Reviews for பிரபாகரன் வாழ்வும் மரணமும்
28 reviews total
user_13418
★ 5/5 Feb 02, 2026மிகவும் சுவாரஸ்யமான புத்தகம். படிக்கும்போது ஒவ்வொரு பக்கமும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
user_13417
Feb 02, 2026படிக்க நன்றாக இருந்தது. எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கிறது.
user_13416
★ 5/5 Feb 02, 2026அருமையான புத்தகம்! பிரபாகரனின் போராட்ட வாழ்வை மிகவும் ஈர்க்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
user_13414
★ 4/5 Feb 02, 2026பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் வரலாற்றை அறிய விரும்புவோருக்கான நல்ல புத்தகம். நடுநிலையான வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறேன் — தமிழ் புலம்பெயர் மக்கள் மத்தியில் பிரபாகரனை ஒரு மாபெரும் தலைவனாக மாற்றிய காரணங்களை இதன் வழியே புரிந்துகொள்ளலாம்.
user_13413
★ 4/5 Feb 02, 2026நல்ல புத்தகம், ஆனால் நிகழ்வுகள் காலவரிசையில் சொல்லப்படவில்லை, இடையிடையே தாவுகிறது. முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியிருந்தாலும், சுருக்கமாக மட்டுமே விவரிக்கிறது. விடுதலைப் புலிகள் மற்றும் தலைவர் பிரபாகரனின் வரலாற்றை அறியாதவர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.
user_13412
★ 4/5 Feb 02, 2026போராட்டம் எங்கள் வாழ்வின் நியதி என்று கூறிய இன்குலாபின் கூற்றே நினைவுக்கு வருகிறது. பிரபாகரன் என்னும் போராளியின் உன்னதமான போராட்ட வாழ்வை மிகைகள் இல்லாமலும், அவரை தீவிரவாதியாகச் சித்தரித்து வைத்திருக்கும் உலகத்தின் பார்வைகளை உடைத்துக் காட்டுகிறது இந்த எளிமையான புத்தகம்.
user_13411
★ 4/5 Feb 02, 2026ஈழத் தமிழர்களுக்காகப் போராடிய பிரபாகரனைப் பற்றி அறிவதற்கான ஒரு வாய்ப்பு இந்தப் புத்தகம். போராட்டங்கள் பற்றியும், இந்திய, தமிழக, இலங்கை அரசுகளின் உதவிகள் மற்றும் போர் சமயங்களில் அவர்கள் செய்த செயல்கள், அவர்கள் போட்ட திட்டங்கள் பற்றியும் அறிய முடிகிறது.
ஈழத் தமிழர்களின் தலைவனாகப் பிரபாகரன் உருமாறிய கதைகளையும், அவர்களுக்கு இடையே நடந்த அரசியல் நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள ஒரு ஆவணம் இந்தப் புத்தகம்.
user_13410
★ 4/5 Feb 02, 2026பிரபாகரனின் நியாயங்கள் முற்றிலும் சரியானவையாக இல்லாது போயிருந்தால் அரசாங்கங்கள் வேண்டாம், மக்களே நிராகரித்திருப்பார்கள். இந்திய அரசும் அதன் அமைதிப்படையும் ஈழத்தில் செய்த அட்டூழியங்களைப் படிக்கும் போது சாதாரண மனிதனான எனக்கே அவ்வளவு கோபம் வருகிறது என்றால், தமிழினத் தலைவருக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்?
user_13409
★ 4/5 Feb 02, 2026பிரபாகரன் வாழ்வும் மரணமும் — பா.ராகவன். இந்தப் புத்தகத்தை எப்படி விமர்சிப்பது என்றே தெரியவில்லை. அமைதியாக விட்டுவிடுகிறேன். ஆனால் மேற்கோள்கள் பேசட்டும்.
"சாத்திரங்கள் பிணம் தின்னத் தொடங்கும்போது யுத்தம் தவிர்க்க முடியாததாகிவிடும்."
"சுட்டவர்களின் முகமெங்கும் கண்ணீர். சுடப்பட்டவர்களின் முகங்களில் புன்னகை."
"இயற்கை என் தோழன். வாழ்க்கை என் தத்துவ ஆசிரியர். வரலாறு என் வழிகாட்டி."
"ஓரினம் உரத்து அழக்கூடத் தெம்பில்லாமல் தேம்பிக்கிடக்கிறது. இன்னோர் இனம் இனிப்பு வழங்கி, ஆடிப்பாடிக் கொண்டாடுகிறது."
user_13408
★ 4/5 Feb 02, 2026நடுநிலையான வாதத்தை எடுத்துவைக்கும் புத்தகமாக எனக்குத் தோன்றவில்லை. பிரபாகரனின் பக்கம்தான் பெரும்பாலும் பேசுகிறது. அதில் ஒன்றும் தவறில்லை. இருந்தாலும் முழுக்க பிரபாகரனின் பக்கம் ஆதரிப்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது.
வன்முறைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பது உண்மைதான், ஆனால் யாருக்காகப் போராடுகிறோம் என்பதையே ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் மறந்துவிட்டார்கள் போல. இறந்த அத்தனை தமிழர்களும் இலங்கை ராணுவத்தால்தான் கொல்லப்பட்டார்களா? விடுதலைப் புலிகளால் இறந்த தமிழர்கள் யாவும் தற்செயலாக ஏற்பட்ட மரணங்கள்தானா?
பிரபாகரன் நேரடியாகத் தமிழர்களுக்கு எந்தத் தீங்கும் நிகழ்த்தாதிருக்கலாம், ஆனால் அவர் உருவாக்கி தலைமை வகித்த விடுதலைப் புலிகளால் ஆன மரணங்களுக்கு அவர் சிறிதேனும் பொறுப்பேற்றுதான் ஆக வேண்டும்.
இதெல்லாம் தாண்டியும் விடுதலைப் புலிகளின் மைய கொள்கையை நான் மட்டும் அல்ல, அனைத்து தமிழர்களும் ஆதரிக்க வேண்டியது தான்.