தி. லஜபதி ராய் Books
About தி. லஜபதி ராய் (T. Lajapathi Rai)
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் எனும் ஊரில் 1965ஆம் ஆண்டில் பிறந்தவர். மதுரை சட்டக் கல்லூரியில் 1983 ஆண்டு முதல் 1988 ஆண்டு வரை ஐந்தாண்டு இளங்கலை சட்டமும், சொத்துரிமைச் சட்டத்தில் முதுகலை சட்டமும் பயின்று பின்னர் தற்போதைய இந்திய தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கட்ரமணியுடன் உச்சநீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்று, அதன்பின் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராகப் பயிற்சி செய்கிறார்.
2023 முதல் மாதத்திலிருந்து சீனியர் வழக்கறிஞராக மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டார். மேற்கு வங்காளம் ஹூப்ளி மாவட்ட ஆட்சியரான துணைவியார் ஸ்ரீபிரியா ஐ.ஏ.ஏஸ். அவர்கள் மறைவிற்குப் பின் மருத்துவக் கல்லூரி மாணவரான மகன் அகிலன் ராய், சட்டப்பட்டதாரி மகள் கயல் ராய் ஆகியோருடன் மதுரை, புது தாமரைப்பட்டியில் வசிக்கிறார்.