Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நூலக மனிதர்கள்
Noolaga Manithargal
- பக்கங்கள்
- 208
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Desanthiri Pathippagam
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- First
- ISBN-13
- 9788195393718
- ASIN
- B09QQP3L72
நூலகம் என்பது புத்தகங்களைச் சேமிக்கும் இடம் மட்டும் அல்ல — மனிதர்களை இணைக்கும் பாலமும் கூட. இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன், தான் நூலகங்களில் சந்தித்த மனிதர்களின் கதைகளைச் சித்தரிக்கிறார். ஒரு மனிதர் படித்த புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது அதற்குள் ஒரு ரூபாய் நோட்டு வைத்துச் செல்கிறார் — அடுத்த வாசகருக்கான அழகான பரிசு. திருவிழாவிற்குச் செல்வதுபோல் குடும்பமாக நூலகம் வந்து வார …
சந்திரசேகரன்
★ 5/5நூலகத்தில் எஸ்.ராவுக்கு அறிமுகமான ஒவ்வொரு மனிதரும் ஒரு தனி ரகம் — அந்தத் தனித்துவமான மனிதர்களைத் தனித்தனிக் கட்டுரைகளாகத் தந்திருக்கும் அனுபவத் தொகுப்பு இது. இணையதளத்தில் தொடராக வெளிவந்து அமோக வரவேற்பைப் பெற்ற பிறகு புத்தகமாக வந்திருக்கிறது.
ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு புதிய முகம். படித்து முடித்ததும் அடுத்து வாசிப்பவருக்குப் பரிசாக ஒரு ரூபாயை புத்தகத்திற்குள் வைத்துச் செல்பவர்; மகனுக்கு வாசிப்பின் அத்தியாவசியத்தை உணர்த்தும் தந்தை; நூலகம் வர இயலாமல் தந்தையின் வழியே லா.ச.ராவை நேசிக்கும் பூ விற்பவரின் மகள்; பிடித்த புத்தகத்திற்காக அதைத் திருடுபவன்; முடிவு பிடிக்கவில்லை என்றால் கடைசிப் பக்கத்தைக் கிழித்தெறிபவர்; பார்வையிழந்தும் வாசிப்பின் மீது காதல் கொண்டவர்; குடும்பத்துடன் நூலகம் செல்லும் குடும்பம் என அத்தனை பேரும் நம் மனதில் நிற்கிறார்கள்.
எளிய மனிதர்கள் தங்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை ஏற்றுக்கொள்ளும்போது கண் கலங்கி விடுகிறார்கள்.
சார்லஸ் டிக்கன்ஸின் எழுத்து இங்கிலாந்தில் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்திற்கு வழிவகுத்ததை நினைவுகூர்ந்து, சமூக அவலங்களைப் படம்பிடித்து அதைச் சீர்படுத்த ஒரு எழுத்தாளன் என்றும் தேவை என்கிறார். அரசே முன்வந்து மலிவு விலையில் புத்தகங்களை வழங்கலாம் என்ற ஆலோசனையையும் முன்வைக்கிறார். தமிழ் வாசகர்கள் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல் இது.
Shelves
More like this
மறைக்கப்பட்ட இந்தியா
ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…
எனது இந்தியா
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…
சிறிது வெளிச்சம்!
வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ண…
கேள்விக்குறி
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அ…
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…
உறுபசி
நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு…
யாமம்
சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்க…
மலைகள் சப்தமிடுவதில்லை
எழுத்து வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள், ஆச்சரியங்கள்…
நெடுங்குருதி
குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்…
உப பாண்டவம்
மகாபாரதம் ஒரு கடல். பல கதைகளையும், கிளைக்கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது. படித்து பழகிய மகாபாரத்தை தனது புனைவெழுத்தின் வழியே புதுவடிவம் கொள்ள வைக்…
கோடுகள் இல்லாத வரைபடம்
இலக்கு தெரியாத கடல்களில் கப்பல்களை ஓட்டிக்கொண்டு, நட்சத்திரங்களை வழிகாட்டிகளாகக் கொண்டு உலகை நோக்கி பயணமானவர்கள் — மார்க்கோ போலோ, இபின் பாதுதா, வாஸ்கோடகாமா, அல்பெரூனி உ…
கலிலியோ மண்டியிடவில்லை
அறிவியலோ இலக்கியமோ எதுவாயினும் கற்பனைதான் அதன் ஆதாரம். ஆகவே கற்பனையான ஜீவராசிகளின் வழியே இந்த இரண்டு துறைகளையும் நான் அறிந்துகொள்ள முயன்றதே இக்கட்டுரைகள். அதிகம் விவ…