About வண்ணநிலவன் (Vannanilavan)


50 Followers

வண்ணநிலவன் திருநெல்வேலியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் உ. இராமச்சந்திரன் ஆகும். திருநெல்வேலியின் பாளையங்கோட்டை மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் கல்வி பயின்ற இவர், 1973-ஆம் ஆண்டு வேலை தேடி சென்னைக்கு வந்தார். கண்ணதாசன், கணையாழி, புதுவைக்குரல் போன்ற இதழ்களில் சில காலம் பணியாற்றிய இவர், 1976-இல் துக்ளக் இதழிலும் பின்னர் சுபமங்களா இதழிலும் பணியாற்றினார். ருத்ரையா இயக்கத்தில் வெளிவந்த 'அவள் அப்படித்தான்' என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். ஏப்ரல் 7, 1977 அன்று சுப்புலட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆனந்த் சங்கர் என்ற மகனும், சசி மற்றும் உமா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.