற்கான காரணத்தைக் கண்டறிய விரும்புகிறான். சந்திரசேகரின் அப்பாவிடம் வேலைக்கு வந்த தர்மராஜ்ஜிடம் சுவையான சாம்பார் செய்வதற்கான குறிப்புக் கொண்ட சுவடியிருப்பதைத் தெரிந்த சந்திரசேகரின் தாய் அவர்களைக் கொன்று அதைக் கைப்பற்றிப் பெரும் செல்வந்தர் ஆனது மட்டுமில்லாமல் அவர்களின் சிறுபெண்ணைத் தன் மகனின் ஜாதகக் கட்டத்தைச் சரிபண்ண மணமுடித்ததுடன் பணக்கார சம்மந்தம் வந்தவுடன் அச்சிறுமியையும் கொலை செய்துவிடுகிறாள். தன் தம்பி தர்மராஜ்ஜின் குடும்பமே அழிக்கப்பட்டதை அறிந்துக்கொண்ட பூங்குன்றம் சாதுர்யமாக சந்திரசேகர் குடும்பத்தில் நுழைந்து வீட்டு பெரியவராகத் தன்னைக் காட்டிக் கொண்டு ஒவ்வொருவரையும் பழிவாங்கிக் கொண்டே வருகிறார் அதற்கு அபூர்வகரணியைத் தன் பழிவாங்கும் செயலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். தன் மகனின் மாமனார் வீட்டில் விழும் ஒவ்வொரு இறப்பிலும் வனதாயிக்குச் சந்தேகம் வலுத்து அதற்குக் காரணமானவன் பூங்குன்றம் என்று கண்டுபிடித்து எவ்வழியில் அபூர்வகரணியை உபயோகித்து மற்றவர்களைக் கொன்றானோ அதே வழியிலே பூங்குன்றத்தின் மரணத்தையும் உறுதி செய்கிறாள். பலஇழப்புகளைக் கண்ட சந்திரசேகரின் குடும்பம் பூங்குன்றத்தின் இறப்பினால் பயங்களில் இருந்து மீண்டெழுகிறது. துளசியின் தம்பி மகனான திலக்கிடம் அபூர்வகரணியை உபதேசித்த வனதாயி சப்தமாதா மலைக்காட்டில் இருக்கும் ஆஸ்ரமம் மற்றும் வைத்தியசாலையை அவனிடத்திலே ஒப்படைத்துவிட்டு தன் மகனுடன் எஞ்சி இருக்கும் காலத்தைக் கழிக்கப் புறப்படுகிறாள்..
Shelves
book காலச்சக்கரம் நரசிம்மா

More like this


சங்கதாரா

Those who have read Ponniyin selvan all parts have to read this book. Its a untold story of aaditha karikalan's death. Though it is also one of th…

4.06/5 · 98 ratings

அத்திமலைத் தேவன் (பாகம்-1)

அத்திமலை தேவன் இவரது ஒன்பதாவது நாவல், இந்த பாகங்களில் முதல் மகம் இது. சரித்திரம் + மர்மம், அரசியல் + மர்மம், ஆன்மிகம்+ மர்மம், கடும்பம் + மர்மம், காதல்+ மர்மம் என்கிற வகையில்,…

4.06/5 · 98 ratings

குபேரவன காவல்

இது 1991-ல் இந்துவில் சேர்ந்த அவர், அதற்கு முன் இந்தியன் எக்ஸ்பிரசிலும், அதற்கும் முன் ஒரு தமிழ் வார இதழிலும் ஆசிரியராக பணியாற்றினார். குமுதம் உள்பட பல பத்திரிகைகளில் சிற…

4.06/5 · 98 ratings

அத்திமலைத் தேவன் (பாகம்-5)

சிம்மா என்கிற டி.ஏ.நரசிம்மன், தி இந்து ஆங்கில நாளிதழில் நிர்வாக ஆசிரியராக பணிபுரிகிறார். அதற்கு முன்பாக இந்தியன் எக்யீரல் நாளிதழில் பணிபுரிந்தார், காயச்சக்கரம் மன்கிற இ…

4.06/5 · 98 ratings

அத்திமலைத் தேவன் (பாகம்-3)

சிம்மா என்கிற டி.ஏ.நரசிம்மன், தி இந்து ஆங்கில நாளிதழில் நிர்வாக ஆசிரியராக பணிபுரிகிறார். அதற்கு முன்பாக இந்தியன் எக்யீரல் நாளிதழில் பணிபுரிந்தார், காயச்சக்கரம் மன்கிற இ…

4.06/5 · 98 ratings

கர்ண பரம்பரை

'தி இந்து' நாளிதழில் நிர்வாக ஆசிரியராகப் பணிபுரியும் 'காலச்சக்கரம்' நரசிம்மா என்கிற டி.ஏ.நரசிம்மன் அவர்களின் நாவல்கள் பெரிதும் விரும்பி வரவேற்கப்படுகின்றன.இதுவரை ஐந்தே …

4.06/5 · 98 ratings

மயிலங்கி மங்கையின் மரகதப்பெட்டி

ந ல்லெண்ணத்துடன் நமது இல்லம் வருபவர்கள், பகலில் வலது காலை எடுத்து வைத்து இன்முகத்துடன் நுழைந்து விருந்தோம்பலை ஏற்பார்கள். தீய எண்ணத்துடன் வருபவர்கள், இரவில் கொல்லை வழியாக இட…

4.06/5 · 98 ratings