Quotes from வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

“யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு. அதற்கு அடிமையாகாதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம்தான் புகழின் ஆணிவேர்.”
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“உங்களுக்குத் தேவையானதையும் அவர்களுக்குத் தேவையானதையும் பரிமாற்றிக் கொள்கிறோம். பகிர்ந்து உண்பதும் பரிமாறி வாழ்வதும் இயற்கை நமக்கு கற்றுக்கொடுத்தவை.”
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“எரிந்து மறைதலும், ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு. இருளை விலக்கத்தான் முடியும்; அழிக்கமுடியாது. ஓளிகொண்டு கண்டறியப்படும் உண்மை அதுதான். மரணமும் அப்படித்தான்!”
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“பாறையின் மேலேறிய உதிரனுக்கு கபிலர் ஏன் ஏறாமல் நிற்கிறார் என்ற காரணம் புரியவில்லை. "நான் எங்கே நிற்கிறேன்?" என்று கேட்டார் கபிலர். "கீழே நிற்கிறீர்கள்" என்றான் உதிரன். "காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது" என்றார். கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை. கபிலர் விளக்கினார். "உண்மை என்பது இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாகக் கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதில்லை.”
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“நெருப்பைவிட அதிகமாக சுடக்கூடியது கதை. நெருப்புக் கொண்டும் எரிக்கமுடியாதது கதை.”
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“கபிலர்: "அச்சம் இல்லை என்று சொல்ல நான் பொய்யன் அல்ல. ஆனால், அஞ்சமாட்டேன் எனச் சொல்ல பொய் தேவையில்லை." பாரி: "அதுதான் புலவன். சொல் சுடும்போது சொல்லைச் சுடுவான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இன்றுதான் சொல்லிக் கேட்கிறேன்.”
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“எங்கிருந்தும் வானத்தைப் பார்க்கலாம். ஆனால் எங்கிருந்து பார்க்கிறோம் என்பது தானே முக்கியம். கடல் அதன் அலைகளின் வழியாக அறியப்படுவதைப்போல வானம், அதைக் காணும் கோணத்தின் வழியாகத்தான் காட்சிப்படுகிறது.”
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“விதிகளும் அறவுணர்வும் எப்போதும் பொருந்திப் போவதில்லை. விதிகள், சமமான தோற்றத்தை உருவாக்க நினைப்பவை. அறவுணர்வு, சமமற்றவற்றின் நியாயத்தைப் பற்றிநிற்பவை.”
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழ முடியாது. ஏனென்றால் அது இயற்கைக்கு எதிரானது. விதையை நாடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது. இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்.”
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'
“அடங்காத வெறியோடு பொறுமையைக் கைக்கொள்வது மட்டுமே மனம் பக்குவப்பட்டதன் உச்ச அடையாளம்.”
மணியம் செல்வன் (Maniam Selvan) — 'வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி'