Quotes from குகை
நான் இரவுக்குரிய ஒலிகளைக்கேட்டு நெடுநாளாகிறது. அது ஒரு நிறமில்லாத பிளாஸ்டிக் நூல் போல அறுபடாத நீண்ட ரீங்காரம் என்பதை உணர்ந்தேன்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'குகை'
அச்சத்தையும் கிளர்ச்சியையும் நான் அறிந்தேன். மெல்லிய அச்சத்தைப்போல இனிமையான துணை எதுவுமில்லை.
ஜெயமோகன் (Jeyamohan) — 'குகை'
இரவில் விந்தையானவை நிகழும்போது அவை ஒருவகையில் சாத்தியம் என்பதாலேயே அவற்றின் விந்தைத்தன்மை கொஞ்சம் குறைந்துவிடுகிறது.
ஜெயமோகன் (Jeyamohan) — 'குகை'
ஒவ்வொரு நாளும் இடைவிடாது தன்னைத்தானே கட்டிக்கொண்டிருக்கிறது நகரம்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'குகை'
அந்த ஆவணங்களைப் போலத்தான் நானும். எவராலும் பார்க்கப்படுவதில்லை. பார்த்தாலும் புரிந்துகொள்ளப்படுவதில்லை. மட்கி அழிந்துகொண்டிருக்கிறேன்
ஜெயமோகன் (Jeyamohan) — 'குகை'
வெளிச்சம்தான் சுவர் வழியா போக முடியாது. இருட்டு சுவர் வழியா போயிடும். இருட்டு எவ்வளவு தூரம் வேணாலும் போகும். இருட்டு போற தூரத்துக்கு வெளிச்சம் போகாது.
ஜெயமோகன் (Jeyamohan) — 'குகை'