வ.உ.சியும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வ.உ.சியும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா

None

4.2/5 · 5 ratings

கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கைகொடுத்தார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பேருதவி புரிந்தனர். காந்தி வழியாகவும் இந்தப் பொருளுதவி 1916இல் வந்துசேர்ந்தது. இதன் தொடர்பில் ஒரு விவாதம் பல காலமாக நிகழ்ந்துவந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், வ.உ.சி.க்குப் பணம் தராமல் காந்தி ஏமாற்றிவிட்டார் என்பதே அதன் சாரம். இதுவரை வெளிவராத வ.உ.சி. காந்தி க…

Reviews

user_18103

★ 4/5
காந்தி - வ.உ.சி என இருவரும் பேசுபொருள் ஆகி இருப்பதாலோ என்னவோ எனக்கு இந்த புத்தகம் எதார்த்தமாக வாசிக்க கிடைத்தது. 110 பக்கங்களை மட்டுமே கொண்ட மிக சிறிய நூல், ஆனால் பல்வேறு சிந்தனை பாய்ச்சல்களை எனக்குள் ஏற்படுத்தியது. இரண்டு ஆளுமைகளின் சுவாரசியமான பண்புகள் பற்றியும், ஒரு சிக்கலை இருவரும் எப்படி அணுகினார்கள் என்பதை பற்றியும், அந்த கால சமூக சூழல் எப்படி பட்டதாக இருந்தது என்பதை எல்லாம் அருமையாக தொகுத்து எழுதியுள்ளார் ஆய்வாளர் A.r. Venkatachalapathy . ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு கப்பல் கப்பலாக அழைத்து செல்லப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பினத்தவர்களின் அடிமை வர்த்தகத்திற்கு தடை விதித்த சமயத்தில், கூலிகள் என்று இந்தியாவில் இருந்து குறைந்த விலைக்கு வேலை செய்ய சென்றார்கள். இன்றைக்கும் கூலி(coolie) என்கிற தமிழ் வார்த்தை உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு தொடக்ககாலத்தில் தமிழ்நாட்டில் இருந்தே அதிக கூலிகள் சென்றார்கள் என்பது தான் காரணம். பல்வேறு சமூக(Caste) மக்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு கூலிகளாக சென்றார்கள் என்பது இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள பின் இணைப்பின் மூலம் தெளிவாகிறது. மேலும் அங்கு கூலிகளாக சென்றவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் அங்கேயே நிரந்தர குடியேற்றமும்(Permanent Settlements) அமைத்து கொண்டார்கள். தென் ஆப்பிரிக்காவில் காந்தி மேற்கொண்ட போராட்டங்களில் இவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள். தென் ஆப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களாகவே இருந்தார்கள். இந்த இடத்தில் தான் ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் முன்னெடுத்த "சுவதேசி இயக்கமும்" அதன் தொடர்ச்சியாக கப்பலோட்டி கைதான வ.உ.சியும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இந்த போராட்டத்தின் காரணமாக அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேல் முறையீடு செய்ய இங்கிலாந்தில் இருக்கும் “Privy council” ஐ தான் அணுகியாக வேண்டும். இதற்க்கு ஆகும் செலவும் வ.உ.சியின் குடும்ப சூழலும் முற்றிலும் முரண்பாடானவை. எனவே அவர்கள் பிறரின் உதவியை பெரிதும் எதிர்பார்த்தே இருக்க வேண்டியிருந்தது. வ.உ.சியின் நீதிமன்ற செலவுகளுக்கென வந்த பெரும்பாலான நிதிஉதவி தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழர்களிடமிருந்தே வந்தது. இவர்கள் எல்லாம் பலதரப்பட்ட சாதி பின்னணியை கொண்டவர்களாக இருப்பது தான் வியப்பு. தமிழன் என்று வந்துவிட்டால் சாதி நீர்த்து போவது ஒரு பண்பாகவே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. காந்திக்கும் - வ.உ.சிக்கும் இடையில் நடந்த கடித பரிமாற்றங்களை அடிப்படையாக வைத்து தான் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வெறும் 19 கடிதங்களை வைத்து ஒரு வரலாறை எழுத முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார் திரு.AR வெங்கடாசலபதி . நூலின் கருவை வெளியிட்டால் புத்தகத்தை வாசிப்பவருக்கு சுயராசியம் குறைந்துவிடும் என்பதால், இதோடு அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன். இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கை ஒருவராலும் மூடி மறைக்கமுடியாது என்பதை வரலாறு நமக்கு சாட்சியமாக கொடுத்துக்கொண்டே இருக்கிறது. எழுதப்படாத சிறு, குறு, பெரு வரலாறுகளை இனியேனும் நாம் எழுத தொடங்க வேண்டும். அனைவரும் அவசியம் வாசித்து பலனடையவும். Book: வ.உ.சியும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா
Shelves
Indian Literature book A.R. Venkatachalapathy

More like this


The Idol Thief

Subhash Kapoor was a New York-based antique dealer whose pieces can be seen in every major museum of the world. In October 2011 when he presented …

4.2/5 · 5 ratings

அறம் [Aram]

Author: Jeyamohan

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.2/5 · 5 ratings

யாமம் [Yamam]

எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையி…

4.2/5 · 5 ratings

தண்ணீர் [Thanneer]

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…

4.2/5 · 5 ratings

வெக்கை

Author: Poomani

சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…

4.2/5 · 5 ratings

வாடிவாசல்-1

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…

4.2/5 · 5 ratings

Abhimanyu: Star-Crossed Prince

The Kauravas had made a fateful error. Lusting after their cousin's kingdom, they underestimated young Abhimanyu's determination and ability to de…

4.2/5 · 5 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்

சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …

4.2/5 · 5 ratings

ஒரு புளியமரத்தின் கதை

This story captures the complexities experienced by a society in transition. The integral connection between the tamarind tree (protagonist of the…

4.2/5 · 5 ratings

Trial by Silence

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

4.2/5 · 5 ratings

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

4.2/5 · 5 ratings

Zero Degree

Fiction. South Asia Studies. Translated from the Tamil by Pritham K. Chakravarthy and Rakesh Khanna. With its mad patchwork of phone sex conversat…

4.2/5 · 5 ratings