Reviews for கிராமம் நகரம் மாநகரம்
13 reviews total
user_14853
★ 4/5 Feb 02, 2026முப்பரிமானம். கவிதையை விட உரைநடையில் மிளிர்கிறார் நா.முத்துக்குமார்.
user_14852
★ 5/5 Feb 02, 2026அற்புதமான படைப்பு! நா.முத்துக்குமார் தமிழின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர்.
user_14851
★ 5/5 Feb 02, 2026நல்ல புத்தகம். நா.முத்துக்குமாரின் எழுத்து மனதைத் தொடுகிறது.
user_14850
★ 4/5 Feb 02, 2026பழைய கிராமத்து நினைவுகளை அசைபோட வைத்த புத்தகம். கிராம வாழ்க்கையின் எளிமையும் இனிமையும் மனதில் மீண்டும் ஒலிக்கும்.
user_14849
★ 4/5 Feb 02, 2026கிராமத்தில் வாழ்ந்து பின்னர் வேலைக்காக நகரத்திற்கு இடம்பெயர்ந்தவர்களின் அனுபவத்தை அழகாகப் பிரதிபலிக்கிறது இந்தப் புத்தகம்.
எழுத்தாளரின் சொந்த வாழ்க்கையையும், கிராமம் மற்றும் நகரத்தில் அவர் பெற்ற அனுபவங்களையும் பேசுகிறது. படிக்கத் தொடங்கியதும் ஒரு நாஸ்டால்ஜிக் உணர்வைத் தருகிறது.
user_14848
★ 3/5 Feb 02, 2026கிராமத்தில் பிறந்து, நகரத்தில் பயின்று, மாநகரத்தில் பிழைப்புக்காகத் தஞ்சம் அடைந்தவர்கள் அனைவருக்கும் இந்தப் புத்தகம் மலரும் நினைவுகளைத் தூண்டும்.
அன்றாடம் நடக்கும் சிறு நிகழ்வுகள் அந்தந்த இடத்தில், நேரத்தில் நிகழ்காலமாக இருக்கும்போது பெரிதாகத் தோன்றாது. காலம் கடந்து, இடம் பெயர்ந்து நினைக்கும்போது வரும் இனிமையைக் கவிஞர் அழகாக எழுத்தில் பிடித்துள்ளார்.
பல இடங்களில் முத்துக்குமார் அவசரமாக எழுதியிருப்பது நன்றாகத் தெரிகிறது. அவரும் கடைசி நாளில் பரீட்சைக்குப் படிக்கும் நம்மில் ஒருவர் என்பதில் ஒரு சந்தோஷம்.
user_14847
★ 5/5 Feb 02, 2026நா.முத்துக்குமாரின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு, அவர் அனுபவத்தில் ஒவ்வொரு சம்பவத்தையும் கிராமம், நகரம், மாநகரத்துள் கொண்டுவந்து அருமையான தமிழ்க் கட்டுரைகளாக்குகிறார்.
மிகச் சாதாரண விஷயங்களைத் தனது மொழியால் எளிமையாகவும், மனதோடு ஒரு லேசான உணர்வை ஏற்படுத்தியும் எழுதுகிறார். பாட்டியின் சுருக்குப்பை முதல் அழகி காயத்திரி, மாநகரத்தின் கடைசிக் கடிதம் என ஏதோ ஒரு புதுமையாகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
தமிழை அதன் இலக்கணத்தைச் சரியாக ஒரு கட்டுரையில் கொண்டுவந்தால் அழகிய இலக்கியப் படைப்பைக் கொண்டுவர முடியும் என்பது புலனாகிறது.
user_14846
★ 4/5 Feb 02, 2026நா.முத்துக்குமாரின் இழப்பு தான் யுவனின் வீழ்ச்சிக்குக் காரணம். அந்த அளவுக்கு ஆழமான படைப்புத் தொடர்பு அவர்களிடையே இருந்தது.
user_14845
★ 4/5 Feb 02, 2026ஒரு கவிஞன் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கிறான். அவனுக்கு உயர்திணை, அஃறிணை என்ற வேறுபாடுகள் கிடையாது. ஒரு சைக்கிளைச் சகோதரன் என்றும், வீட்டிற்கு உயிர் இருக்கிறது என்றும் ஒரு கவிஞனால் மட்டுமே தர்க்கத்தோடு சொல்ல முடியும்.
ஒரு கட்டத்தில் நாமும் நா.முத்துக்குமாரும் ஒன்றாகிப் போகிறோம். அவருக்கு அறிமுகமான மனிதர்களும் இடங்களும் நாமும் எங்கோ பார்த்தது போல இருக்கிறது. அவர் நம்முடன் இல்லாததை நினைத்து மீண்டும் ஓர் வருத்தம்.
user_14844
★ 5/5 Feb 02, 2026மனிதனின் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பரிசளிக்கிறது இந்த வாழ்க்கை. அவை அனைத்தும் அழியாமல் என்றுமே நம் மனதில் உறைந்து கிடப்பவை. அப்படிப்பட்ட நினைவுகளின், அனுபவங்களின் வார்ப்பே இந்தப் படைப்பு.
இதில் வரும் ஒவ்வொரு நிகழ்வும், கதாபாத்திரமும் நம் வாழ்வில் நாம் கேட்ட, பேசிய, பார்த்த, உணர்ந்த ஒன்றாக அமைந்து நம்மை நம் கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஒரு feel good அனுபவம்.