About க.நா. சுப்ரமண்யம் (Ka. Na. Subramanyam)


30 Followers

கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் என்பது இவரது இயற்பெயர்; தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமானில் 1912இல் பிறந்த இவர், இளம் வயதிலேயே எழுத்தாளராக வாழ்வது என்று முடிவெடுத்து அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். நவீன தமிழ் இலக்கிய இயக்கமான மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினராக இருந்த இவர், சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என பல துறைகளிலும் காலத்திற்கு முந்தைய பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள்.

தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக வளர வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தில், தமிழின் சிறந்த படைப்புகளை ஆங்கிலத்திலும் பல உலக இலக்கியப் படைப்புகளைத் தமிழிலும் மொழிபெயர்த்தார்; ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi ஆகிய சிற்றிதழ்களையும் நடத்தினார். “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற விமர்சன நூலுக்காக 1986இல் சாகித்திய அகாதமி விருதும், தமிழக அரசு விருதும், குமரன் ஆசான் விருதும் பெற்றார். 1988இல் தில்லியில் காலமானார்; 2006இல் தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கியது.