Quotes from உழவுக்கும் உண்டு வரலாறு

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து - இந்த பாரை உயர்த்திட வேண்டும்!’ - என்று பாரதி சொல்வதை ஏற்றால் இங்கு நமக்கு வேலை இருக்கு நிறைய!
கோ. நம்மாழ்வார் (G. Nammalvar) — 'உழவுக்கும் உண்டு வரலாறு'
வண்டிக்காரன்’ என்று புகழ்பெற்றிருக்கும் பொறியாளர்’ ராமசாமி மேலும் சொல்கிறார்: உடலில் வலுவுள்ளவரை உழைக்கும் காளை மாடுகளுக்கு வேதனை இல்லாமல் இழுத்துச் செல்லப் பொருத்தமான வண்டி செய்து கொடுத்தோமா... லாரியில் ஏற்றிக் கறிக்கடைக்குச் செல்லும் போது சித்ரவதைக்கு ஆளாக்காமல் செய்கிறோமா... இறைச்சிக்காக கொலை செய்யும்போது சித்ரவதை செய்யாது கொலை செய்கிறோமா?
கோ. நம்மாழ்வார் (G. Nammalvar) — 'உழவுக்கும் உண்டு வரலாறு'
இவ்வளவு செலவு செய்யும் ஒரு தேசத்தில் படிப்பு முடியும்போது அறிவைப் பயன்படுத்துவதற்கான வேலை தயாராக இல்லாததால், அது பெரும் சுமையாக முடிந்து விடுகிறது.
கோ. நம்மாழ்வார் (G. Nammalvar) — 'உழவுக்கும் உண்டு வரலாறு'
தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று நம் கொள்ளுகொள்ளுப்பாட்டன் கணியன்பூங்குன்றன் சொல்லி வைத்திருப்பதை நினைவில் கொள்வோம்.
கோ. நம்மாழ்வார் (G. Nammalvar) — 'உழவுக்கும் உண்டு வரலாறு'
அது சரி... நாம் ஆசியனாக வாழப் போவது எப்போது?
கோ. நம்மாழ்வார் (G. Nammalvar) — 'உழவுக்கும் உண்டு வரலாறு'
கிராமத்துப் பெண், தலையில் ஒரு தவலை, இடுப்பில் ஒரு குடம், வலது கையில் ஒரு செம்பு... இப்படித் தண்ணீர் சுமந்து கொண்டு போன காட்சி கூட, அவரைக் கவர்ந்தது.
கோ. நம்மாழ்வார் (G. Nammalvar) — 'உழவுக்கும் உண்டு வரலாறு'