Reviews for சாமிகளின் பிறப்பும் இறப்பும்

20 reviews total

user_14755

★ 4/5 Feb 02, 2026

"கடவுள் என்பது குற்ற உணர்வின் வெளிப்பாடு" என்பதே இந்நூலின் சாரம். தமிழ்நாட்டின் நாட்டார் தெய்வங்கள் பற்றிய எளிமையான, விரைவாகப் படிக்கக்கூடிய நூல்.

user_14754

★ 3/5 Feb 02, 2026

இந்நூல் சிறுகதைகளால் தொகுக்கப்பட்ட பகுத்தறிவு நூலாகவே அமைந்துள்ளது. இதில் வரும் ஒவ்வொரு சிறு தெய்வங்களைப் பற்றிய கதைகளும் நாம் ஆங்காங்கே கேட்டவை போல தோன்றக்கூடும். ஆனால் பகுத்தறிவோடு அணுகி பார்த்தால் ஆசிரியர் நூலின் இறுதியில் கூறும் கருத்துக்களை ஆழமாக உள்வாங்கிக் கொள்ள முடியும்.

சிறுவர்களுக்கு கட்டாயம் பரிந்துரை செய்யப்பட வேண்டிய நூல் இது.

user_14753

★ 4/5 Feb 02, 2026

நாட்டார் தெய்வங்கள் பற்றிய கோட்பாடுகள் எளிய சொற்களில், சிறந்த உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன — பள்ளி செல்லும் குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் வகையில். பெரிய தெய்வங்களுக்கும் நாட்டார் தெய்வங்களுக்கும் உள்ள வேறுபாடு, வன்முறையால் உயிரிழந்தவர்கள் தெய்வமாக்கப்படுதல், நாட்டார் தெய்வங்களின் சமஸ்கிருதமயமாக்கல் போன்ற கோட்பாடுகளை அறிமுகப்படுத்துவதில் ஆசிரியர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

user_14752

★ 5/5 Feb 02, 2026

மனிதன் படைத்த எத்தனையோ பொருட்கள், கருத்துக்களைப் போல கடவுள் என்பதும் மனிதனால் படைக்கப்பட்ட ஒன்று. அவனே படைத்துவிட்டு அவனே அதற்குப் பயப்படுபவனாகவும் மாறி விட்டான்.

user_14751

★ 4/5 Feb 02, 2026

தென்னிந்தியாவின் கிராமப்புற தெய்வங்கள், அவற்றின் தோற்றக்கதைகள், அவை சமூக-அரசியல்-பொருளாதார அமைப்பை எவ்வாறு வடிவமைத்தன, மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களின் ஆதிக்கம் பற்றி எளிமையாகவும் திறம்படவும் எழுதப்பட்ட புனைவல்லாத நூல். மதங்களின் தாக்கத்தை ஆராய விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

user_14750

★ 4/5 Feb 02, 2026

உலகில் கடவுள்களின் தோற்றமும் இருப்பும் ஆசை மற்றும் பயத்தின் காரணமாகவே இருக்கிறது என்று நினைத்திருந்தேன். எந்த மதக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதனை வணங்கினால் சொர்க்கம், இல்லையென்றால் நரகம் என்று மிரட்டுவதைக் காணலாம்.

ஆனால், தமிழ் மண்ணில் சில தெய்வங்கள் உள்ளன. எவ்வித வேத நூல்களின் துணையின்றி, எளிய மக்களால் வணங்கப்படுகிற மதுரைவீரன், முத்தாலம்மன், ஐஸ் காளியம்மன், வழிவிட்ட ஐயன்னார் என பல மக்கள் தெய்வங்கள் உள்ளன.

அவை பிற மத தெய்வங்களைப் போல, ஆசையினாலோ பயத்தினாலோ உருவான கற்பனை தெய்வங்கள் அல்ல. குற்ற உணர்வினாலும், ஆற்றாமையினாலும், அவர்களின் தியாகத்திற்காகவும் நினைவு கூறப்படும் மனிதர்கள்.

இந்த மக்கள் தெய்வங்களின் தோற்றத்தையும் மறைவையும் அழகாகப் பேசுகிறது இந்நூல். மானுட துயரங்களைப் பற்றி பேசிய அனைத்தும் பெரும் காவியங்கள் ஆகின்றன. சீலைக்காரி அம்மன், முத்தாலம்மன் கதைகளும் ஒரு காவியத்திற்கு இணையான மானுட துயரை பேசுகிறது.

கிறிஸ்தவத்தில் இருக்கிற தீண்டாமை, இஸ்லாம் அடிப்படைவாதிகளால் எதிர்க்கப்படுகிற தர்க்கா என்பது உண்மையில் என்ன — போன்ற பல கேள்விகளுக்கு இப்புத்தகம் விடை சொல்கிறது.

user_14749

★ 5/5 Feb 02, 2026

துளிர் அறிவியல் மாத இதழில் தொடராக வெளிவந்த, கடவுள்களையும் மதங்களையும் மனிதன் எப்படி தோற்றுவித்தான் என்ற வரலாற்றை பகுத்து ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பே இந்த சிறு நூல்.

16 அத்தியாயங்களில் கடவுள் மற்றும் மதங்களை இவ்வளவு நுணுக்கமாக தைரியத்துடன் விமர்சிப்பது கடினம். குழந்தைகளும் வாசிக்கும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது தனி சிறப்பு. பணக்கார மற்றும் ஏழைகளின் கடவுள்களுக்குள் இருக்கும் வித்தியாசம், சாதிய அடக்குமுறையின் வெளிப்பாடாக உருவாக்கப்பட்ட சாமிகள் என்று பல அறியப்படாத தகவல் அடங்கிய நூல் இது.

குழந்தைகள் மட்டுமல்லாமல் வயது வந்தோரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு குருநூல்.

user_14748

★ 4/5 Feb 02, 2026

நண்பர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இப்புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். சிறு தெய்வங்கள் என்று சொல்லப்படும் நாட்டார் தெய்வங்களின் தோன்றல், வழிபாடு, எவ்வாறு இச்சிறு தெய்வங்கள் பெரும் தெய்வங்களிலிருந்து மாறுபடுகின்றன, பெரும் தெய்வங்கள் எப்படி இச்சிறு தெய்வங்களை சுவீகரித்துக் கொண்டன என்பதை அடிப்படையிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

சிறு தெய்வங்கள் என்பது ஒரு மதத்திற்கு உட்பட்டது மட்டுமல்ல — கிறிஸ்தவ சமூகம், இஸ்லாம் சமூகத்திலும் சிறு தெய்வங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

இப்புத்தகம் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், பெரியவர்களால் அதிகம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.

user_14747

★ 3/5 Feb 02, 2026

கடவுள் என்பது மனிதனின் உருவாக்கம் தான். 1300 கிராம் எடையுள்ள மனித மூளையின் அதிசய கற்பனைப் பிண்ணலும், மழை, காட்டுத் தீ போன்ற இயற்கை நிகழ்வுகளால் மூளைக்குள் வேதியியல் மாற்றம் நடந்தது. அதன் அவதாரமாக அச்சம் பிறந்தது. அதன் உருவ வெளிப்பாடே கடவுளும் மதமும்.

நாமறிந்த கடவுள்கள் - சிவன், பிரம்மன், ராமன், கிருஷ்ணன், விநாயகர், முருகன் என்று நீளும். ஆனால் நாட்டுப்புற தெய்வங்கள் பற்றி நகர வாசிகள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவுதான். கிராமக்குடி வழி இருப்பவர்கள் மூலம் ஏழை தெய்வங்களின் கதைகள் அறிய நேரம் போதாது. கதைகள் அவ்வளவு!

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இந்த நாட்டார் தெய்வங்கள் எல்லாம் வாழ்ந்து இறந்த மனிதர்களே. கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல. தியாகம், தற்கொலைகளின் விளைவால் உயிர் இழந்தவர்களின் நினைவாக, தெய்வங்களாக மாற்றப்பட்டவர்கள். ஏழை மனிதர்கள், ஏழை தெய்வங்கள் ஆகின.

மதுரைவீரன், முத்தாலம்மன், வழிவிட்ட அய்யனார், சீனியம்மாள், சுடலைமாடன், தனகாளியம்மன், சர்க்கரையம்மாள் என்று பட்டியல் நீளும். இவர்கள் யாரும் பணக்கார கண்கட்டுவித்தை சாமிகள் இல்லை. மேல் சாதி மக்கள் யாரும் இந்த ஏழை சாமிகளை நெருங்கமாட்டார்கள். இவர்களுக்கு பிடிக்காத இந்த கிராம தெய்வங்கள் தான் புனிதமான தெய்வங்கள் எனக்கூறலாம்!

user_14746

★ 4/5 Feb 02, 2026

குழந்தைகளுக்கான புத்தகம் போல எளிமையாக இருக்கிறது. சிறு தெய்வங்களைப் பற்றிய அடிப்படை புரிதலை எளிய நடையில் தருகிறது.