Select a cover image
Searching for images...
Saving cover image...
கறுப்பர் நகரம் [Karuppar nagaram]
- பக்கங்கள்
- 352
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Bharathi Puththakalayam
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DM1N39SK
இந்தப் புதினம் யாரைப் பற்றியுமான வரலாறு இல்லை. ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள். சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இடங்களும் கட்டிடங்களும் அப்படியே. நம்மைச் சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும், காதலும் வாழ்வதற்கான வேட்கையும், மொழியும், வைராக்கியமும, அறியாமையும் எனப் பலவிதமான சூழல்களை நாம் கண்டிருப்போம்.
user_14142
★ 4/5எளிய மனிதர்களின் வாழ்வும், காதலும், அரசியலும் தான் கறுப்பர் நகரம். பாளையம் பேசும் அரசியல் முக்கியமானது என்று நினைக்கிறேன். சென்னையின் மாற்றம் இதில் தெளிவாகக் காட்டப்படுகிறது.
user_14141
★ 5/5சென்னை என்றதும் நினைவில் வருவது கடற்கரை, துறைமுகம், பழங்காலக் கட்டிடங்கள் என விரியும். ஆனால் கூவம் நதிக்கரை ஓரமாக வாழும் ஆயிரக்கணக்கான குடிசைகளையும் அதற்குள் வாழும் மனிதர்களையும் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. அவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டது இந்நாவல்.
முதலாளி-தொழிலாளி வர்க்க முரண்பாடும் அதன் விளைவாக எழுந்த புரட்சியும் இந்நாவல் பேசுகிறது. செங்கேணி-ஆராயியின் காதல் வாழ்வும், கல்வியின் முக்கியத்துவமும், கள்ளச் சாராய விற்பனையால் சீரழியும் குடும்பங்களும், காவலர்களின் ஒழுக்கக்கேடும் — சாதாரண மனிதர்களை எந்த அளவு பாதிக்கிறது என்பதைக் காட்டியுள்ளார்.
கோபமும், இயலாமையும், காமமும், தனிமையும், அரசியலும் ஒரு மனிதனை எந்த அளவுக்கு இட்டுச் செல்லும் என்பதைக் கட்டியமைத்துள்ளார் கரன் கார்க்கி. இந்நாவல் சென்னையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாற்றுச் சரித்திரம் என்பதில் ஐயமில்லை.
user_14140
★ 4/570களின் வட சென்னைக்கு உண்மையிலேயே அழைத்துச் சென்றது. காதல், வறுமை, பெரியாரிசம், சாதியம், பெண் வலிமை — அந்தக் காலத்தில் நிலவிய கிட்டத்தட்ட எல்லா சமூகப் பிரச்சனைகளையும் தொட்டுச் சென்றது.
ஆரம்பிப்பது சற்று கடினம், ஆனால் ஒரு கட்டத்தில் மிகவும் சுவாரசியமாகிறது. நல்ல புத்தகம்.
user_14139
★ 5/5பழைய மெட்ராஸை என் கண் முன்னால் அப்படியே பார்த்தேன். இந்தப் புத்தகம் பல சித்தாந்தங்களைப் பேசுகிறது. செங்கேணி, ஆராயி என்ற முக்கியக் கதாபாத்திரங்கள் மிகவும் பிடித்தன. முடிவு இதயத்தைப் பிழியும் — இறுதியில் செங்கேணிக்கு இந்தக் கொடிய உலகிலிருந்து சிறிது அமைதி கிடைத்தது.
user_14138
★ 5/5எல்லா உணர்வுகளும் சரியான அளவில் கலந்த முழுமையான கதை!