It is definitely for matured readers. Certain details about the tortures are too intense that if you are not mature enough, you will regret that you have read this book.
As part of the writing, the postmodernism way, the book is gripping you throughout the novel. The way it is written is good.
உடல் அரசியலை இந்த அளவு கூறிய ஒரு புத்தகம் இனி வருமா என்பது சந்தேகமே. சாருவால் மட்டுமே இது சாத்தியம்
இது தேவை இல்லாத ஒரு நாவல்
இந்த வகை நாவல் வாசிப்பது முதல் தரம் எப்பிடி இருக்கு எண்டு சொல்ல தெரியவில்லை இது இப்பிடி தான் இருக்கும் போல என்று எண்ண மட்டுமே முடிகிறது ஒரே மூச்சில் வாசிக்கிற அளவுக்கு சுவாரஸ��யமா இருந்துச்சு. ஒரே ஆங்கிலம் , புரியாத வார்ததைகளில் சில கவிதைகள் ஒரு கட்டத்தில் அதுகளை வாசிக்காமலே கடந்து விட்டேன்.
This was the first novel by Charu that I read. I'm no fan of Marquis de Sade, but what I despised at times in the novel at some point became a page-turner, this led to introspection on hidden parts of myself that we are possibly not conscious of. This can be classified under post-modernism, and Charu skillfully makes the reader one of the participants and there are some sweet poems as well. The novel also challenges the stereotype relationships and stereotype characters portrayed in Tamil romantic novels. There is some non-linearity but not to the extent of Charu's Zero Degree.
இது போன்ற நாவல்களை புரிந்துகொள்வதற்கு, செரிப்பதற்கு எனக்கு இன்னும் இலக்கிய வாசிப்பு பழக்கம் அதிகம் வேண்டும் என நினைக்கிறேன். என்றாவது ஒரு நாள் மீண்டும் படித்தால் இன்னும் சிலவற்றை புரிந்துகொள்ளலாமோ என்னவோ. கண்டிப்பாக மீண்டும் படிக்க வேண்டும். இது தவறு, இது அசிங்கம் என்று எதையும் சொல்லிவிட முடியாது. மனிதன் அனைத்தினாலும் ஆக்கப்பட்டவன். என்னைப்போல் புதிதாக படிக்கும் பழக்கத்தை துவங்குபவர்களுக்கு இது ஒரு பெரும் புதிரான, கடினமான பயணமாக இருக்கலாம். இப்படியும் எழுதலாமா என்ற ஒரு விடுதலை உணர்வும், எதையும் எழுத அஞ்சத்தேவையில்லை என்ற தன் நம்பிக்கையும் தானே உண்டாவதை தடுக்கமுடியவில்லை. சில பக்கங்களை புரிந்துகொள்ள மீண்டும் மீண்டும் படிக்க நேரிடுகிறது. ஒரு சிறந்த அனுபவம் என்றே சொல்வேன்.
Charu's mindset while writing this book seems deliberately abstract or chaotic, perhaps aiming to provoke thought or challenge norms, but it feels more like incoherent rambling. After reading, my own mindset is one of frustration and confusion, as it’s hard to determine if this is a book or simply meaningless scribbles. The first 50 pages were a headache, and the rest was monotonous—a perplexing piece of confusion, not a meaningful work.
சமுகத்தில் உள்ள கேவலமான விடயங்களின் குப்பைதொட்டி..யாரும் படிக்கவேண்டாம்(தேவை இல்லாத தேகம்)
I am giving 3.5 stars.
Charu Nivedita famous for his transgressive fiction writing.
This novel is not for everyone.. the choice is yours!.
This novel deals with torture, sex, butthole, lesbian, catamite, oral sex, love, lust, masturbation, shit, threesome, poetry and more.
சாரு நிவேதிதா ஒரு வித்தியாசமான எழுத்தாளர்.
இந்நூலில் வன்முறை, சித்ரவதை, காமம், வலி, என்று ஒன்றை விடாமல் பட்டென்று அப்படியே ஒளிவு மறைவில்லாமல் எழுதக்கூடியவர்.
லோக்கல் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் கொம்மா கோத்தா னு எழுதிருக்காரு. சுயமைதுனம், புட்டம், கஞ்சி, யோனி, பீ, கோட்டை, ஓத்தல், கேட்டமைட், ஓரல் செக்ஸ், லெஸ்பியன்னு என்ன இந்த மனுஷன் கலீஜா எழுதிருக்காருனு ஒரு சகிக்க முடியாத உணர்வு வந்துச்சு. பின் ஒரு குறிப்பில், தனிமை , இருண்மை, போரின் அழிவுகள்,சினை அனுபவங்கள், காதல், காமம், எத்தைனைய விஷயங்கள் வந்திருக்கும் பொது மேல்சொன்ன விஷயங்களை பற்றி சிறுகதை எழுதினால் என்ன என்று ஒரு போடு போட்டிருக்கிறார்.
தேகம்
சாரு நிவேதிதா
எழுத்து பிரசுரம்
முன்பு பல முறை,
சாலை ஓரங்கிடக்கும் மலம் மேல்
அலைந்து கிடக்கும் ஈக்கள்,
ஒட்டப்பட்ட இலைகள்,பூக்கள் கூட
கண்ணுக்கு அழகாய் தென்படுவது,
அறுவறுப்போ என நினைத்ததுண்டு.
ஆனாலும், அதுகூட ஒரு வித அழகை
அசுத்தத்தின் பிடியில் சுமக்கிறது!!.
இதற்கு முன்பு சாருவின் கட்டுரைகளையே படித்திருக்கிறேன். இந்த நாவல் எனக்கு புதுவித அனுபவமும், சிந்தனையும் ஊட்டி சென்றது.
நாவலில் வரும் வரிகள்;
‘ ஒருவன் செத்துவிடாமல் சித்தரவதை செய்ய வேண்டும்; வதையின் முடிவில் அவனுடைய ஞாபகம் என்ற பெட்டியை அவன் நிரந்தரமாகத் தொலைத்திருக்க வேண்டும். அந்த மனிதன் தன் அடையாளத்தை இழந்து வெறும் ஜடமாகி இருக்க வேண்டும். அது உன்னால் சாத்தியமானால் இந்த நாவலை ஒரு வாரத்தில் உன்னால் எழுத முடியும். ’
இதுவே கதையின் கரு மற்றும் கதையின் ஓட்டத்தை கொண்டு செல்லும் பெரும் கருவி; இது மட்டுமில்லாமல்
கதையில் ஆங்காங்கே மலமும், வதையும், காமமும் என கடிதங்கள், கவிதைகள், தத்துவங்கள் என நிரம்பி வழிந்து மனதுக்குள் பதிகிறது.
பலர் சொல்ல கேட்டிருக்கிறேன், இவர் நாவலை வாசிக்க முடியவில்லை; ஏன் இப்படி எழுதுகிறார்
என்ற வினாவை முன்னிறுத்தி ஒதுக்கி விடுவார்கள்.
எழுத்துக்களை வரையறைக்குள் அடக்க நினைப்பவர்களாகவே அவர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். மனிதனின் அகம் சார்ந்த சிக்கல்களுக்கு விடுதலை என்பது அவ்வப்போது தேவைப்படுகிறது. சிலருக்கு இசை, திரைப்படம் என தேர்வு செய்து தப்பித்து விடுகிறார்கள். நான் சொல்கிறேன், அத்துமீறிக்கொண்டே இருக்கும் இவரின் இந்த கதாபாத்திரங்கள் நம்முள் இருக்கும் பழி, காமம் போன்ற உணர்ச்சிகளை கேள்விக்கு உட்படுத்தலாம். இன்னும் சரியாகச் சொன்னால், மனிதர்கள் வக்கிர எண்ணம் நிரம்பியவர்கள் தானே. இதனை, இந்த சிறு நாவலின் மூலம் நாம் மனதில் இருக்கும் வக்கிர எண்ணங்களை சோதனை செய்து பார்க்க முடிகிறது.
இன்னும் சில வரிகள் புத்தகத்திலிருந்து:
' சவக்கிடங்கை பார்த்திருக்கிறாயா தர்மா அந்த சவக்கிடங்குக் காப்பாளர்கள் அங்கே வரும் உடல்களை விறகுக் கட்டைகளைப்போல் எடுத்துத் தூக்கி எறிவார்கள் அதிலேயே புழங்கிப் புழங்கி அப்படியே மரத்துவிடும் அதேபோல் நீயும் புத்தகங்களுடனேயே பழகிப் பழகி ஒருமாதிரி மரத்துப்போய் விட்டாய் என்று நினைக்கிறேன். '
கண்டிப்பாக வாசித்து வதைபட வேண்டும்;
ரசனை உருவாக !!
#சிவசங்கரன்
சாருவை வாசிபத்தர்க்கு ஒரு தனி மனம் வேண்டும்! காதல், காமம், வன்மம் எல்லாமே வழிந்து ஓடும்! ' தேகம் ' கூட அப்படி ஒரு புத்தகம். தர்மா வாயிலாக வதைகள், வதை கான காரணம், பெண்கள் மேல் நடத்தப்படும் வன்முறை. இலகிய மனம் இருந்தால் வாசிக்க முடியாது.. தர்மாவுக்கு ஆன காதல் கடிதங்கள் நான் மிகவும் ரசித்த பக்கங்கள். எங்கும் எளிய உணர்வு ஒரு ஆதுரம். இப் புத்தகம் கொண்டாட்டம் அல்ல ஒரு கசப்பு வாழ்வின் பிரதி பிம்பம்! சாரு வை நீ வெறுப்பாய் இல்லை நேசிப்பாய், இடையினம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது!! அவரின் வண்ணம் என்றும் குருதி படிந்த ஒன்று!