Reviews for பிரபாகரன் வாழ்வும் மரணமும்

28 reviews total

user_13407

★ 5/5 Feb 02, 2026

இது எப்பக்கமும் சார்பில்லாமல் எழுதப்பட்ட வரலாற்று நூலாகும். நடந்தவற்றைத் திரும்பிப் பார்க்கையில் உணர்ச்சிவயப்படாமல் இருக்க முடியவில்லை. நடுநிலையாகப் பார்ப்போர்க்கும் மேதகு பிரபாகரன் அவர்கள் ஒரு மாபெரும் மனிதராகவே தெரிகிறார்.

நேசநாடான இந்தியாவும் துரோகமிழைத்து விடுதலை உணர்வையும் சமத்துவத்தையும் கழுவிலேற்ற, பல கொடுங்கோற்கைகளால் கழுத்து நெரிக்கப்பட்டு மாய்கிறது சமத்துவமும் விடுதலையுணர்வும். இதைத் தமிழர் பிரச்சினையாய் மட்டும் பார்க்கவியலாது, மனிதகுலத்திற்கேயான பிரச்சினையாய் அணுகுவதே ஏற்புடைத்து.

பிரபாகரன் அவர்களின் சுபாவமே அநியாயத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாததாகவே இருப்பது தெரிகிறது. ஐந்து வயதான பிரபாகரன் தன் தந்தையிடம் "அப்பா, நாம் ஏன் அவர்களைத் திரும்பி அடிக்கவில்லை?" என்று கேட்பது அவரது போராட்ட குணத்தின் விதையாக இருக்கிறது.

விடுதலையையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட எண்ணற்றத் தோழர்கள் பட்டபாடெல்லாம் உலக அரசியலுக்கு இரையானது வரலாற்றில் நடந்த பெரும் பிழையாகும்.

user_13406

★ 5/5 Feb 02, 2026

பா.ராகவன் எழுதிய இந்தப் புத்தகத்தில் எப்போதும்போல் நிறைய ஆராய்ச்சிப் பணிகள் இருப்பதை பக்கங்களைப் புரட்டத் தொடங்கியதுமே உணர முடிகிறது. செய்திகளைப் பார்க்கும்போது தமிழ் ஈழ மக்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது — இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது ஒரு இனப்படுகொலை போன்றது என்று மட்டுமே தெரியும்.

இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, பிரச்சனை எங்கு தொடங்கியது, தமிழ் மக்களின் உண்மையான கோரிக்கை மற்றும் துன்பம் என்ன என்பது குறித்து தெளிவான புரிதல் கிடைத்தது. என்னைப் போன்ற இளைய தலைமுறையினருக்கு மிகச் சிறந்த வாசிப்பு.

user_13405

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தை எழுதிய பா.ராகவனுக்கு நன்றியும் பாராட்டும். என் முன்னோர்களின் காலகட்டத்துக்கு என்னை அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி.

ஒவ்வொரு பக்கமும் உணர்வுகளையும், உறவுகளையும், நட்பையும், நம்பிக்கையையும், உண்மையையும் கொண்டிருக்கிறது — எல்லாமே இருக்கிறது என்று சொல்லலாம்.

இந்தப் புத்தகத்துக்காக மிகப்பெரிய ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு இத்தனை தொடர்புகள் எப்படி கிடைத்தன என்பது ஆச்சரியமே.

எல்லோரும் படிக்கலாம், ஆனால் மிகச் சிலரே இந்தப் புத்தகத்தை அனுபவிக்க முடியும்.

user_13404

★ 3/5 Feb 02, 2026

தமிழினத்தின் மாபெரும் தலைவரையும் அவரது 33 ஆண்டு போராட்டத்தின் பின்னணி காரணங்களையும் புரிந்துகொள்ள கட்டாயம் படிக்க வேண்டிய நூல். இந்தப் புத்தகம் அவரது வாழ்க்கையை முழுமையாக உள்ளடக்கவில்லை என்றாலும், ஒரு நல்ல தொடக்கம் என்பதில் சந்தேகமில்லை. மிகவும் ரசித்தேன்!

user_13403

★ 4/5 Feb 02, 2026

என்னைப் போன்ற இளைய தலைமுறையினருக்கு தமிழ் ஈழம் மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி அறிந்துகொள்ள இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் ஈழக் கனவு தொடர்கிறது...

user_13402

★ 5/5 Feb 02, 2026

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் பற்றிய தொடர், புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை ஈழத்தமிழர்களுக்கு சுதந்திரத்திலிருந்தே தொடங்கிய பிரச்சனை, சிங்கள இனவெறி வெளிப்பட்டது, அதை எதிர்த்து தமிழர்கள் அரசியல் கட்சி தொடங்கி அறவழி போராடுவது, சிலர் ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகி குழுக்களாக உருவானது, உலக அரசியலின் பார்வை, இந்திரா மற்றும் எம்ஜிஆர் ஈழ ஆதரவு, இலங்கை ராணுவ அரசியல் கொலைகள், அமைதிப்படை, ராஜீவ் படுகொலை, போர் நிறுத்தங்கள், பிரபாகரன் மரணம், ஈழத்தின் தற்போதைய நிலை என மொத்த கதையையும் ஒரு சார்பாக இல்லாமல் பார்க்க முடிந்தது.

பிரபாகரன் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆகச்சிறந்த ஆளுமை, தேர்ந்த நிர்வாகி என்பதற்கு பல சான்றுகள் சம்பவங்களாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளைப் பற்றியும் பிரபாகரன் பற்றியும் அத்தனை தகவல்கள் பொதிந்து தரப்பட்டிருக்கிறது.

கர்ண கொடூர சரித்திரத்தையும் ஒரு திரைக்கதையைச் சுவாரசியமாய் சொல்வதில் பா.ராகவன் சமர்த்தர் என்பதை இப்புத்தகத்திலும் நிரூபித்துள்ளார். விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை நிச்சயமாகப் பரிந்துரைக்க வேண்டும்.

user_13401

★ 3/5 Feb 02, 2026

பிரபாகரனைப் போற்றியும் இந்நூல் பாடவில்லை, தூற்றியும் பாடவில்லை. ஒரு நேர்கோட்டில் நின்று அவர் செய்த சரி தவறுகளை விமர்சித்துப் பேசியிருக்கிறது. கண்டிப்பாக அவருடைய கதையைப் படிக்கும்போது ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் புத்தகம் எனக்கு கூறிய விஷயம் — உலகத்தில் எந்த இனமும் மக்களும் வன்முறை மூலமாக விடுதலை அடைய முடியாது. வன்முறை வழியாக பலரை நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கலாம், ஆனால் அதை வைத்துக்கொண்டு விடுதலை அடைய முடியாது. பிரபாகரனின் ஒரு சிறு தவறு அவருடைய மொத்த கனவுக்குமே முழுக்குப் போட்டுவிட்டது.

user_13400

★ 4/5 Feb 02, 2026

தமிழ் ஈழம் என்ற கனவுக்கு பின்னிருக்கும் அரசியலும் ரத்தகளமும் சார்ந்த பிரபாகரனின் வாழ்க்கைப் பயணம். எண்ணற்ற விளக்கமற்ற கேள்விகளுக்கு விடையை எவ்வாறு வரும்கால வரலாறு கண்டறியப்போகிறது?! விடுதலைப் புலிகள், அரசியல் பேச்சுவார்த்தைகள், இருநாட்டு அரசின் இரட்டை முகங்கள், ஒரு இனத்தின் ஒட்டுமொத்த அழிவு என இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இன வீழ்ச்சியை அறிந்துகொள்ள சிறந்த புத்தகம்.