Quotes from கண்டேன் இலங்கையை

அப்போதெல்லாம்தான் நான், ‘நெஞ்சே, பொறு! பொறுத்தார் பூமியாள்வார் அல்லவா? உலகத்தில் உள்ள முட்டாள் பசங்கள் எல்லாம் பூமி என்னுடையது உன்னுடையது என்று அடித்துக் கொண்டிருக்கட்டும். நாம் பொறுமையாக இருந்து பூமியை அமுக்கிக் கொண்டுபோய்விடலாம்’ என்று என் நெஞ்சுக்கு கீதோபதேசம் செய்து வந்தேன். ஆனால் உண்மையில் மேற்படி பழமொழியில் எனக்கு நம்பிக்கை கிடையாதென்று நேயர்களுக்கு இரகசியமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் ஊரில் இம்மாதிரித்தான் ஒரு சாது மனுஷர் ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். கடைசியில் என்ன ஆயிற்று? அந்தப் பொறுமைசாலிக்குப் பூமி கிடைத்ததா? ஆம். கிடைத்தது. சரியாக ஐந்து அடி, ஆறு அங்குலம் பூமி கிடைத்தது.
கல்கி (Kalki) — 'கண்டேன் இலங்கையை'