Reviews for ஹிப்பி
21 reviews total
user_14533
★ 5/5 Feb 02, 2026அழகான தமிழ் வளம். 26 வது ஹிப்பியாக வாழ்ந்த உணர்வை தந்தது. இயற்கையோடு இணைந்த ஹிப்பி வாழ்க்கையின் சுதந்திர உணர்வை இந்த நாவல் அழகாகச் சொல்கிறது.
user_14532
★ 4/5 Feb 02, 2026மிகவும் சுவாரஸ்யமான கதை சொல்லல். ஹிப்பிகளின் வாழ்க்கை முறையை இயற்கையோடும் மனித வாழ்க்கையோடும் அழகாக சொல்கிறார்.
இரு வேறு பகுதிகளாக நகரும் கதை ஒரே இடத்தில் சேரும் விதம் நான் சற்றும் எதிர்பார்த்திராதது. ஒரே தடவையில் வாசித்து முடிக்கும் அளவிற்கு மிகவும் சிறப்பான, தனித்தன்மையான எழுத்து.
user_14531
★ 4/5 Feb 02, 2026ஹிப்பி — இவ்வாறு ஒரு வகை மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதே இந்த புத்தக வாயிலாகத்தான் நான் அறிந்து கொண்டேன்! எல்லைகள் அற்ற நிலையில் இருக்கும் வாழ்வு! நான் என்னை இந்த கட்டமைப்புக்குள் இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு கோடுபாடுகள் இல்லாமல் வாழ்வது ஹிப்பி.
ஹிப்பியின் வாழ்க்கை எதார்த்த வாழ்வோடு கலந்து சொன்ன நாவல்! திருவண்ணாமலை, பஸ் டிப்போ, மாரியம்மன் கோவில் தெரு, ஜவ்வாது மலை — நம்மை அந்த எதார்த்த உலகம் கொள்ளும்! அய்யனார் விஸ்வநாதன், இந்த நாவல் தந்த வாசிப்பு அனுபவம் அருமை!
user_14530
★ 4/5 Feb 02, 2026தமிழ் புனைவுலகில் புதுமையான கதைக்களம். சுவாரஸ்யமான கதை சொல்லல் முறை. நிலம், நீர், தாவரங்கள் என இயற்கையின் ஒவ்வொரு அங்கத்தையும், இசையையும் வார்த்தைகளின் வழியே வாசகனை உணர வைத்து விடுவது சிறப்பு.
வாசித்து முடிக்கும் போது ஹிப்பியாய் வாழ்ந்து விட்ட ஒரு துண்டு நினைவும், சொற்களால் விவரிக்க இயலாத ஒரு மெல்லிய துயரும் எஞ்சி நிற்கின்றன.
user_14529
★ 4/5 Feb 02, 2026இந்த உலகில் வாழ எந்த காரணமும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவன். எதேச்சையாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைக்கும் வெள்ளைக்காரர்களுடனான நட்பு. அவர்களுடனான மலைப் பயணம். அவர்களுடன் சேர்ந்து ஹிப்பி மன நிலையை அடைந்து மறுபடியும் தன் இருப்பிடத்திற்கே திரும்புவது என்று ஒருவனின் மனநிலையில் பயணமாக எழுதி இருக்கிறார்.
மிக சுவாரஸ்யமான விறுவிறுப்பான மொழி நடையில் எழுதப்பட்டிருக்கும் நாவல். சமீபமாக வாசித்த நாவல்களில் மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது. அய்யனார் விஸ்வநாதனின் ஓரிதழ்ப்பூ மற்றும் பசி நாவல்களும் தமிழ் புதினங்களில் ஒரு சிறப்பான முயற்சி. இந்த நாவலுக்கும் ஓரிதழ்ப்பூவுக்கும் தொடர்புள்ளது, ஓரிதழ்ப்பூ வாசிக்கப்பட வேண்டிய நாவல்.
user_14528
★ 3/5 Feb 02, 2026எனக்கு இந்த எழுத்தாளரை அறிமுகப்படுத்தி இந்த புத்தகம் எனது புத்தக அரங்கில் இடம் பெறக் காரணமாயிருந்தது.
எழுத்தாளர் தனது சொந்த ஊரில் இருக்க முடியாத காரணத்தால், அவரது படைப்பு திருவண்ணாமலையில் இருந்து தொடங்குகிறது. தன் தாயை இழந்த பிறகு, கல்லூரி படிப்பில் நாட்டம் இல்லாமல் இருக்கும் ஒருவன், ஆட்டோ ஓட்டுனராக தன் வாழ்க்கையைத் தொடங்குகிறான். அவனுக்கு அறிமுகமான வெள்ளைக்காரர்களுடன் ஜவ்வாது மலைக்கு செல்கிறான்.
அங்கே அவனுக்கும் நமக்குமான ஹிப்பி பயணம் தொடங்குகிறது. அங்கே நடந்த சம்பவங்கள், ஜோன், மீரா, நிவேதா, மேக் இவர்கள் யார்? அலமேலு இவன் வாழ்வில் வந்தது எப்படி? என்பது மீதி பக்கங்களில் காண்பீர்கள். ஒரு ஹிப்பியாக முழுமையாக வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்தது. எழுத்தாளரின் மற்ற படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிய புத்தகம்.
user_14527
★ 3/5 Feb 02, 2026இக்கதையின் போக்கு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. மிகவும் சுதந்திரமாக உணர முடிந்தது. Ari Aster-இன் Midsommar படத்தில் வரும் அந்த நீளமான சமவெளியை கதை நடக்கும் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதிக ஈடுபாட்டுடன் வாசிக்க முடிந்தது.
இந்த கதைக்கும் அந்த படத்திற்கும் ஒற்றுமை இல்லை என்றாலும் அந்த படத்தின் கதைக்களம் இந்த நாவலில் உணர முடிந்தது. கதையின் முடிவும் நன்றாகவே இருந்தது. இசையுடனும், போதையுடனும், இயற்கையுடனும் நாமும் பிணைந்திருப்போம் வாசிக்கையில்...
user_14526
★ 5/5 Feb 02, 2026இந்தியாவில் வெளிநாட்டினர் அதிகம் வரும் இடங்களுக்கு தனியாகப் பயணித்திருக்கிறேன். ஹம்பியில் ஹிப்பி தீவு என்ற இடம் உண்டு. கோவா, கோகர்ணா, வர்கலா, புதுச்சேரி, திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் இது போன்ற இடங்கள் உள்ளன. தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பயணம் செய்யும் சிலரிடம் பேசியிருக்கிறேன். அவர்களைப் போல் ஒரு நாள் நானும் துணிவாக ஏதாவது செய்வேன் என்று எப்போதும் நினைத்திருக்கிறேன்.
இந்த புத்தகம் அப்படிப்பட்ட ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. காட்டுக்குள் ஒரு முகாம், அங்கே எல்லாம் எல்லையற்றது. ஆனால் தப்பிக்க முடியாத நிஜமும் உண்டு. அழகான வாசிப்பு அனுபவம். புத்தக அட்டைப்படம் பிரமாதம். தொடக்கத்தில் மெதுவாக நகர்ந்தாலும், படிப்படியாக வேகம் பிடித்து ஒரே அமர்வில் படித்து முடித்தேன்.
user_14525
★ 5/5 Feb 02, 2026குறுநாவல். தமிழ் இலக்கியத் தளத்தில் புதிய கதைக்களம். அருமையான மொழிநடை.
நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு ஹிப்பியாக வாழ்ந்து முடித்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும். கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
user_14524
★ 5/5 Feb 02, 2026படிக்கப்படிக்க நானே ஒரு ஹிப்பியாக ஆசைப்பட்டேன். ஆசிரியரின் மொழிநடை சிறப்பாக இருந்தது.
போதைப்பொருள் பயன்பாடு, சாமியார்கள் நடத்தும் ஆசிரமம் சார்ந்து இயங்கும் குழுக்களில் அதிகம் என்பதை இந்த நூலில் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார். அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.