சொல்வழிப் பயணம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சொல்வழிப் பயணம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.25/5 · 12 ratings

மனித வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும், திடீர் திருப்பங்களும் எப்போதும் தேவைப்படுகின்றன. ஏனெனில், இவைதான் வாழ்க்கையை பல சூழ்நிலைகளில் இருந்தும் தயக்கத்திலிருந்தும் மீட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களும் சக மனிதர்களின் சந்திப்புகளுமே அவனை வழிநடத்திச் செல்கின்றன. வாழ்வில் ஏதோ ஒரு சோதனையில், விரக்தியில் இருக்கும்போது அதிலிருந்து நம்மை நகர்த்திக்கொ…

Reviews

user_18189

★ 3/5
I was about to give 2 stars but after few chapters I could sense the author was improving in his writing. And the referenced stories and incidents became interesting. Overall a good read. I would give 3.4/5

user_18188

★ 5/5
புத்தகம்: சொல்வழிப் பயணம் எழுத்தாளர்: பவா செல்லத்துரை பதிப்பகம்: விகடன் பிரசுரம் பக்கங்கள்: 183 நூலங்காடி: ஈரோடு புத்தகத் திருவிழா 2023 விலை: 250 💫 சமூக வலைத்தளங்களில் தனது கதைச் சொல்லும் திறமையினாலும், ஜோக்கர் மற்றும் ஜெய்பீம் போன்ற திரைப்படங்களில் தன் நடிப்புத் திறமையினாலும் நம் மனதைக் கவர்ந்த கதைச் சொல்லி பவா அவர்களின் கட்டுரை தொகுப்பு இது. 💫 விகடனில் 25 வாரங்கள் தொடராக வெளிவந்து, இப்போது புத்தகமாக வெளி வந்திருக்கிறது. ஆகச் சிறந்த திரை கலைஞர்களான இயக்குனர் பாலுமகேந்திரா மற்றும் கவிஞர் நா. முத்துக்குமார் ஆகியோரின் சிறப்புகளை நான் அறிந்துக் கொண்டது இவர் பதிவுகளின் வாயிலாக தான். 💫 இவரின் பல பதிவுகளையும் பார்த்திருந்தாலும் - இவரின் படைப்பை படிப்பது இதுவே முதல் முறை. 💫 சொல்வழிப் பயணம்: தான் சந்தித்த மனிதர்கள், பாதித்த நிகழ்வுகள் அதனின் தாக்கங்கள் என அனைத்தையும் இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். 💫 மனிதன் தனக்கு ஏற்படும்/நிகழ்த்தப்படும் உணர்வுகளில் மிக பாதிக்கக்கூடியது அவனுக்கு நேரும் அவமானம் தான். எழுத்தாளர் மண்டோ அவர்கள் எழுதிய "அவமானம்" என்ற கதையில் வரும் சுகந்தி மூலம் சொல்கிறார். 💫 கு. அழகிரிசாமி யின் கதை ஒன்றில் பஞ்சத்தின் காரணமாக, தமிழகத்திற்கு பிழைப்பு தேடி வரும் தாய், மகள், ரோட்டில் கிடக்கும் வெள்ளரிப் பிஞ்சை எடுப்பதா வேண்டாமா என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள் ---- "பசியின் ரணம் மனிதனின் மனதை எதற்கும் தயார்படுத்தும்"-பவா செல்லத்துரை. 💫 மனிதர்களின் மூர்க்கத்தனத்தை சொல்லும் போது மிருகம் போல் நடந்துக் கொள்ளாதே என்று சொல்கிறோம். யானை மீது நெருப்பு டயரை எரிந்தது , வனத்திற்குள் செல்லும் போது, கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப் பொருட்கள் என நம் மிருகத்தனத்தை காட்டுகிறோம். மனிதர்களை விட விலங்குகள் பல மடங்கு உயர்ந்தவைதான். 💫 இது மட்டுமல்ல, சொந்த நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் மக்களின் துயரம், நம்பிக்கை துரோகம், தற்கொலை எண்ணம், சிறுவர் சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள்.. இன்னும் பல. 💫 இந்த 25 கட்டுரைகளை வாசிக்கும் போது நிச்சயமாக நம் வாழ்விலும், ஏதோ ஒரு இடத்தில் அந்த உணர்வை கடந்து தான் வந்திருப்போம். 💫 எண்ணற்ற புத்தகங்களையும் பரிந்துரை செய்திருக்கிறார். 💫 இந்த வருடம் படித்த படிக்க போகிற புத்தகங்களுள் ஆகச் சிறந்த புத்தகம் இது. புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம்
Shelves
Bava Chelladurai book

More like this


Ruins of the Night

No description added

4.25/5 · 12 ratings

Ella Nalum Karthigai: எல்லா நாளும் கார்த்திகை

இடதுசாரி இலட்சியவாதம் என நினைக்கும் ஒன்றின் மனிதவடிவமென பவாவை எண்ணிக்கொள்பவன் நான். எந்நிலையிலும் எப்போதும் மனிதர்களுக்கு உதவத் தயாராக இருப்பவர். எங்கும் எதிலும் நல்லதை ம…

4.25/5 · 12 ratings

A carnival called life

No description added

4.25/5 · 12 ratings

Nilam: நிலம்

தன் புனைவுகளில் அசாத்தியமான வேறொரு நிலப்பரப்பிற்கும், மொழிக்கும் நம்மை அழைத்து போன பவாவின் இக்கட்டுரைகளில் அவருக்கு நெருக்கமான மனிதர்கள், இயற்கை, கிணறு, மாடு, மல்லாட்டை…

4.25/5 · 12 ratings

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்…

4.25/5 · 12 ratings

Shepherd

No description added

4.25/5 · 12 ratings

டொமினிக்

சிறுகதைகள்

4.25/5 · 12 ratings