Reviews for பாஸ்வேர்டு [Password]
29 reviews total
user_17132
★ 4/5 Feb 02, 2026அட்வைஸ் பிடிக்காதவர்களுக்கு இந்தப் படைப்பு பிடிப்பது மிகக் குறைவு. கோபிநாத் அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் மூலமாக சில உண்மைகளை உணர்த்துகிறார். எனக்குப் பிடித்த பகுதி என்னவென்றால், வாழ்வில் ஏதோ ஒன்றை நோக்கமாகக் கொண்டு ஓடுவதை நிறுத்திவிட்டு நம் குடும்பத்தையும் சுற்றத்தையும் கவனிக்கச் சொல்லி அறிவுறுத்துவது. அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய எளிய நடையில் எழுதப்பட்ட புத்தகம்.
user_17131
★ 4/5 Feb 02, 2026கோபிநாத் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் புத்தகம் இது. மனதின் குரலுக்குக் காது கொடுத்தவர்கள்தான் வாழ்வில் உயர்ந்திருக்கிறார்கள் என்று அழகாகச் சொல்கிறார். காலத்துக்கு நல்லவன் கெட்டவன் என்ற பேதம் இல்லை, மனதின் குரலைக் கேட்கும் குணம் உள்ளவருக்கு அதுவே பல கதவுகளைத் திறந்துவைக்கிறது என்ற கருத்து ஆழமானது.
ஒரு விஷயத்தை அனுபவித்து உணர்ந்து திருப்தியாகச் செய்வதே முக்கியம் என்கிறார். அதீத வேகத்தை நிறுத்தி மகிழ்வோடு பணிகளைச் செய்யுங்கள், இல்லையென்றால் திருப்தி இல்லாத அர்த்தமற்ற வாழ்க்கையையே வாழ நேரிடும் என்ற செய்தி சிந்திக்க வைக்கிறது.
user_17130
★ 5/5 Feb 02, 2026கோபிநாத் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்களின், நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் கொண்ட தொகுப்பே இந்தப் புத்தகம்!
user_17129
★ 5/5 Feb 02, 2026கோபிநாத் அவர்கள் தன் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்கள் வாயிலாக நல்வாழ்வு வாழ ஊக்கம் தரும் வகையில் எழுதியுள்ளார். ஊக்கம் தேவைப்படுவோர் படிக்க ஒரு நல்ல தேர்வு. நம் அவசர வாழ்வில் சந்தோஷத்தைத் திறக்கும் கடவுச்சொற்களைக் கொண்ட புத்தகம்.
user_17128
★ 4/5 Feb 02, 2026எளிமையான வார்த்தைகளில் எழுதப்பட்ட நல்ல ஊக்கமளிக்கும் சுயமுன்னேற்ற புத்தகம். குழந்தைகளும் எளிதில் படிக்கக்கூடியது. 30 கதைகள் அடங்கியது. சில கதைகள் சலிப்பாக இருந்தாலும், மொத்தத்தில் படிக்கத் தகுந்தது.
user_17127
★ 4/5 Feb 02, 2026ஊக்கம் மட்டுமே தரக்கூடிய புத்தகமாக நான் இதைப் பார்க்கவில்லை. சில இடங்களில் என் மேல் எனக்கே காழ்ப்பு ஏற்பட்டது. இவ்வளவு நாள் வாழ்க்கையைத் தவறாக வாழ்ந்துவிட்டோமோ என்று.
ஆடம்பரத்திற்காக, சமூகத்தில் கவுரவமாக இருப்பதற்காக என்று பல பொருட்களை வாங்கிக் குவித்து வருகிறோம். ஆனால் அது நமக்கும் பயன்படாது, உழைத்துச் சம்பாதிக்கும் பணமும் விரயம், நாளை அதை விற்றாலும் அடிமாட்டு விலைக்குத்தான் கொடுக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் அபாய சங்கு.
நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் நம் உறுதியைக் குலைத்துவிடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் நாம் சந்தோஷமாக இருக்கிறோம், நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது என்று உறுதியாக நம்பினால் ஒழிய, சமுதாயம் நம்மைப் பணத்தின் பின்னால் விரட்டிக்கொண்டே இருக்கும்.
இன்றைய இயந்திர வாழ்வில், வாழ்க்கையை ரசிப்பதற்குப் பதிலாக நம்மை நாமே மின்பொருட்களிடம் அடகு வைத்து வருகிறோம் என்று கோபிநாத் சொல்வது சிந்திக்க வைக்கிறது. மொத்தத்தில், ஒரு நல்ல வாசிப்பு.
user_17126
★ 5/5 Feb 02, 2026படிக்கும்போது மனதிற்கு நல்ல உணர்வைத் தரும் ஒரு அருமையான புத்தகம்.
user_17125
★ 4/5 Feb 02, 2026நட்பான அறிவுரைகள் நிறைந்த ஒரு நல்ல புத்தகம். படிக்க எளிதாகவும் ஊக்கமளிக்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது.
user_17124
★ 3/5 Feb 02, 2026கோபிநாத் அவர்கள் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் ஊடாக சுயமுன்னேற்ற வகை கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வாசிப்பதற்கு எளிய மொழியும் எளிய வார்த்தைகளும் கொண்டது. சில கட்டுரைகள் மிக நன்றாக இருந்தன, பல கட்டுரைகள் சுமாராகவே இருந்தன. நிஜ வாழ்க்கை மனிதர்களை உதாரணம் காட்டி நகரும் இடங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.