Quotes from நாகம்மாள்
கள்ளன் போன மூணாம் நாள் கதவை இழுத்துச் சாத்தி பிரயோசனமென்ன
ஆர். சண்முகசுந்தரம் (R. Shanmugasundaram) — 'நாகம்மாள்'
வருவது வழியா தங்கப் போறது
ஆர். சண்முகசுந்தரம் (R. Shanmugasundaram) — 'நாகம்மாள்'
திடீரென்று மழை கொட்டும். அடுத்த கணமே ‘கம்மென’ நின்று விடும். எதையோ நினைத்துக் கொண்டதைப் போல மறுபடியும் ‘சோ, சோ’வெனத் துளிக்கும். இப்படிப் பெய்யும் மழையை கவனிக்கையில் யாரோ ஒரு தாய் தன் வாலிப மகனைப் பறிகொடுத்ததை எண்ணி ஏக்கத்தில் ‘பலபல’வென்று, நின்று நின்று கண்ணீர் விடுவதைப் போலிருந்தது.
ஆர். சண்முகசுந்தரம் (R. Shanmugasundaram) — 'நாகம்மாள்'
ஒரு விஷயம் அது நல்லதோ கெட்டதோ, அவசியமோ அனாவசியமோ, ஆகக் கூடியதோ ஆக முடியாததோ என்ன சங்கதியானாலும் அதை வளர்த்திக் கொண்டே பொழுதைக் கழிப்பதில் தான் சிலருக்குப் பிரியம்.
ஆர். சண்முகசுந்தரம் (R. Shanmugasundaram) — 'நாகம்மாள்'