Quotes from ஊழல் - உளவு - அரசியல்
அரசியல்வாதிகளைவிட மிக மிக ஆபத்தானவர்கள் அதிகாரிகள் என்பதையே அது உணர்த்தியது. அரசியல்வாதிகளாவது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, ஏழைகளின் குடிசைகளுக்கும், தலித்துகளின் குடியிருப்புக்கும் சென்று, அவர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.அதற்குப் பின் ஏறி மிதிப்பார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் அதிகாரிகளுக்கு இது போன்ற எந்தச் சிக்கலும் இல்லை. பாம்பு சட்டையை உரிப்பது போல, ஒவ்வொரு ஆட்சி மாற்றம் நடந்த பிறகும் ஆட்சியாளர்களின் கால்களில் விழுந்து மன்றாடி, நல்ல பதவிகளை வாங்கிக்கொண்டு, தாங்களும் கொள்ளையடித்து, தங்களைப் போன்ற சக கொள்ளைக்கார அதிகாரிகளையும் காப்பாற்றி, கூட்டுக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலை இன்று வரை மாறவேயில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
சவுக்கு சங்கர் (Savukku Shankar) — 'ஊழல் - உளவு - அரசியல்'