அழகர் கோயில்
Share:

அழகர் கோயில்

Azhagar Kovil

Check Price on Amazon
4.16/5 · 73 ratings

அழகர் கோயில்

Azhagar Kovil

4.16/5 · 73 ratings
பக்கங்கள்
400
வடிவம்
Paperback
பதிப்பகம்
தென்திசை பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DM294L3P

சங்க இலக்கியமான பரிபாடலில் பெயர்சுட்டிச் சொல்லப்படும் திருமால் திருப்பதி - அழகர் கோயில். இதை சிலப்பதிகாரம் திருமால் குன்றம் என்கிறது. இக்கோயிலின் வரலாற்றைத் திருப்பிப் பார்ப்பதன் மூலம் ஆன்மீக எல்லையைதாண்டி சமூக தளத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறார் தொ.ப. பண்பாட்டு ஆய்வுகளையும், கோயிலுடன் தொடர்பு கொண்ட மக்களின் சமூக வரையறைகளாகவும் நெறிப்படுத்துகிறார். சமூக வரலாறு அழகர் மூலம் மேலும் விரிவுபடுகிறது.

Interested in this book? Check Price on Amazon
Quotes

திருக்கானப்போர் இன்று சிவகங்கை வட்டத்தில் காளையார் கோயில் என்ற பெயரோடு விளங்குகிறது.

கருப்பசாமி சன்னிதியில், வழக்குகளில் சத்தியப் பிரமாணம் செய்வது வழக்கமாகவுள்ளது. இதன்படிப் பிரமாணம் செய்பவர் சத்திய வாக்கை ‘வாங்கிய பணத்தை நான் கொடுத்துவிட்டேன்’, ‘திருடப்பட்ட பொருளை நான் எடுக்கவில்லை’ என்பதுபோல சொல்லி, சந்தனக்கதவு வழியாக உள்நுழைந்து, பதினெட்டுப் படிகளையும் தாண்டிக் கோபுரவாசற் கதவு வழியாக வெளிவருதல் வேண்டும். ‘இத்தெய்வத்தின் முன் ஒருவரும் பொய் சொல்லவும் துணிய மட்டார்கள். ஆகையால் பெரிய வழக்குகள், வியாஜ்ஜியங்கள் முதலியவற்றில் உண்மையறிய, வியாஜ்ஜியக்காரர்களைக் கோர்ட்டார் கடைசி நேரத்தில்கூட இக்கருப்பணசாமி சன்னிதியில் பிரமாணம் செய்யச்சொல்லி உண்மையைக் கண்டுபிடித்துக்கொள்வார்கள்’ என்று கோயில் வரலாறு விளக்குகிறது.

தொழில், சுதந்திர அட்டவணையும், கோயில் வரலாறும் குறிப்பிடாத ஒரு திருவிழா ஆடி அமாவாசையாகும். பெருவாரியான கிராமத்து மக்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்வதை ஆய்வாளர் மூன்றாண்டுகளாகத் (1977, 78, 79) தொடர்ந்து காண முடிந்தது.

இத்திருவிழா இக்கோயில் இறைவனுக்காக எடுக்கப்படும் திருவிழா அன்று; கோயில் பிராமணப் பணியாளர்க்கும் இதில் தொடர்பில்லை. இது கோயில் கோபுரவாசலில் உள்ள பதினெட்டாம்படிக் கருப்பசாமிக்குரிய திருவிழாவாகும். கருப்பசாமியாகக் கருதப்பெறும் இரட்டைக் கதவுக்கு இந்நாளில் சந்தனம் பூசப்பெறுகிறது. இச்சன்னிதியில் கருப்பசாமிக்குச் சிலையுருவம் இல்லை. சந்தனம் பூசப்பெறும் இக்கதவிலேயே கருப்பசாமி உறைவதாகக் கருதி மக்கள் வணங்குகின்றனர். இந்தக் கதவுகளை நாட்டி வைத்ததாகக் கருதப்படும் குடும்பத்தினர் ஆடி அமாவாசையன்று சந்தனக்குடம் கொண்டுவந்து இக்கதவுகளுக்குச் சந்தனம் பூசுகின்றனர். எனவே இத்திருவிழா இக்கோயில் இறைவனான அழகரின் திருவிழாவாக அல்லாமல், கருப்பசாமியின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. சந்தனம் பூசும் உரிமையுடைய குடும்பத்தினர் கோனார் சாதியினராவர். இத்திருவிழா கோயில் ஆட்சி மரபில் சேரவில்லை. எனவே மேற்குறித்த இரு நூல்களும் இதனைக் குறிக்கவில்லை.

More Quotes...
Shelves
Anthropology மானுடவியல்

More like this


அறியப்படாத தமிழகம்

தமிழக பண்பாட்டின் அன்றாட வாழ்வியலில் பொதிந்திருக்கும் வரலாற்றுத் தடங்களை வெளிக்கொணரும் கட்டுரைத் தொகுப்பு இது. உப்பு, எண்ணெய், தேங்காய், உடை, உணவு, உறவுமுறைகள், வழிபாட்டு…

4.41/5 · 600+ ratings

பண்பாட்டு அசைவுகள்

தமிழகத்தின் நிலவியல், மக்களின் வாழ்வியல் மற்றும் தொன்மையான மரபுகளை மானுடவியல் நோக்கில் ஆராயும் மிக முக்கியமான நூல் இது. 'அறியப்படாத தமிழகம்' உள்ளிட்ட முந்தைய படைப்புகளி…

4.41/5 · 200+ ratings

தெய்வம் என்பதோர்...

ஒரு கிராமத்தின் எல்லையில் நிற்கும் காவல் தெய்வம், வயல்வெளியில் அறுவடைக் காலத்தில் விழிப்புடன் காக்கும் அம்மன், கண்மாய்க் கரையில் தூங்காமல் நிற்கும் ஐயனார் — இவர்கள் யார்? ஒரு பெர…

4.37/5 · 100+ ratings

தெய்வங்களும் சமூக மரபுகளும்

தோன்றிய காலம் தொட்டே மனித நம்பிக்கைகளோடு பிணைந்திருந்த தெய்வங்கள், காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தனித்தனி வழிபாட்டு மரபுகளை உருவாக்கி…

4.3/5 · 33 ratings
4.8/5

உரைகல்

பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்றிய கட்டுரை, நமது பண்பாட்டில் ம…

4.32/5 · 19 ratings

சமயங்களின் அரசியல்

தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று... சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவ…

4.62/5 · 100+ ratings

மரபும் புதுமையும்

நிறுவனமயமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கிக் கெட்டிதட்டிப்போன ‘மரபு’களுக்கு மாறாக, நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பை அகழ்ந்து கூட்டுவனவே தொ.ப.வ…

4.26/5 · 77 ratings

மக்களின் தெய்வங்கள்

Kamal recommends in the Coffee with Anu - Deewali 2010

4.01/5 · 74 ratings

இந்து தேசியம்

இந்து தேசியம் என்னும் இந்தப் புத்தகம் ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு. முதல் கட்டுரையில் 'இந்து' என்ற சொல் எப்படிப் பிறந்தது என்பதை ஆராய்ந்து, வெள்ளைக்காரர்கள் பிற மதத்தவர்களைக் குற…

4.55/5 · 56 ratings

தொ.பரமசிவன் நேர்காணல்கள்

முன்னர் 'செவ்வி' என்ற பெயரில் வெளிவந்த தொகுப்பில் இடம் பெற்றிருந்த நேர்காணல்களுடன் விகடன்,தடம், தீராநதி ,தமிழ் ஒப்புரவு ,கூட்டான்சோறு இதழ்களில் வெளியானவற்றையும் இணைத்து வி…

4.61/5 · 33 ratings

இதுவே சனநாயகம்

அறிஞர் தொ. பரமசிவன் ஒரு பண்பாட்டுத் தொல்லியலாளர். வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம்…

3.97/5 · 35 ratings