மரி என்கிற ஆட்டுக்குட்டி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மரி என்கிற ஆட்டுக்குட்டி

Mari Engira Aattukutti

4.38/5 · 55 ratings

மரியை எனக்குத் தெரியும் அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள் வசதியான குடும்பம் தெருவில் மூன்று காரிகள் நின்றன நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள் வீட்டில் அம்மா இல்லை அதாவது குழந்தையிடம் இல்லை அப்பா பணம் பண்ணிக்கொண்டிருந்தார் அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள் அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள். குழந்தைகள் பெற்றோர்களிடம் ஆசிரியர்களிடம் உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறா…

Reviews

user_14605

★ 5/5
அருமையான தொகுப்பு. மயிலிறகால் வருடும் வாஞ்சை. என்னை மிகவும் ஈர்த்த 5 சிறுகதைகள்: 1. அந்த மனிதர் 2. வாசனை 3. அபஸ்வரம் 4. அப்பாவுக்கு தெரியும் 5. அமரத்துவம்

user_14604

★ 4/5
Revelation: "Grass is Greener wherever I stand"

user_14603

★ 5/5
It’s more of thought and reflections of own self , very good narrative, engaging Addictive Will read more prabanjan, no doubt

user_14602

★ 4/5
One of the best short stories I had ever read. Made me cry

user_14601

★ 5/5
Author strongly re-iterates on the point of 'Dont judge a book by it's cover ✌️

user_14600

★ 5/5
அற்புத மரி, பள்ளியிலேயே ஒழுக்கங்கெட்டுப்போய் திரியும் மாணவி என்று தலைமை ஆசிரியர் எப்பொழுதும் வசைபாடியே வாழ்க்கையை ஓட்டி வந்தார். அவளது வளர்ப்பு, வாழ்க்கை, நடவடிக்கை, உடல் என எல்லாமே விமர்சனத்திற்கு உரிய தலைப்பாகிறது. தமிழ் ஆசிரியர் மட்டும் இந்த‌ குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்து, சுமதி டீச்சரை அழைத்துச் சென்றார் மரியின் வீட்டிற்கு. அங்கு நுழைந்ததுமே அவருக்கு பல விஷயங்கள் புரிய வருகிறது. நாம் என்ன செய்கின்றோம்? ஒருவரின் சுபாவத்தை சுலபமாக எடை போடுகிறோம். அவர் அப்படித்தான், இவள் இதுதான், இவளை திருத்த‌ முடியாது, அவனோ ஓர் ஊதாரி. இதையெல்லாம் சொல்ல நாம் என்ன புத்தரா இல்லை இயேசுவா? நாமோ, மனிதர்களாக வாழும் அர்ப பதர். நாம் சரியாக இருக்கிறோமா என்பதை அறிவதே நமக்கு அழகு. பிரபஞ்சனின் இக்கதை, அடுத்தவரிடம் குற்றச்சாட்டுகளை வைக்காமல், கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. 'அரி என்கிற ஆட்டுக்குட்டி' என்னை நிறையவே சிந்திக்க வைத்தது விட்டது. நீங்களும் படித்து மகிழுங்கள்.

user_14599

★ 5/5
திரு. பிரபஞ்சன் அவர்களின் படைப்பான 'மரி என்கிற ஆட்டுக்குட்டி', நான் படிக்கும் முதல் புத்தகமாகும். இதன் தலைப்பை கண்டு, இப்புத்தகத்தின் பின்புறத்தை காணதவரை, இது ஒரு ஆட்டுக்குட்டியின் கதையாக தான் இருக்கும் என்று எண்ணி இதை நம் மனம் தேர்ந்தெடுக்கும். பின்பு வாசிப்பை தூண்டும் விதமாக இதன் பின்புறம் அமைந்து, நம்மை மேலும் ஆசிரியரின் எழுத்துக்கள் அன்புக்கு ஏங்கும் ' மரி ' யாரென தெரிந்துகொள்ள நம்மை இழுத்துச் செல்லும். நன்றி, By @Yeano_Thano_Ezhuthu.

user_14598

★ 5/5
அழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திரப் படைப்பு, மனித உணர்வுகளை நுணுக்கமாக ஆராயும் தன்மை, இது எல்லாம் தான் இந்த கதை ஆசிரியரின் சிறப்பு. இந்த பிரபஞ்சமே அன்பினால் தான் இயங்குகிறது என்று ஆணித்தனமாய் எடுத்து வைக்கும் பிரபஞ்சன் எழுதிய மரி என்னும் ஆட்டுக்குட்டியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். காலம் தன் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை ஒரு பெண் உடைக்கும் போது அவள் சந்திக்கும் நிராகரிப்பு, அவள் இயல்பை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்பதை இந்த கதை சொல்லும். சிந்தனைகளில் வக்கிரத்தை வைத்துக் கொண்டு வெளியில் தான் ஒரு கலாச்சார சீர்த்திருத்தவாதி என்று சிலர் காட்டிக் கொள்வார்கள். அவர்களின் கன்னங்களில் ஓங்கி அறைவது போல் இருக்கும் இந்த கதை. இந்த கதை தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்த ஒன்று. நாம் சில மனிதர்களை சுலபமாக எடை போட்டு விடுகிறோம். ஒருவரின் சுபாவத்தை நாம் காணும் கண்ணோட்டத்தில் முடிவு செய்து விடுகிறோம். இந்த கதை ஒரு மனிதனின் புறத்தோற்றத்தை தாண்டி அக அழகையும் காண சொல்லித் தருகிறது. "Everyone is fighting a battle you know nothing about" .Be Kind Always!
Shelves
பிரபஞ்சன் book

More like this


தபால்காரர் பொண்டாட்டி[Thabalkarar Pondati]

தபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு த…

4.38/5 · 55 ratings

தீயிலே வளர்சோதி

ஆளுமைமிக்க மனித சமுதாயத்தின் பலம் அறிவு எனச் சொல்லப்படுகிறது. இந்த அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடம் எழுப்பப்படுகிறது. அறிவுக்கு அடிப்படையாக இருப்பத…

4.38/5 · 55 ratings

பதவி

மாறாக குறிப்பிடாதவரை எண்கள் ஆண்டுகளை குறிக்கின்றன. சில நாடுகளில் ஒரே காலளவுள்ள தேர்தல் காலம் வரையறுக்கப்படுவதில்லை, பணிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டமன்றங்கள் கலைக்கப்படு…

4.38/5 · 55 ratings

பிரபஞ்சன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும் சேர்த்து (முழுத்தொகுப்பு)

பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள் அன்பால் மட்டுமே …

4.38/5 · 55 ratings

பெண்

பெண்ணைப் பற்றி வரலாற்றுப்பூர்வமாக இலக்கிய ஆதாரத்துடன் எழுதப்பட்ட படைப்பு ஆவணம்.

4.38/5 · 55 ratings

பிரபஞ்சன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)

பிரபஞ்சன், வெகுஜனப் பத்திரிகைகளில் அதிகம் எழுதியிருந்தாலும் கதைகளில் இலக்கியத் தரம் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொண்டவர். பெண்களின் உள்ளுணர்வுகளையும் ஆதங்கங்களையும் வேட்கைகள…

4.38/5 · 55 ratings

இருட்டின் வாசல்

இது ஆண்டாளின் மாதம். மார்கழி மாதம், என்றும் இதைச் சொல்லலாம். இந்தமாதத்தைத் தான் தேவ குமாரனாகிய இயேசு, தான் பிறக்க உகந்த பாதமாகத் தேர்ந்தெடுத்தார். கிருஷ்ணன், கிருஸ்துவுடன் …

4.38/5 · 55 ratings

அந்தக் கதவு மூடப்படுவதில்லை

பிரபஞ்சன் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். ச…

4.38/5 · 55 ratings

கண்ணீரால் காப்போம்

நாடாளும் ராஜாக்களின் வீரதீரங்களையும் , காதலையும் , கம்பீரத்தையும் , ராஜ்யங்களின் வளங்களையும் , வரைபடங்கள் சொல்லும் கதைகளையும் மட்டுமே வரலாற்றுப் புனைவாக சொல்லப்பட்டு வந்த க…

4.38/5 · 55 ratings

தாழப்பறக்காத பரத்தையர் கொடி

பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பிரபஞ்…

4.38/5 · 55 ratings

பிரபஞ்சன் கட்டுரைகள்

காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பெற்றுள்ளவை, முதன்முதலாகப் புத்தகவடிவம் பெற்றுள்ளன. சமூக அக்கறையும் பண்பாட்டு விழிப்புணர்வும் கொண்ட பி…

4.38/5 · 55 ratings