About நளினி ஜமிலா (Nalini Jameela)


நளினி ஜமிலா கேரளத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். பாலியல் தொழிலில் ஈடுபட்ட தன் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து, அத்தொழிலில் இருப்பவர்களின் நேரடிக் குரலாகத் தன் கதையை உலகிற்குச் சொன்னவர். பாலியல் தொழிலாளர்கள் குறித்த சமூகத்தின் பொதுப்புத்திப் பிம்பங்களைக் கேள்விக்குள்ளாக்கும் அவரது குரல், அத்தொழிலில் உள்ள பெண்களின் பிரச்சினைகளை மானுட கௌரவத்துடன் முன்வைக்கிறது.