பேய்ச்சி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பேய்ச்சி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.22/5 · 18 ratings

நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என்று சொல்வதுண்டு. ஒரு நல்ல நாவல், வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும்; ஒரு வரலாற்றுத் தெளிவு நாவலுக்குள் செயல்பட வேண்டும்; கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகர்களுடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாகப் பரிணாமல் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ஒரு தளத்தை அடைய முற்படும்போது நாவல் தனிப்பட்ட முறையில் அகத்திற்கு நெருக்கமான ஒன்றாக ஆகிவிடுகிறது.நவ…

Reviews

user_17960

★ 4/5
பேய்ச்சி by Naveen is a novel about going back to once roots and finding it. Naveen is a Malaysian Tamil whose ancestors moved from Tamilnadu. Diasporic writing is written all over the world and one of the key themes is to look for past and to find once cultural roots as one who is separated from his native always feel this loss of heritage more. This novel is set in three timelines in the 1980s, 99 and in the present. The key characters everyone shares a past where they have moved out of India to Malaysia due to various reasons like economical, mythological or social. The novel begins with Olamma who is a central character taking her grandson to Ramasamy who is a traditional priest to the goddess Peichi and also is knowledgeable in Ayurvedic medicine. Both Olamma and Ramasamy migrate out of India. Olamma's family migrate from Tamilnadu when her father dies on the ship due to Pneumonia. She is very young when she moves to Malaysia and is raised in the Rubber plantations. For Ramasamy, his father Kopperan who was a Priest of the Peichi temple is forced to flee as all the children born before Ramasamy die in mysterious conditions. In a sense, both of them are thrown out of their lands. Kopperan moves to Malaysia and works as a laborer waiting for Peichi's command to renew his traditional medicine practice. The portion in the novel where Kopperan saves a girl who is bitten by a Cobra and how his life is renewed as a priest again is poetic, it kind of signals to our time wherein the post-modern world the traditional is more valued compared to the previous modern era when they were looked down as superstitious. It also as a symbol captures the important theme of the novel to go back to roots, it's to that root that Kopperan and even Naveen are going back to through this novel. Olamma represents in a sense the other important theme of the novel, the dual nature of women, they carry within them the creating and destructing force. They are life-giving aswell life taking there are multiple images to this. Women also seem to integrate themselves with the community and tradition, you can see it in how Olamma is so attached to the community of the rubber plantation families whereas her husband Manian is always individualistic and modern in his approach. Manian is also someone who had fled Tamilnadu but he looks down upon the traditional link that binds him to his family. He is shown as a Periyar ideologue, the quintessential rationalist who seems to be more interested in his own pleasure and in the end, he compromises his sense of dharma. Does the author indicate that a rational world view lacks a basis for dharma, does he showcasing more dharma in Olamma than in Manian a disillusionment with rational modernity? The novel is also of continuous displacement, of lost heritage and traditions, we see the land in which central characters live has changed from being a coconut plantation to rubber plantation to date palm plantation. In each stage people are displaced, lives changed, culture uprooted and you see Olamma when she moves out of the Rubber plantation imagining the path to the rubber plantation as some sort of umbilical cord. Even we move anywhere we always want a trace of umbilical cord to our roots. Like I always identify myself as from Srirangam, my great grandfather came to Srirangam from Paachoor a small village Trichy and always called himself Paachoor Krishnaswamy. We carry in ours roots which are ancient and which when find it makes our life and existence meaningful also connecting us to the past, unlike modernity which considers the individual as paramount. The novel is structured as happening at different times connected through stories like how our lives are connected to our past. In the end, Kumaran comes back to where he grew up as a kid he finds his past and the many connections that have made him. Each stage we see this happening and this travel is what the novel is about, it's finding once roots.

user_17959

★ 3/5
தேர்ந்த கதை சொல்லும் இலக்கியங்கள் பெரும்பாலும் கடின மொழி நடையில் இருக்கும். மிக மிக எளிய மொழி நடையில் பிரமாதமான கதை சொல்லும் புத்தகங்கள் வரிசையில் பேய்ச்சிக்கு நிச்சயம் இடம் உண்டு. நதிகளை போன்று கதைகள். ஓலம்மா, மணியம், ராமசாமி என்ற மூன்று நதிகள். அவர்களின் சங்கமம். மூலம், சங்கமம், கடலில் கலப்பதை வரிசையாக சொல்லாமல் Non linear ஆக கதை சொல்லியிருப்பது சுவாரஸ்யமாக்குகிறது.

user_17958

★ 4/5
மதுரை அருகே திருப்புவனத்தில், வைகையின் வடகரையில் அமைந்திருக்கும் மடப்புரம் காளியம்மன் கோவில், சிறு வயதில் ஒரு சிலமுறை சென்று வழிபட்ட இடம். வெட்டவெளியில் வெள்ளைக் குதிரையின் உயர்ந்த முன்பாதங்களுக்கு கீழ் பூதங்களுக்கிடையில் உக்கிர தோற்றம் கொண்ட துடியான தெய்வம் காளி. அங்கு செல்லும் வாய்ப்பினை ஏதாவது காரணம் சொல்லி தவிர்க்கும் நான், ரிஷிவர்தன் பிறப்பதற்கு நேர்ந்திருந்த வேண்டுதலின் கட்டாயத்தால் 20 வருடம் கழித்து மீண்டும் சென்றிருந்தேன். தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டடிருந்தது. புதியதாக சுற்று மதில்களும், கோயில் முற்றத்தில் செயற்கை கூரையும் அந்த சூழலின் முன்பிருந்த வெயிலின் தீவிரத்தினை குறைத்திருந்தன. ஆடு கோழி பலி கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், முன்பு என் நினைவு நாசியில் வியாபித்திருந்த குருதிவாடை அப்போது இல்லை. எட்ட நின்று வழிபட்டுக்கொண்டிருந்த போது, செந்நாயுருவியின் நிறத்தில் சேலை அணிந்திருந்த வறிய கிராமத்து பெண் ஒருவர் தன் குழந்தைகளுடன் வந்தார். அவர் நெரிசலான கூட்டத்தினிடையில் தன்னை பொருத்திக்கொண்டு, பெருந்திலோ, லாரியிலோ வந்திருக்க வெண்டும். வியர்வை பிசுக்கு நெடியுடன் தன் மூன்று குழந்தைகளை கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு வேண்டிக் கொண்டிருந்தார். முதிர்ந்த முருங்கைத் தண்டுபோல சத்தில்லாமல் வற்றித் தளர்ந்திருக்கும் இந்த சிறிய ஆகிருதி எப்படி மூன்று பிள்ளைகளை பெற்று எடுத்திருக்கும் என நான் யோசித்திருக்கும் வேளையில், சட்டென்று சன்னதம் கொண்டு ஆடத் துவங்கினார். கையிலில்லாத ஒரு மெய்நிகர் ஆயுதத்தை ஏந்தியபடி, நாக்கினை கடித்துக் கொண்டு, கண்களின் முனைகளை மேலிழுத்து விழித்தபடி, ஆதி விலங்கின் ஒலியிட்டு கொண்டு அரற்றியபடி ஆடினார். அவரை முழுமையாக ஆட்கொண்ட அந்த உணர்வில் போலியின் சாயல் துளியுமில்லை. எந்த லயத்திலும் அடங்காமல் ஆங்காரத்துடன் ஆடிய அந்த ஆட்டத்தின் தீவிரத்தினை, அதன் பின்னரான ஆழ்கனவுகளில் பலமுறை மீளக் கண்டிருக்கிறேன். பற்றிப் படர ஆதாரக் கம்பம் இல்லாமல், பின் தொடர்ந்து துரத்திய வாழ்வு, மூலையில் ஒடுக்கி அடக்க முயலும் கணங்களில் பெண்ணிலிருந்து எதிர்பாராது பீறிட்டு எழும் இந்த உக்கிரத்தீயை பேய்ச்சி நாவல் வாசிப்பில் பல இடங்களில் ஆழமாகக் காண்கிறேன். பேய்ச்சி நாவ‍லை ஒரு புகைப்படமாக மாற்றினால், முதன்மைப் பாத்திரங்களான ஓலம்மா சத்தகத்தையும், கொப்பேரன் ராமசாமியையும், மணியம் சிலம்பத்தையும், அப்போய் கருப்பனையும், ராமசாமி பேய்ச்சி தெய்வக் கல்லையும், சின்னி சாராய லோட்டாவையும், முனியம்மா போட்டுடைக்க எடுத்த மண்பாத்திரத்தையும், குமரன் தன்னுடைய விஷம் செல்லும் கழுத்தினையும், மலேயா தோக் குரு சமநிலை தவறாத எலுமிச்சையையும் பற்றியபடி போஸ் கொடுப்பார்கள் எனத் தோன்றுகிறது. அதன் பின்புலமாக ஓயாது கொட்டிக் கொண்டிருக்கும் காட்டு அருவியும், ,ரம்புத்தான், கித்தா , செம்பனை மரங்களும் இருக்கலாம். அதற்கும் பின்னால் பின் திரைமறைவில் எட்டிப் பார்த்தபடி பூணியான்கள் தோன்றலாம். ஒப்பந்த குடியேற்ற தொழிலாளர்களின் தோட்டத்து வாழ்விலிருந்து , நகரத்து வாழ்வாக மாறிய வரலாற்று பார்வை பேய்ச்சி நாவ‍லில் உண்டு. நாவலை, கரும்புத் தோட்டமாக முதலில் இருந்து, பின் கித்தா மரம் எனப்படும் ரப்பர் தோட்டமாக இப்போது செம்பனைத் தோட்டமாக மாறிவந்த சூழலியல் பார்வையில் வாசிக்கலாம். பேச்சி, பேய்ச்சி என்கிற இரு மைய படிமங்களைக் கொண்டு முனியாண்டி, அய்யனார் என தமிழகத்திலிருந்து தொடரும் நாட்டார் தெய்வங்கள் பார்வையில் வாசிக்கலாம். தொடர்ச்சியாக, சீலாட் கற்றுத் தரும் தோக் குருவின் தத்துவப் பார்வையிலும். புலம்பெயர்ந்த தமிழர்களுடனான , சீனர்கள், இந்தோனேசியர்கள், மலேயர்களுடனான கலாச்சார பரிமாற்ற பார்வையிலும் என பல்வேறு கோணங்களை வாசிப்பினைக் கோரும் நாவல். ஆரம்பகால ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இந்திய நீராவிக் கப்பல்களின் பெயர்கள் ரங்கநாயகி, நீலாதயாட்சி மற்றும் மீனாட்சி என்கிறார் டேவிட் சங்கீத் சந்தேர்பாலி, தனது மலேயாவில் இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் (INDIAN INDENTURE IN THE STRAITS SETTLEMENTS, 1872-1910: ) என்னும் நூலில். இப்போது செபராங் என்றழைக்கப்படும், மலேசியாவின் வெல்லெஸ்லி பகுதியே தமிழக ஒப்பந்த தொழிலாளர்கள் ஆரம்பத்தில் வந்திறங்கிய பகுதி என்கிறார். தெலுங்கர்கள் ஒரிடத்தில் நிலைத்து பணிபுரியாமல், பிற நல்ல வாய்ப்புள்ள பணியிடங்களை முக்கியமாக பர்மாவில் தேடிச் செல்லும் தன்மை கொண்டவர்கள் எனவும். அவர்களைப் போல இல்லாமல், குடியேறிய‍ இடங்களில் நிலைத்து தங்கி உழைப்பினைக் கொடுத்த தமிழர்களே ஒப்பந்த தொழிலாளர்களாக மேஸ்திரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒப்பு நோக்க வசதியான பர்மா, இலங்கை பொன்ற புலம்பெயர் இடங்களைத் தாண்டி மலேயாவிற்கு தமிழக தொழிலாளர்களை இழுத்தது மேஸ்திரிகளின் வசிய வார்த்தைகளான ‘ அதிக ஓய்வு நேரமும், கறிச் சோறும், அரக்கு சாராயமும் தான். என்கிறார். மன, உடல் ஆற்றலின் அடுக்குகளில் அடுத்தடுத்த நிலையில் இருக்கும் மனிதர்கள் தாங்கள் உடையும் எல்லைகளை கண்டு கடக்க முடியாத தருணங்களாக அமைந்த மரணங்களைப் பற்றி ஆய்வு செய்கிறது பேய்ச்சி நாவல். கப்பல் பயணம் தந்த அழுத்தத்தின் காரணமாக நோய்மையில் இறக்கிறார் ஓலம்மாவின் அப்பா. அதைக் கடந்து மலேயா தோட்டத்தில் குடியேறுகிறார்கள் மிஞ்சிய தமிழர்கள்., வழக்கமாக மழை பெய்ய வாய்ப்பில்லாத தைப்பூசம் நாட்களில், அந்த பிறழ்ந்த சூழலால் திரிந்த விஷமாக மாற வாய்ப்பிருக்கும் சாராயத்தின் எல்லைக்கோட்டைத் தொட்டு இந்த எளிய உழைப்பாளிகள் உயிர் துறக்கிறார்கள். அவர்களில் வலுவுள்ள சிலர் இன்னும் சில அடிகள் கடந்து, காட்டுக்குள் சென்று அருவி அருகில் இறக்கிறார்கள். தொடர்ந்த மீளா நோய்மையால் ஆற்றல் குறைந்த கண்ணன் வாத்தியாரோ, திரிந்த சாராயம் எரித்து சிதைத்���ு குழித்த வயிறுடன் காண்பாரற்று வீட்டிலேயை இறக்கிறார். சாராய போதை எல்லையைக் கடந்த மணியத்துக்கோ சின்னியின் பெண்ணுடல் தரும் போதைதான் உச்ச எல்லை. அறத்தின் அன்னையும், இயற்கை தேவதையுமான, ஓலம்மா தன் மண்ணிலிருந்து பிரிய நேரும் , சூழலின் மாற்றத்தினை தாங்க முடியாமல் இறக்கிறார். இந்த ஒட்டு மொத்த நிகழ்வுகளில் தன் ஒரு பங்கின் பாரத்தை தாங்கிக் கொண்டு மருளும் ராமசாமியோ , தோக் குருவினால் சமநிலைக்குத் திரும்பினாலும், தன்னுள் இருக்கும் பெண்மை உந்தித் தள்ளிய ஒரு அசாதாரண கணத்தில் இறக்கிறார்.

user_17957

★ 5/5
மலேசிய தமிழர்களின் கடந்த 40 வருடத்திய கதையின் ஒரு பகுதி. மிக அருமையான கதை. கதையின் மையம் என்று எதையும் அவதானிக்கமுடியாது அது தேவையும் ஏற்படவில்லை. அற்புதமான நடை. தமிழுக்கு மிக நல்ல எழுத்தாளர். ஏன் இந்த புத்தகத்தை தடைசெய்தார்கள் நானும் பலமுறை யோசித்துப்பார்த்தேன் கண்டிப்பாக அப்படி ஒன்றும் பாலியல் பற்றி அதிகமாக இல்லை. எழுதுவதற்கான வாய்ப்புகள் ஏராளம் இருந்தும் அதை தொடாமல் சென்று மிக முக்கியமான ஒரு நிகழ்வில் மையத்தில் வந்து சேர்கிற சில சித்தரிப்புகள் மட்டுமே. அந்த நிகழ்வே நாவலை முடிவை நோக்கி உந்திச்செல்கிறது என்று தோன்றியது. சின்னியே பேயடியாக வந்து குருதிப்பலிக்கேட்டு நிற்பதாக பட்டது. நிலக்காட்சி விவரனைகல் அனைத்தும் அற்புதம். வாசகனை மலேய மண்ணில் உலவவிட்டுவிட்டார். அற்புதமான வாழ்வியல் சித்தரிப்பும், அந்த மக்களின் நம்பிக்கைகளையும் மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார். சில இடங்களில் நாவல் தொடர்ச்சி அறுந்து செல்வதாக இருந்தாலும் ஒட்டுமொத்தத்தில் தமிழின் சமீப நாவல்களில் மிக முக்கியமான நாவல்.
Tags
2020 வெளியீடுகள்
Shelves
நவீன் book

More like this


நீங்களும் இயக்குநராகலாம்

சிவகங்கை மண்ணை சொந்த ஊராக கொண்டவர், படித்தது எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் கல்லூரிப் படிப்பின் போதே ‘ குறிஞ்சி மலர்’ என்ற சிற்றிதழை நடத்தியவர். திரைப்படத்துறையில் இயக்குனர் க…

4.22/5 · 18 ratings

நினைவுக்கு வராத காரணங்கள்

மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தை பிரதித்துவம் செய்யும் இளம் தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர் நவீன். தனிமையுணர்ச்சியும் தீவிரமான உரையாடல்களும் கொண்ட இக்கவிதைகள் நமக்கென…

4.22/5 · 18 ratings