‘ஆய்வுச் சிற்பி’ முனைவர் த, முத்துலட்சுமி அவர்கள், புகழ்பெற்ற எழுத்தாளரின் அறியப்படாத செய்திகளையும், புதிய பார்வையை பதிவு செய்கின்ற சிறப்பான பணியைச் செய்துள்ளார். ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக்கல்லூரியில் உதவிப்பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இருபத்தைந்திற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். பத்திற்கும் மேற்பட்ட மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என பல எழுதியுள்ளார். இந்திய முகங்கள் என்ற உலக சாதனை மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்து உலக சாதனை ஆய்வுக்கட்டுரையும் சமர்ப்பித்துள்ளார். பணி புரியும் கல்லூரியான ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக்கல்லூரியில் 2025-26 ஆம் ஆண்டிற்கானச் சிறந்த ஆய்வாளர் விருதினைப் (BEST RESEARCHER AWARD) பெற்றுள்ளார். அடுத்து, பல்வேறு செயற்கை நுண்ணறிவு கருவிகள் சிந்தனை பகுப்பாய்வு (ANALYZATION OF DIFFERENT IN AI TOOL THOUGHT PROCESS) என்ற தலைப்பில் மாணவிகளுக்கான ஆராய்ச்சித் திட்டத்தின் நெறியாளராகப் பணியாற்றியுள்ளார். யோகி பதிப்பகம் நடத்திய, 2026 ஆம் ஆண்டிற்கான நூல் போட்டியில் சிறந்த கட்டுரை நூலுக்கான முதல் பரிசினை இவரது சி. சு. செல்லப்பாவின் படைப்பாளுமை என்ற நூல் பெற்றுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் காலம் காலமாக பல திறனாய்வுகளும், அதனைத் தொடர்ந்து பல புத்தகங்களும் வெளிவந்து கொண்டிருந்தாலும், சிப்பிக்குள் முத்தாக ஏதேனும் சில புத்தகங்கள் மட்டுமே பெருமை சேர்க்கும் விதத்தில் நிலைத்து நிற்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் ‘ஆய்வுச் சிற்பி’ முனைவர் த. முத்துலட்சுமியின், மணிக்கொடி எழுத்தாளர் சி. சு. செல்லப்பாவின் படைப்புகளில் கட்டமைப்புத் தடங்கள் என்ற புத்தகமாகும். இந்த புத்தகம் ஒரு வரலாற்று ஆவணம். சுதந்திர சங்கு, மணிக்கொடி, ஆனந்த விகடன், கல்கி, குமுதம் என்ற இதழ்களில் எழுதியவர். வாடி வாசல் நாவல், சாகித்திய அகாடமி விருது பெற்ற சுதந்திர தாகம் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய எழுத்தாளர் என்பது மட்டுமல்லாமல், சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டு சிறைதண்டைப் பெற்றுள்ளார் என்ற செய்திகளை எடுத்துரைக்கின்ற நூல் மணிக்கொடி எழுத்தாளர் சி. சு. செல்லப்பாவின் படைப்புகளில் கட்டமைப்புத் தடங்கள் என்ற நூலாகும். சுதந்திர போராட்டத் தியாகியைப் பற்றிய இந்நூல் வரலாற்று ஆவணமாக அமைந்து, இன்றைய தலைமுறையினருக்கு நாட்டுப்பற்றை வளர்ப்பதாகவும், கட்டமைப்பு நோக்கில் இலக்கிய உலகிற்குப் புதிய பார்வையைத் தருவதாகவும் அமைந்துள்ளது. மேலும் இந்நூல் சி.சு. செல்லப்பாவினைப் பற்றிய அறியப்படாத செய்திகளை மட்டுமல்லாமல் அவரது படைப்புகளைக் கட்டமைப்பு நோக்கிலும் ஆய்வியல் நோக்கிலும் ஆராய்ந்து புதிய பார்வையைப் பதிவுச் செய்கின்றது.