காசியபன் Books

About காசியபன் (Kasiyapan)


காசியபன் (பி. குளத்து ஐயர்) (1919-2004) தமிழில் கவிதைகளும், அசடு என்னும் நாவலும் எழுதிய எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் இருந்த இலக்கியக்குழுவில் உருவான படைப்பாளி.

காசியபன் 1919-ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். தத்துவத்தில் பி.ஏ.படித்தார். கேரளப் பல்கலைகழகத்தி தமிழை இரண்டாமொழியாக எடுத்து படித்தார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றினார். ஆரம்ப கல்வியை கேரளாவில் படித்ததால் மலையாளம் மிக நன்றாக வரும். அத்துடன் வடமொழி, ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி துவங்கி பன்னாட்டு இலக்கியங்களை ஆழ்ந்து படித்து தெளிவுற்றவர். தமிழில் அவர் மிகவும் விரும்பி படித்த இருவர் மௌனியும் க.நா.சுவும்.

இலக்கிய வாழ்க்கை காசியபன் என்பது புனைபெயர். காசியபன் தன் 53வது வயதில் தான் எழுதத் துவங்கினார். அவரது முகமது கதைகள் கணையாழி இதழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது முன்னோடியான இலக்கிய முயற்சி. அவரது முதல் நாவல் அசடு.

காசியபனின் அசடு நாவல் 1978ல் வெளியானது. பதினைந்து வருடத்திற்கு பிறகு இதன் மறுபதிப்பு 1994ம் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது. இப்பதிப்பிற்கு நகுலன் முன்னுரை எழுதினார்.

நூல் பட்டியல்

நாவல் அசடு (1978) கிரகங்கள் (1980) வீழ்ந்தவர்கள்

பிற பேசாத மரங்கள் (கவிதை தொகுதி) கோணல் மரம் (சிறுகதைகள்)