Quotes from ஒரு நாள்
அன்பு, பிரியம், உள்ளத்தில் உண்மையிலேயே நெருக்கம் இருக்கிற இடத்தில் எந்தவிதமான தவறுக்கும் பிராயச்சித்தமே தேவையில்லை
க.நா. சுப்ரமண்யம் (Ka. Na. Subramanyam) — 'ஒரு நாள்'
கடவுள் தந்தார் இன்பம், கடவுள் தந்தார் துன்பம் என்று விதியின்பேரில் பாரத்தைப் போட்டுவிட்டு ஏற்றுக்கொள்ள முடிகிறதென்பது மகத்தான ஒரு மனித சாதனை
க.நா. சுப்ரமண்யம் (Ka. Na. Subramanyam) — 'ஒரு நாள்'
மனிதன் தனக்கென்று எப்படிப்பட்ட லட்சியத்தையும் மேற்கொள்ளலாம் - பிறருக்கென்று, இன்று உலகம் உள்ள நிலையில், எந்த லட்சியத்தையும் மேற்கொள்வது மகாத்மா பட்டத்துக்கோ அல்லது அதி அசட்டுப் பட்டத்துக்கோதான் வழி.
க.நா. சுப்ரமண்யம் (Ka. Na. Subramanyam) — 'ஒரு நாள்'