Quotes from ரப்பர்

ஆகாயத்துப் பறவைகள் விதைப்பதில்லை, அறுவடை செய்வதில்லை!
ஜெயமோகன் (Jeyamohan) — 'ரப்பர்'
சில சமயம் இரவில் கண் விழிக்கும்போது, அதிசயமாய் போதை தெளிந்து மிகத் துல்லியமான ஒரு மனநிலை ஏற்படும். முன்னும் பின்னும் மனம் பெண்டுலம் போல அசையும். அந்தக் கணம் வரை செய்து வந்தவை முழுக்க எப்பேற்பட்ட அற்பத்தனங்கள் என்று மனம் திடுக்கிடும். அந்த அற்பத்தனங்களுக்காய் உள்ளூரத் தன் மனம் வெட்கிச் சுருண்டு கொள்வது தெளிவாய்த் தெரியும். அவற்றுடன் தனக்கு சம்பந்தமில்லை என்று எண்ணிக் கொள்வதன் அபத்தம் உறைக்கும். எவ்வாறு ஒருவரின் செயல்களுடன் அவனுக்கு சம்பந்தமில்லாமல் ஆக இயலும்? அவன் செயல்கள்தான் அவன்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'ரப்பர்'
நான் காத்திருப்பவன். காத்திருப்பவன் பயணத்தை எப்படி முடித்துக்கொள்வான்? ஆம், வாழ்பவர்கள் எல்லாரும் காத்திருப்பவர்கள்தாம். காத்திருக்க ஏதுமற்ற கணம் மரணம். எதுவரை காத்திருப்பு? அடையும் வரை, அடைந்த பின் இன்னொன்று.
ஜெயமோகன் (Jeyamohan) — 'ரப்பர்'