Quotes from ஆகாயத் தாமரை

இருநூறு ரூபாய்க்குத் தாளம் போடும் ரகுநாதன் போன்றவர்களுக்கு அம்மாதிரி விடுதிகள் இருப்பதுகூடத் தெரியாமல் போவதுதான் நல்லது. இருப்பாரைப் பார்த்துத்தானே இல்லாமை அதிகம் தெரிகிறது?
அசோகமித்திரன் (Ashokamitran) — 'ஆகாயத் தாமரை'
எனக்குச் சுபாவம் என்று ஒன்று தனியாக இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவன் ஈடுபடும் வேலை அவனுடைய சுபாவத்தை நிர்ணயித்து விடுகிறது.
அசோகமித்திரன் (Ashokamitran) — 'ஆகாயத் தாமரை'
நீதி ஸ்தலங்கள் எவ்வளவு விதங்களில் பழமையைப் போற்றி பேணும் இடங்களாக இருக்கின்றன. ஏதோ ஒரு விதத்தில் இந்த பழமைதான் மனிதனின் நியாய உணர்வில் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.
அசோகமித்திரன் (Ashokamitran) — 'ஆகாயத் தாமரை'
ஒருத்தன் ஒத்தாசையா இருக்கானே என்பதற்காக அவனுடைய மத்த மோசமான குணங்களை எல்லாம் மறந்துடறதா?" "யாருக்கு மோசமான குணங்கள் இல்லே உனக்கு இல்லையா, எனக்கு இல்லையா? ஏன் மாலதிக்கே இல்லையா?
அசோகமித்திரன் (Ashokamitran) — 'ஆகாயத் தாமரை'