Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
மானுடம் வெல்லும்
Maanudam Vellum
- பக்கங்கள்
- 480
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kavitha Publication
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- Sixth Edition
- ISBN-13
- 9788183453295
தமிழ் வரலாற்று நாவல் இலக்கியத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் இக்கதை, பதினெட்டாம் நூற்றாண்டின் புதுச்சேரியை நம் கண்முன்னே நிறுத்துகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த அன்றைய மக்களின் வாழ்வியலையும், ஐரோப்பியப் பண்பாட்டோடு தமிழ்ச் சமூகம் கொண்ட ஊடாட்டத்தையும் மிக நுணுக்கமாக இக்கதை விவரிக்கிறது. அதிகார வர்க்கத்திற்கும் சாமானிய மக்களுக்கும் இடையிலான உறவை வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் இது கலை…
Appears in following lists
Quotes
அத்தர்! நேரம் நள்ளிரவைத் தாண்டி வெகு நேரமாகி விட்டது. கோட்டை மதிலின் மேல் அமர்ந்து, தீவட்டி வெளிச்சத்தில் இந்தக் கடுதாசியை நான் எழுதுகிறேன். என் வெகு அருகில், என் நிழல் மாதிரி, மரணம் சம்மணம் போட்டுக் குந்தியிருக்கிறது. மரணத்தை ஏற்கனவே தழுவிக் கொண்ட சவார்(வீரர்)கள் - அவர்கள் சொர்க்கத்தில் அமைதி பெறட்டும் - காயங்களில் வலியால் மரணத்தை கூவி அழைக்கின்ற சவார்கள் - அவர்களுக்கு சீக்கிரமே இறைவன் அமைதியை அருளட்டும் - ஆகிய நோக்காடுகளுக்கு மத்தியில் இருந்து இதை எழுதுகிறேன். மனித தசைகளுக்கு வல்லூறுகள் இந்த அர்த்த ராத்திரியிலும் சுற்றி அலைவதை நான் பார்க்கிறேன். நியாயம்தானே! மனிதர்கள் தம் நிலையிலிருந்து இழிந்து போன பின் நாயும் நரியும் கழுகும் காக்கையும் அவர்களின் சதையை பிய்த்துத் தின்ன வேண்டியதுதானே! யுத்தம் என்பதே மனித நிலை தாழ்ந்த பிறகு ஏற்படுகின்ற தொற்றுநோய்தானே?
வேளாண்மை ஒரு போகம், சுத்தமாக அழிந்தே போச்சு. செஞ்சி ஆத்துப் படுகையில் சித்திரக்காலி, வாலான், சிறை மீட்டான், மணல்வாரி, செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச் சம்பா, முத்து விளங்கி, மலை முண்டன், பொற்பாளை, நெடுமூக்கன், அரிக்கிராவி, மூங்கில் சம்பா, கத்தூரிவாணன், காடைக்கமுத்தன், இரங்கல் மீண்டான், கல்லுண்டை, பூம்பாளை, பாற்கடுக்கன், வெள்ளை புத்தன், கருங்குறுவை, புனுகுச் சம்பா போல பல மாதிரி நெற்பயிர்களை இந்நேரம் நாற்று விட்டிருக்கணும். எல்லாம் போச்சு. ஜனங்க திரும்ப அவங்க அவங்க ஊருக்குப் போனா, எப்படி ஜீவிக்கும்? எதைத் தின்னும்? சோத்துக்குக் கஷ்டம் வந்துடும். ஏழைப்பட்ட ஜனம், பஞ்சம் பொழைக்க நாடு நகரம்னு நகரும்!
கற்றது கைமண்ணளவு. மாடுகள் அந்தக் காலத்தில் என்ன சிரேஷ்டமாக இருந்தன. எங்கள் தாத்தா காலத்தில், எத்தனை வகை மாடுகள்? குடைக் கொம்பன், செம்மறையன், குத்துக் குளம்பன், மோழை, குடைச் செவியான், குற்றாலன், கூடு கொம்பன், மடப்புல்லை, கரும் போரான், மயிலை, சுழற்சிக் கண்ணன், மட்டைக் கொம்பன், கருப்பன், படைப்புப் பிடுங்கி, கொட்டைப் பாக்கன், கரு மறையன், பசுக் காத்தான், அணில்காலான், படலைக்கொம்பன், பூண்டுப்பூ நிறத்தான், வெள்ளைக்காரன் என்று எத்தனையோ வகை இருந்ததே. என் காலத்தில் எல்லாம் மறைஞ்சு போச்சு..
Shelves
More like this
சித்தன் போக்கு
பிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கிய…
தாழப்பறக்காத பரத்தையர் கொடி
பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பிரபஞ்…
இப்படியாக ஒரு சினேகிதி
எழுத்துக்கு ஒரு கொள்கை இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. ஏதேனும் ஒன்றை முன் நிறுத்தவோ, அல்லது ஏதேனும் ஒரு கருத்தை பிரச்சாரம் செய்யவோதான் இந்த கவிதையோ அல்லது கதைகளோ ப…
வானம் வசப்படும்
ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும், அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறத…
மரி என்கிற ஆட்டுக்குட்டி
மரியை எனக்குத் தெரியும் அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள் வசதியான குடும்பம் தெருவில் மூன்று காரிகள் நின்றன நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள் வீட்டில் அம்மா இல்லை அதாவது குழந்தைய…
அப்பாவின் வேஷ்டி
சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை நுட்பமாகச் சித்திரிக்கும் சிறுகதைத் தொகுப்பு இது. இலக்கியத்தில் அன்னையர் பெரிதும் கொண்ட…
மயிலிறகு குட்டி போட்டது
பிரபஞ்சன் நடப்பாண்டில் புதியதலைமுறை இதழில் எழுதிவரும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அவரது தன் வரலாறு சார்ந்த சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு இது. கடந்த ஐம்பத…
மகாநதி
வாழ்க்கை எனும் மகாநதி, பொங்கிப் பிரவகித்து, மூர்க்கமும் மூர்த்தன்யமும் பொருந்த, திகிலேற்றுகிற மோகினிக் கவர்ச்சியுடன் நடந்து செல்லும் பேரழகை நீங்கள் என்றேனும், ஓர் கணமேனும் தர…
பெண்
பெண்ணைப் பற்றி வரலாற்றுப்பூர்வமாக இலக்கிய ஆதாரத்துடன் எழுதப்பட்ட படைப்பு ஆவணம்.
தபால்காரர் பொண்டாட்டி
தபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு த…
பெண்
புத்தகம் வாங்க : Watsapp: +91- 9025679145 இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது. copyright @2023 AkilanKannan அகிலனின் முதல் நாவலான இந்த நூல் கலை…