அண்ணாந்து பார் [Annanthu Paar]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அண்ணாந்து பார் [Annanthu Paar]

None

4.28/5 · 83 ratings

அறிஞர் அண்ணாவின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம். மிகச்சுருக்கமாக எழுதப்பட்டிருப்பினும் இவ்வாழ்க்கை வரலாறு, ஒரு கடலை விழுங்கிய குடம்!

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_14439

★ 4/5
Well written biography of annadurai life. Very interesting to read without boring words. But other negative portions of his life is not explained in this book. It shows only on positive way. Political state at that time of his period was not explained in that book. I think that is must need while reading a biography to get better understanding about the personality.

user_14438

★ 5/5
தமிழ்நாடு திராவிட அரசியலின் தோற்றம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த புத்தகம்.

user_14437

★ 4/5
A precise biography of Anna revolving around his political career and personal life. The growth of Anna as well as DMK are the spot light. A good read .

user_14436

★ 4/5
Inspirational one. Biography of a person who came from non political background and exiled Congress from the state.

user_14435

★ 4/5
எதையும் தாங்கும் இதயத்தை பற்றிய அருமையான புத்தகம். பல அரிய தகவல்கள். அண்ணாவை பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை இப்புத்தகம் அளிக்கும்.

user_14434

★ 5/5
பல தலைவர்களின் தலைவிதியை , அரசியல் நிர்ணயித்திருக்கிறது . ஆனால் , தமிழக அரசியலின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அண்ணா மட்டுமே ! மக்களை விட்டு விலகி நிற்காமல் , அவர்களோடு தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் செய்த முதல் தலைவர் அண்ணா . அதனால்தான் அவருக்கு லட்சக்கணக்கான தம்பிகள் . வேறு யாருக்குமில்லாத பலம் இது . யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவராக அவர் திகழ்ந்தார் . அண்ணாவின் வாழ்க்கையை ஓர் அரசியல் தலைவரின் வாழ்க்கையாக மட்டும் பார்க்காமல் , எவ்விதப் பின்னணியும் இன்றி அரசியலுக்குள் நுழைந்த ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞர் , தம் கனவுகளை எப்படி படிப்படியாக நனவாக்கி வெற்றி கண்டார் என்கிற கோணத்தில் பார்த்தால் , ஏராளமான வெற்றி ஃபார்முலாக்கள் அகப்படும் .

user_14433

★ 4/5
இந்தியா: காந்திக்கு பின் (India After Gandhi) என்ற புத்தகத்தில், The Rise of Regional Politics என்ற தலைப்பின்கீழ் இந்தியாவின் முதல் மாநில கட்சியாக ஆட்சி அமைத்த திராவிட முன்னேற்ற கழகம் பற்றி ஒரு delhi-centric பார்வையில் எழுதியிருப்பார் ராமச்சந்திர குஹா. Delhi-centric யாதெனில், திராவிடர் கழகம் மேற்கொண்ட அரசியல் மற்றும் சமுதாய சீர்திருத்த முன்னேற்றங்களை முற்றிலும் புறந்தள்ளி, அன்றைய தமிழக மக்கள் ஏற்றுக்கொண்ட சுயமரியாதை, மொழிக்கு முக்கியத்துவம் மற்றும் அரசியல் தன்னாட்சி போன்ற கோட்பாடுகளை ஒரு குறுகிய மனப் பாங்காக கருதுவது தான். அத்துடன் இல்லாமல், இத்தகைய கோட்பாடுகள் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதாக சித்தரிப்பதும் தான் delhi-centric approach. அவித அணுகுமுறையை எதிர்த்து அன்றே சமரசம் இன்றி சண்டை செய்தவர் Mr. அண்ணாதுரை B.A (Hons) M.A. Economics & Political Science. அண்ணா என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழர்களால் இன்றும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டுருக்கிறது. எதையும் தாங்கும் இதயமென வங்கக்கடலோரம் துயில் கொண்டிருக்கும் அந்த மாமனிதனின் வாழ்க்கையை 180 பக்கங்களில் சுறுக்கிவிடுவது அநீதி என்றாலும், அண்ணாவை பற்றி தெரிந்து கொள்ள ஒரு தொடக்கநிலை புத்தகமாக இப்புத்தகத்தை கட்டாயம் படிக்கவேண்டும். சென்ற ஆண்டு வீடடங்கு நாட்களில் நான் மாபெரும் தமிழ் கனவு புத்தகத்தை படித்தேன். பெரும்பாலும் delhi-centric ஆங்கில அரசியல் மற்றும் வரலாறு நூல்களையே படித்த எனக்கு அந்த புத்தகம் தான் தமிழில் மேலும் பல அரசியல் மற்றும் வரலாறு புத்தககங்கள் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. காரணம், அண்ணா எனும் சகாப்தம் தமிழ் நாட்டின் அரசியலை செதுக்கிய ஒன்று. இந்தியாவின் ஜனநாயக பண்புகளை பாதுகாத்தவர் என்று நேருவை குறிப்பிடுவதுண்டு. அதேபோல், தமிழ் மக்களை ஜனநாயகப்படுத்தியதில் அண்ணாவின் பங்கு பெரிது. அன்றுவரை மேல் தட்டு வர்க்கத்தினரிடம் இருந்த அதிகாரத்தை சாமானியனுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் பகிர்ந்தளித்தவர் அண்ணா. பெரியாருடன் அண்ணாவிற்கு தனிநபர் வேறுபாடு மற்றும் அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கை முரண்கள் என்றும் இருந்ததில்லை. பெரியார் வகுத்த கொள்கைகளுக்கு சட்ட வடிவம் கொடுத்தவர் அண்ணா. சி.என். அண்ணாதுரை சி.எம். அண்ணாதுரை ஆகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்ய முடிந்தாலும், அண்ணா அந்த இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனைகளோ பல. சுயமரியாதை திருமணங்களை சட்டப்படி அங்கீகரிக்கச்செய்தது , மே தினத்தை பொது விடுமுறையாக அறிவித்தது, அரிசி தட்டுப்பாட்டை ஒழித்தது, தமிழ் நாடு பெயர் சூட்டியது என அண்ணாவின் ஆட்சி ஒரு நிறைவான ஆட்சியாகவே அமைந்தது. 'ஜனநாயகம் என்பது எண்ணிக்கையின் அடிப்படியில் அமைவது அல்ல. அது கருத்துக்களின் அடிப்படையில் அமைவது. என் எதிர்தரப்பு சொற்ப எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களின் கருத்துக்களின் நியாயத்தின் பொருட்டு முடிவு அமைவது தான் ஜனநாயகம்' என்று காந்தி கூறுவார். அவ்வாறாக அண்ணா சாதுர்யமான பேச்சால் தர்க்கபூர்வமாக எதிர்கொண்டு தன் கருத்து சிறுபான்மையில் உள்ளதை உணர்ந்தும் எதிர்க்கருத்துடையவரை தன் வயப்படுத்தும் உத்திக் கொண்டவர். இதனை அவரது பிரிவினை தடுப்பு சட்ட மசோதாவிற்கு எதிரான வாதத்தில் காணலாம். தனிநாடு கோரிக்கையை இந்திய இறையாண்மைக்குள் ‘மாநில சுயாட்சி’ என்று காலத்திற்கேற்ப மாற்றி பொருத்தியது, பெரியாரின் தீவிர திராவிட கருத்துகளை populist வழிநடைகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தது என்று இவர் ஏன் பேரறிஞர் என்று அழைக்கப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள இந்த புத்தகத்தை அனைவரும் படிக்கவேண்டும்.

user_14432

★ 5/5
C.N.Annadurai - The storm made a powerful impact and changed the fate of 20th Century Tamil Nadu Politics. The Prince of Dravidian Movement, Social Justice and Rationalism. Salute to him!
Shelves
என். சொக்கன் Biography book

More like this


கூகிள் பயன்படுத்துவது எப்படி

டேப் டு டிராஸ்லேட்( Tap to Translate) என்ற சிறப்பம்சத்தை பயன்படுத்த வேண்டுமானால், பயனர்கள் முதலில் சமீபத்திய அப்டேட்ஸ் கொண்ட கூகிள் மொழிபெயர்ப்பு செயலியை டவுண்லோடு செய்ய …

4.28/5 · 83 ratings
Check Price

மாணவர்களுக்கான தமிழ் பாகம் 1

சரளமாக நல்ல தமிழில் எழுதவேண்டும் என்னும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் எழுத அமர்ந்தால் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நம்மை ஆட்கொண்டுவிடுகின்றன. கோர்வையாக எழுதவேண்டும…

4.28/5 · 83 ratings
Check Price

லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி

விண்ணை முட்டும் கட்டடங்களாகட்டும், உற்பத்தியைப் பெருக்கும் இயந்திரங்களாகட்டும் - இரும்பு இல்லையேல் எதுவுமில்லை. இரும்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தி லக்ஷ்மி மிட்டல். இந்தியா என…

4.28/5 · 83 ratings
Check Price

ஃபேஸ்புக் வெற்றிக் கதை

இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்? இனம்,…

4.28/5 · 83 ratings
Check Price

Kamaraj: The Life and Times of K. Kamaraj

To many, Kumarasami Kamaraj’s story is the stuff of legends. His political career afforded him many roles, and he is recognized till today for his…

4.28/5 · 83 ratings
Check Price

வைட்டமின்கள்

வைட்டமின்களின் அத்தியாவசியம் என்ன? வைட்டமின்களின் தேவை எவ்வளவு? எந்தெந்த உணவுப் பொருள்களில் வைட்டமின்கள் உள்ளன? வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்பது உ…

4.28/5 · 83 ratings
Check Price

சர்வம் ஸ்டாலின் மயம் [Sarvam Stalin Mayam]

Author: Marudhan

உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத்…

4.28/5 · 83 ratings
Check Price

பில் கேட்ஸ்

பில் கேட்ஸுக்குப் பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை. தன் அறிவுப் பசிக்குத் தீனி போட புத்தகங்களை நாடினார். தொழில்நுட்பம் அவரை ஈர்த்துக்கொண்டது. கம்ப்யூட்டர் மேல் ஆர்வம் வந்தது. பள்ளிப் …

4.28/5 · 83 ratings
Check Price

அணிலாடும் முன்றில்

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…

4.28/5 · 83 ratings
Check Price

Karukku

Author: Bama Translator: Lakshmi Holmström

In 1992 when a Dalit woman left the convent and wrote her autobiography, the Tamil publishing industry found her language unacceptable. So Bama Fa…

4.28/5 · 83 ratings
Check Price