Quotes from கொற்றவை

பெருநூல்கள் என்றுமே ஏமாற்றுபவை. அவற்றின் சொல்லாயிரங்களில் மெய்ம்மை ஒரே ஒரு சொல்லில்தான் உள்ளது. மீதி அத்தனை சொற்களும் அந்த மெய்ம்மையை மறைப்பதற்கு உரியவையே. அச்சொல்லைக் கண்டறியாத வரை சொற்களின் வெளியில் திசையிழந்து அலைய வேண்டும்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'கொற்றவை'
இறப்போ அழிவோ பிறப்போ சிறப்போ கலையில் நிகழ்கையில் அதற்குள் ஒளிந்திருக்கும் அழியா உண்மையையே நம் உள்ளம் அறிகிறது. அழியாதது ஒன்றே. அதையே அறம் என்றனர் நூலோர்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'கொற்றவை'
அழியாப் பெருந்துயரம் வாழ்வெடுத்து வாழாதுபோனவளின் துயரமே.
ஜெயமோகன் (Jeyamohan) — 'கொற்றவை'