Reviews for சிவம் [Shivam]
24 reviews total
user_16623
★ 5/5 Feb 02, 2026ராஜ் நாராயண் வெளிநாட்டில் இருந்து தனது மாமா குடும்பத்தை சந்திக்க மரகதலிங்கம் புதூர் என்ற கிராமத்திற்கு வந்தார். அவரின் மகளுக்கும் ராஜுக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு விருப்பம் இருந்தது. ஆனால் பாரதியின் அப்பா ஜாதகத்தை காரணம் காட்டி திருமணத்திற்கு தடை விதித்தார்.
ராஜ் நாராயண் தீட்சிதர் வீட்டில் தங்கியிருந்தான். கோவிலுக்குள் திருட சில பேர் வந்தனர். இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன நடராஜர் சிலை ராஜ் நாராயண் மூலம் வெளி வந்தது.
அந்த ஊரில் பழைய கோவில் ஒன்று உண்டு. சிதிலமடைந்த நிலையில் இருந்த அந்த கோவிலுக்கு சென்றவுடன் ராஜ் நாராயணுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வரத் தொடங்கியது. இப்படி பல ஆமானுஷ்ய விஷயங்கள் புத்தகத்தில் உள்ளது. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் முக்கியமான படைப்புகளில் இதுவும் ஒன்று.
user_16622
★ 4/5 Feb 02, 2026நல்ல வாசிப்பு அனுபவம். கடந்த மற்றும் நிகழ்கால பிறவிகள் பற்றிய பரபரப்பான விவரங்கள் சுவாரஸ்யமாக உள்ளன. வாழ்க்கையில் நம்பிக்கையா அல்லது உண்மையான வாழ்வா முக்கியம் என்ற கேள்வியை எழுப்புகிறது.
user_16621
★ 3/5 Feb 02, 2026சாதாரணமான புத்தகம், அசாதாரணமான படைப்பு என்று சொல்ல முடியாது. கதை சாதாரண நிலையில் உள்ளது. அத்தியாயங்களுக்கு இடையே சிவன் பற்றிய தகவல்கள் ஓரளவு நன்றாக இருக்கின்றன, ஆனால் அவை ஆராய்ச்சி அடிப்படையிலானவை அல்ல, மனதிலிருந்து வந்தவை.
user_16620
★ 3/5 Feb 02, 2026கீ வார்த்தைகள்: மரகதலிங்கபுரம், பழைய கோவில், ஏடுகள், திருடப்படுதல், தீட்சிதர், இராஜ நாராயண், நாத்தீக வாதம், அத்தை வீடு, பட்டர், பாரதி, சிலை கண்டுபிடிப்பு, சூட்கேஸ் காணமல் போகுதல், இடிந்த கோவில், வீராயன் கழுகு - சித்தர், சிலைகடத்தல், பூர்வ ஜென்ம நினைவுகள், இசுலாமிய படையெடுப்பு, சிலைகள் மறைத்து வைப்பது, கொள்ளை கும்பல், போலீஸ் விசாரணை என பல திருப்பங்களுடன் கதை நகர்கிறது. சுபம்.