இதுவே சனநாயகம் [Ithuve Sananaayagam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இதுவே சனநாயகம் [Ithuve Sananaayagam]

None

3.97/5 · 35 ratings

அறிஞர் தொ. பரமசிவன் ஒரு பண்பாட்டுத் தொல்லியலாளர். வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள். பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து காட்டும் போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றி வியக்க வைக்கின்றன.…

Reviews

user_15704

★ 4/5
இந்த புத்தகம் அவர் பல நூல்களுக்கு கொடுத்த அணிந்துரை எழுதப்பட்டுள்ளது.அவர் அஅவற்றை எழுதும் போது எவ்வளவு ஆராய்ச்சி செய்துள்ளார் என்பது தெரிகிறது.பெயரன் பெயர்த்தி பற்றிய ஆய்வு , பாரதிதாசன் குடும்பவிளக்கு பற்றிய பகுதி அருமை.

user_15703

★ 5/5
இதுவே சனநாயகம் அழிந்து விட்டதாக கருதப்படும் எந்தக் கருத்தியல்களும் முழுமையாக மறைந்து விடுவதில்லை என்பதே இயற்கையின் விதி. அழிந்து விட்டதாக நாம் கருதுகிறவற்றின் எச்சங்கள் நமது வாழ்விலும் சமய வாழ்விலும் பரவலாக ஊடுருவிக்கிடக்கின்றன. தாய் தெய்வ வழிபாடும் அதன் முன் பின் உள்ள வரலாற்றை குறித்த பதிவுகளும், டிராவிட மண்ணில் பிற சமயங்கள் தங்களை நிலைநாட்ட மேற்கண்ட மாற்றங்களை பற்றியுமான பதிவுகள் வியக்க வைக்கின்றன. நாட்டார் சமயம் (Folk Religion) மற்றும் தொல்பழஞ்சமயம் (Prescribe Religion) பற்றிய குறிப்புகளும் கட்டுரைகளும் மற்றும் சமய எச்சங்கள் என்ற தலைப்பில் உள்ள ஆய்வுக் கட்டுரைகள் பிரமிப்பை தருகின்றன. பழந்தமிழர் மரபுகளை பற்றியும் அவர்களின் பண்பாடுகள் பற்றியும் படிப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் இந்நூலை எழுதியுள்ளார்.

user_15702

★ 4/5
பேராசிரியர் தொ.பரசிவன் பற்றி அறிமுகம் தேவையில்லை. நாட்டார் வழக்காற்றியலிலும், தமிழக பண்பாடு மானுடவியல் சார்ந்த ஆய்வுகளில் முன்னோடி. இந்நூலில் "தொன்மை, சமயம் , வழிபாடு, ஆய்வாளர்கள் பற்றிய கட்டுரை தொகுப்புகள் அடக்கம். அதில் சில கீழ்காண்பவை: 1. பூசாரிகள் என்றால் ஆண்களின் அதிகாரம் சார்ந்தே கோவில்களில் காண முடிகிறது. ஆனால், கடவுள் வழிபாட்டின் தொடக்கத்தில் பெண்களும் பூசாரிகளாக இருந்ததற்கான சான்று காமக்கோட்டம் எனும் பெண் தெய்வ கோவில்களில் இருந்துள்ளனர். இதில் - நெல்லை காந்திமதி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி கோவில்கள் அடக்கம். பார்ப்பனீயம் ஊடுருவலால், மீனாட்சியிடம் இருந்த அரசையும் செங்கோலையும் பறித்து சுந்தரேஸ்வரருக்கு கொடுக்கப்பட்டது. 2. வைணவமும் ஸ்மார்த்த பிரமாணமும் கருத்தியல் ரீதியாக மோதிக்கொண்ட வரலாறு ஸ்வாரஸ்யமானது. தொண்டரடி பொடியாழ்வார், "பக்தனாக இருக்கும் ஒருவன் பிராமணனாக இருக்க முடியாது" என்று கூறுகிறார். ப்ராமணீயத்தின் சுத்த கோட்பாட்டுக்கு எதிராக நாலாயிர திவ்யா ப்ரபந்தத்திலும், ஆண்டாள் பாசுரத்திலும் கண்ணன் பாடல்கள் (அழுக்கு குழந்தையாக) மூலம் திகழ்கின்றன. இதுபோன்று பல கட்டுரைகள் நமக்கு புதிய பரிமாணத்தில் வகுப்பு எடுக்கிறது.

user_15701

★ 4/5
Loved the essay titled இதுவே சனநாயகம். Went in search of the temple and the travel was amazing.
Shelves
தொ. பரமசிவன் book

More like this


இந்து தேசியம்

பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?,இந்து தேசியம் ,சங்கரமடம்;தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்,இதுதான் பார்ப்பனியம்,புனா ஒப்பந்தம்;ஒரு சோகக் கதை ஆகிய ஐந்த…

3.97/5 · 35 ratings

மரபும் புதுமையும்

நிறுவனமயமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கிக் கெட்டிதட்டிப்போன ‘மரபு’களுக்கு மாறாக, நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பை அகழ்ந்து கூட்டுவனவே தொ.ப.வ…

3.97/5 · 35 ratings

பண்பாட்டின் வாழ்வியல்

பழந்தமிழர் வாழ்வோடு பின்னி பிணைந்திருந்த சடங்குகள், வழிபாடு, திருவிழா, உணவு பழக்கங்கள், விளையாட்டு போன்றவற்றை நுட்பமாக ஆராய்ந்து அரிய கருத்துகளை அள்ளித் தரும் நுால். மஞ்…

3.97/5 · 35 ratings

சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]

தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று... சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவ…

3.97/5 · 35 ratings

சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன்

தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டுத் தளத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்களுள் அறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடத்தக்கவர். தமிழின் செவ்வியல் மரபுகளில் காணலாகும் பண்பாட்டுப் பொருண்ம…

3.97/5 · 35 ratings

தெய்வங்களும் சமூக மரபுகளும்

தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்…

3.97/5 · 35 ratings

அறியப்படாத தமிழகம் [Ariyappadaatha Thamizhakam]

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…

3.97/5 · 35 ratings

தொ. பரமசிவன் நேர்காணல்கள்

அறிஞர் தொ.பரமசிவனின் ‘அழகர் கோயில்' தமிழில் கோயில்சார் பண்பாட்டாய்வுக்கு எடுத்துக்காட்டான முழுமுதல் நூல். கல்விப் புலத்தில் உயராய்வு நிலையில் அதன் தாக்கம் உணரப்பட்டது. கல்விப்…

3.97/5 · 35 ratings

உரைகல்

பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்றிய கட்டுரை, நமது பண்பாட்டில் ம…

3.97/5 · 35 ratings

அழகின் அசைவு

தமிழ்ப் பேராசிரியராகிய தொ.ப. அவர்களின் பார்வைக் கூர்மையில் புறநானூறு முதல் புதுக்கவிதை வரை, தொல்காப்பியத்திலிருந்து தற்காலப் பழகுதமிழ் வரை துலங்குவதை விதந்து சொல்லவேண்…

3.97/5 · 35 ratings