Reviews for ஜிப்ஸி

30 reviews total

user_14629

★ 4/5 Feb 02, 2026

"தட்டில் சுடச்சுட சாப்பாடு கிடக்க கண்கள் மூடித் திறந்து ஓம் சாய் என்கிற உதடுகள், உணவளித்த கர்த்தரே உமக்கே ஸ்தோத்திரங்கள் என்கிற உதடுகள், பிஸ்மில்லா என்கிற உதடுகள்... எல்லாவற்றுக்கும் பசி!"

மதங்களைக் கடந்து பசி என்ற ஒரே உண்மையை அழகாகச் சொல்லும் வரிகள். ஜிப்ஸி புத்தகத்தின் ஆழமான தருணங்களில் ஒன்று இது.

user_14628

★ 5/5 Feb 02, 2026

"நெடும்பொழுது அனைத்தையும் அணிந்து நடக்கிறோம். சிறுபொழுது எல்லாவற்றையும் களைந்து கிடக்கிறோம். உயர உயரப் பறக்கின்ற பறவை ஓரோர் கணம் பறக்காமல் மிதக்கிறது. இப்படிதான் இருக்கிறது எல்லாமும்."

எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பிறகு பயணங்களைப் பற்றி உயிர்ப்பாக எழுதிய அழகான புத்தகம் இந்த ஜிப்ஸி!

user_14627

★ 5/5 Feb 02, 2026

தமிழ்நாட்டில் தொடங்கி காசி வரை நீளும் பயணங்களில் ஆசிரியர் ராஜூமுருகனுக்குக் கிடைத்த பட்டறிவை நம்முடன் அழகாய்ப் பகிர்ந்திருக்கிறார்.

நள்ளிரவில் குறி சொல்லும் தொழில் செய்பவருடன் சுடுகாட்டிற்குச் செல்வதாகட்டும், நாடெங்கும் சர்க்கஸ் நடத்தும் குழுவினரோடு நேரம் கழித்ததாகட்டும், நண்பர்களோடு நடந்த சிரிப்பூட்டும் நிகழ்வுகளாகட்டும், நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவதாகட்டும் - எல்லாம் நமக்கு உணர்த்துவது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதைத் தான்.

user_14626

★ 4/5 Feb 02, 2026

ஜிப்ஸி இயக்குநர் ராஜூமுருகன் எழுதிய சமூக நோக்கு கொண்ட படைப்பு. நாடோடி வாழ்க்கையை வாழும் மனிதனின் கதையைக் கொண்டுள்ளது. கதாநாயகன் மத எல்லைகளைக் கடந்த ஒரு மனிதன் - எந்த மதத்தையும் ஏற்காமல் மனிதத்தை மட்டுமே வழிபடுகிறார்.

மதம், இனம் ஆகிய எல்லைகளைக் கடக்கும் மனிதாபிமானக் கருத்துக்களும், சமூக யதார்த்தத்தை வெளிப்படுத்தும் தீவிர கதை சொல்லலும் இப்புத்தகத்தின் சிறப்பியல்புகள். மத வெறுப்பு, சமூக மோதல்கள் மற்றும் மனிதாபிமானம் பற்றிய ஆழமான சிந்தனைகளை வழங்கும் சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த தூண்டுதல்.

user_14625

★ 5/5 Feb 02, 2026

ராஜூமுருகன் சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதில் எப்போதும் சிறந்தவர். அவரது வார்த்தைகளும் கதை சொல்லும் பாணியும் என்னை அவரது பயணத்தின் ஒரு பகுதியாக மாற்றின. பயணத்தில் சந்தித்த மனிதர்களைப் பற்றியும், அவர்களின் கலாசாரத்தைப் பற்றியும் அவர்களின் சொந்த வார்த்தைகளில் எழுதியிருக்கிறார்.

சே குவேரா, ராகுல் சாங்கிருத்யாயன், அன்னை தெரசா, பிரபாகரன் போன்ற தான் மதிக்கும் நாடோடிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இது ராஜூமுருகனின் பயணம் மட்டுமல்ல, முதுகில் மலைகளைச் சுமக்கும் மனிதர்களின் கதைகள்.

user_14624

★ 5/5 Feb 02, 2026

நாடோடி மனிதர்கள் போகுமிடங்களெல்லாம் கூடு கட்டி வாழும் தற்காலிகப் பறவைகள். இரண்டு நாள் பயணம் செய்துவிட்டு முழு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதாக நம்பிக்கொள்வது போல அல்லாமல், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை ஜிப்ஸியில் சந்திக்கும் ஒவ்வொரு நிஜ கதாபாத்திரமும் கற்றுவிட்டிருக்கிறது.

அவர்களுக்குள் அழகியல்கள் கொட்டிக்கிடந்தும், நிரந்தர உறைவிடம் இல்லாமல், உணவின்றி வயிற்றுப்பிழைப்புக்கு அவர்கள் எடுக்கும் ஆயுதம் போராட்டம். எரிக்கும் வெயிலில் நெஞ்சில் ரத்தத்தை வழியவிட்டுக்கொண்டிருக்கும் சிறுவனைப் பார்க்கும்போது நாம் எத்தனை ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்த்தும் புத்தகம்.

user_14623

★ 5/5 Feb 02, 2026

"சாலையோரம் களிமண் பொம்மைகள் விற்கிற கும்பார் இனச் சிறுமி கொடுத்த பூச்சாடி, விடியலின் கருக்கலில் கமலாலயக் குளக்கரையில் கேட்ட நாழிமணிக்காரரின் பாடல், பூம்பூம் மாட்டுக்காரர் வீட்டில் பார்த்த கறுப்பு வெள்ளைக் கல்யாணப் புகைப்படம், கழைக்கூத்தாடியின் வீட்டில் நிறைந்த இரவு உணவு, மறக்கவே முடியாத நரிக்குறவப் பெண்ணின் புன்னகையும் ஸ்படிக மாலையும்..."

இவ்வாறு பல நாடோடி வாழ்வின் அழகியலை நம் கண்முன் விரிக்கிறார் ராஜூமுருகன். மரணத்தை முத்தமிட்டுத் திரும்பும் சர்க்கஸ் கலைஞர்களின் கலை மனமும், தூங்காமல் துரத்தி வரும் தெருக்கூத்துக் கலைஞனின் குரலும் மனதில் ஆழமாகப் பதிகின்றன.

user_14622

★ 5/5 Feb 02, 2026

ஓடிடி தளங்களில் வரும் தொடர்களை ஒரு அத்தியாயம் தவறாமல் பார்க்கும் ஆனால் வார இதழ்களில் வரும் தொடர்களைக் கண்டு கொள்ளாத பெரும்பாலானவர்களில் நானும் ஒருவன். அப்படி தவறவிட்ட ஒரு தொடர் தான் இந்த ஜிப்ஸி.

வாத்து மேய்ப்பவர்களும், பன்றி மேய்ப்பவர்களும், கழைக் கூத்தாடிகளும், நரிக் குறவர்களும், குடுகுடுப்பைக் காரர்களும், சர்க்கஸ் நடத்துவோரும், கம்பி மேல் நடந்து வித்தைக் காட்டுவோரும் என தினசரி நாம் கடந்து செல்லும் அத்தனை பேரும் ஜிப்ஸிகளே.

தான் கொண்ட உடல் மட்டும் சொந்தம் என மற்ற அத்தனைக்கும் உத்தரவாதமின்றி திரியும் இவர்கள் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதற்குச் சிறந்த உதாரணம். இவர்களின் அனுதின வாழ்க்கைப் போராட்டமும், மாறும் சூழலுக்கு ஏற்ப தங்களின் பிள்ளைகளை மீட்க மேற்கொள்ளும் புது முயற்சிகளும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பயணங்கள் வாழ்க்கையை மாற்றும் வல்லமை பெற்றவை.

user_14621

★ 4/5 Feb 02, 2026

பொதுவா நம்ம பயணங்கள் எல்லாம் இனிமையா இருக்க காரணம் திரும்பி வந்து இளைப்பாற வீடும், மூன்று வேலை பசியை போக்க உணவும் இருக்கிறது தான். ஆனா ஒரு ஜிப்ஸியின் பயணம் அப்படியானது இல்லை - எங்கோ பிறந்து, தாய் மண்ணை விட்டு, தேசங்கள் கடந்து தெருக்களில் வாழ்ந்து நாட்களை கடத்த அவனுக்கு இருக்க ஒரே காரணம் பசி மட்டும் தான்.

நாம் பொது புத்தியில் சொல்கிறோம் பேசாம ஒரு நாடோடி வாழ்க்கையை வாழ்ந்துட்டு போகலாம் என்று. அதை எல்லாம் இந்த புத்தகம் அடித்து சுக்குநூறாக உடைத்திருக்கு. ஒரு நாடோடி வாழ்க்கையில் எவ்வளவு சிரமங்கள், பசிக்கான போராட்டங்கள், அடக்குமுறைகள்!

ஒரு ஜிப்ஸியின் சிந்தனையும் தத்துவங்களும் மானுடத்தைப் பற்றிய புரிதலும் நாம் கொண்டாடும் எந்த சிந்தனையாளர்களுக்கும் குறைவே இல்லை. ஆனா அது படித்துக் கற்ற அறிவு இல்ல, அவனுடைய பயணமும் வாழ்வியலும் போதித்த பாடங்கள்.

உலக இலக்கியங்களுக்குச் சற்றும் குறைவில்லாத காதல் கதை தான் சர்க்கஸில் நிற்கும் வில்லிபுட் மணியின் காதல் கதை. இப்படிப்பட்ட நான் சந்தித்திராத, சிந்தித்திராத எளிய மனிதர்களின் வாழ்வியலை உயிரோட்டமாக பதிவு பண்ணியிருக்காரு ராஜூமுருகன்.

பயணங்கள் என்பது காடு, மலை, கடல் எல்லாத்தையும் தாண்டி மனித மனத்தையும் அவனின் கலையையும் புரிந்து கொள்வது தான் உண்மையான பயணம் என்று ராஜூமுருகனின் ஒவ்வொரு பயணமும் புரிய வைத்திருக்கு.

user_14620

★ 4/5 Feb 02, 2026

காசியில் இருந்து கலிஃபோர்னியா வரை மனிதம் மட்டுமே நிச்சயம் என்பதை உணர்த்தும் புத்தகம். எங்கு சென்றாலும் மனிதர்களுக்கிடையேயான பிணைப்பு மட்டுமே நிலையானது என்ற ஆழமான செய்தியை அழகாகச் சொல்கிறது.