Reviews for தலித்துகளும் நிலமும்: பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு
15 reviews total
user_16563
★ 5/5 Feb 02, 2026மனுஸ்மிருதி மக்களை நான்கு வர்ணங்களாகப் பிரிக்கிறது. இந்த நான்கு வர்ணத்திலும் வராத ஐந்தாவது குழுவை அவர்ணராக, பஞ்சமராகக் குறிப்பிடுகிறது.
தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளான பட்டியலின மக்களுக்கு விவசாயம் செய்து பிழைக்க ஆங்கிலேயர்கள் காலத்தில் பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
1857 சிப்பாய் கலகத்திற்கு முன்பே தமிழ்நாட்டு தலித்துகள் நிலம், பொருளாதாரம் சார்ந்த அடிப்படை உரிமைகளுக்காக பறையர் கலகம் நிகழ்த்தியுள்ளனர்.
மிராசுதார்களான நிலவுடைமையாளர்கள் எப்படி தலித்துகளின் நிலங்களைக் கைப்பற்றினர், செங்கல்பட்டு கலெக்டர் J.H.A. Tremenheere பறையர்களுக்காக நிலமீட்பு ஆதரவாக இருந்தது, பஞ்சமி நிலம் உருவானது, தமிழக அரசு எப்படி நிலங்களை மீட்டது, இதனால் நடந்த வழக்குகள் மற்றும் தீர்ப்புகள், இன்றைய பஞ்சமி நிலத்தின் நிலை என்று இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது.
பெரும்பாலும் நமக்குத் தெரியாத ஒரு கருப்புச் சரித்திரம் இந்த பஞ்சமி நிலம். அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
user_16562
★ 5/5 Feb 02, 2026பஞ்சமி நிலம் பற்றிய புரிதலை அளிக்கும் நூல். எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பஞ்சமி நில வரலாறு எழுதப்பட்டுள்ளது. மிராசி முறை, பஞ்சமி நிலம் பற்றிய விரிவான புரிதல்களை இப்புத்தகம் அளித்தது.
மாவட்ட வாரியாக பஞ்சமி நில அளவை ஆதாரங்களுடன் வழங்கியிருப்பது மிகவும் சிறப்பு. பஞ்சமி நிலம் சார்ந்த மூன்று உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைக் குறிப்பிட்டுள்ளது பஞ்சமி நிலம் பற்றிய துல்லியமான புரிதலை ஏற்படுத்தும்.
மிகவும் எளிய நடையில் பஞ்சமி நில வரலாற்றைப் புரிந்துகொள்ள ஒரு முதல் படி எனும் அளவில் இப்புத்தகம் முக்கியமானது.
user_16561
★ 4/5 Feb 02, 2026பஞ்சமி நிலத்தின் வரலாறு பற்றிய சிறு புத்தகம். தலைப்பை மேலோட்டமாகத் தொட்டுச் செல்கிறது, சில குறிப்புகளை சுட்டிக்காட்டுகிறது.
user_16560
★ 4/5 Feb 02, 2026இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை என்றே சொல்ல வேண்டும். தலித்துகளின் போராட்டம், அவர்களுக்கு நீதி வழங்கும் விதமாக 1900களில் அளிக்கப்பட்ட பஞ்சமி நிலம் பற்றிய வரலாறு, அந்நிலத்துக்காக இன்றும் நடத்தப்படும் போராட்டம் பற்றிய சிறந்த கட்டுரை.
user_16559
★ 5/5 Feb 02, 2026புத்தகத்தின் தலைப்பு சொல்வது போலவே தலித் மக்களுக்கு ஆங்கில அரசாங்கம் பஞ்சமி நிலங்களை வழங்கியதன் பின்னணிக் காரணங்களை, முக்கிய வரலாற்று நிகழ்வுகள் வழியே 50-60 பக்கங்களில் எளிமையாகத் தொகுத்தளிக்கும் புத்தகம்.
ஆதிக்க சாதியினரால் பஞ்சமி நிலங்கள் பறிக்கப்பட்டபோது தலித் மக்கள் அதை எதிர்த்து நடத்திய சட்டப் போராட்டங்களையும், அதில் அவர்களுக்கு ஆதரவாகக் கிடைத்த மூன்று முக்கிய தீர்ப்புகளின் பின்னணிகளும் தொகுக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தில் தரப்பட்டுள்ள முக்கியத் தகவல்களும், வரலாற்றுச் சான்றுகளும் ஆசிரியர் எடுத்துக் கொண்டிருக்கும் சிரத்தையை உணர்த்துகின்றன.