Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 640
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- அடையாளம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788177202823
‘நிகழ்ந்தவையும் புனைந்தவையும் ஊடுகலந்த ஒரு யதார்த்தம். கூரிய அங்கதமே நாவல் முழுக்க சிலுவைராஜை நமக்கு அணுக்கமாக ஆக்குகிறது. தமிழிலக்கியத்தின் முதன்மையான இலக்கியப் படைப்புகள் சிலவற்றில் சிலுவைராஜ் சரித்திரமும் ஒன்று.’
- ஜெயமோகன்
Quotes
ஒருதடவை கிறிஸ்மஸ் சீசனில் செயற்கையாய் அலங்கரிக்கப்பட்ட மாட்டுத் தொழுவில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தை ஏசுவை ஆராதித்துப் பாடும்போது ஸ்டீபன் செய்த கூத்து கோவிலையே ஒரு கணம் அதிரவைத்துவிட்டது. சோலோ-கோரஸ் என்று தொடர்ந்து போகும் அந்த ஆராதனையில் ஸ்டீபன் சோலோ பாட மற்றவர்கள் 'வந்தாராதியுங்கள்' என்று கூட்டாகப் பாடிக்கொண்டிருந்தார்கள்.
'ஏவை மரி கனியை'
'வந்தாராதியுங்கள்'
'மாட்டுக் கொட்டில் பாலனை'
'வந்தாராதியுங்கள்'
'வானோ போற்றும் பாலனை'
'வந்தாராதியுங்கள்'
'வயித்தால போன பாலனை'
'வந்...'
ஒரே சிரிப்பு. கோயில் அதிர்ந்தது. குழந்தை ஏசு மட்டும் சிரிக்காமல் படுத்துக்கிடந்தார். வெளியே வந்த பிறகு 'ஏண்டா இப்பிடிப் பாடுன' என்று அவங்கிட்ட சிரிப்பு தாங்காமல் கேட்டபோது, 'ஏன் அவருக்கு மட்டும் வயித்தால போயிருக்காதா? அவரும் மனுசந்தானே? மனித சுபாவத்தில் சிலுவையில் அறையப்பட்டுச் செத்துப் போனவர், வயித்தால போகாமலா இருந்திருப்பார்?
தப்புச் செய்தால் அதற்குரிய தண்டனையை ஒருவன் அடைந்தே ஆகணும் என்பது தகப்பனின் பிடிவாதமான கொள்கை. அந்த ஒருவன் என்பது பெரும்பாலும் சிலுவைதான். அவர் ஒருநாளும் அந்த ஒருவனுக்குள் வரமாட்டார்.
ரவி தண்ணி போட்டாம்னா தாஸ்தாவ்ஸ்கி பற்றித்தான் பேசுவான்.
Shelves
More like this
க. அயோத்திதாசா ஆய்வுகள்
க. அயோத்திதாசர் ( 1854 - 1914 ) என்னும் பெளத்தப் பெரியாரின் ஆய்வுகளும் தீர்வுகளும் ஆசியாவுக்கு மட்டுமின்றி முழு உலகிற்கே ஒளியாக உதித்த கெளதம புத்தரின் அகிம்சையிலிருந்…