Quotes from விசும்பு

மருந்து கண்டுபிடிக்கிறதுக்குப் பதில் நாம ஏன் இயற்கையோட சமரசம் பண்ணிக்கக் கூடாது? இந்த எய்ட்ஸோட ஒத்துப்போய் வாழ முயற்சி செய்யலாமே? இயற்கையான முறையில் இதைத் தவிர்த்துட்டு வாழலாமே? இந்த வைரஸ் நம்மை விடாது. ஏதோ வடிவிலே நம்மகூட இருக்கும். அதை எதுக்க எதுக்க அது விசுவரூபம்தான் எடுக்குது! ஏன் அதை அப்டியே விட்டுடக் கூடாது? அது நம்மைக் கட்டுப்படுத்தற ஒரு இயற்கைச் சக்தீண்ணு ஏன் நினைக்கக் கூடாது? நமக்கும் ஏதாவது ஒரு கட்டுப்பாடு வேணும். இப்பப் போற போக்கிலே நாம் சீக்கிரமே பூமியையும் அழிச்சு நாமும் மடிவோம்...
ஜெயமோகன் (Jeyamohan) — 'விசும்பு'